அகிஸ் ஏவுகணை தற்காப்பு அமைப்புமுறையை நிறுவுவதை ஜப்பான் ஏற்றுக்கொண்டால், அது பசிபிக் பெருங்கடலின் வட பகுதியின் நெடுநோக்கு நிதானத்திற்கு பாதிப்புக் கொண்டு வரும் என்று ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சக்கரோவா 24ஆம் நாள் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்கா ஏவுகணை தற்காப்பு அமைப்புமுறை ஒன்றை ஜப்பானில் நிறுவுவது குறித்த விவாதத்தில் ரஷியா தொடர்ந்து மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஏவுகணை தற்காப்பு அமைப்பு முறையை நிறுவுவதில் ஜப்பான் விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.