• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வடகொரியாவின் ஏவுகணை சேதனையில் அமெரிக்கா பிரான்ஸ் மற்றும் ரஷியாவின் கவனம்
  2017-08-27 16:44:56  cri எழுத்தின் அளவு:  A A A   
வடகொரியா 26ஆம் நாள் காலை பல ஏவுகணைகளை சோதித்துள்ளது. இதில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷியா ஆகிய நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.

வடகொரியா ஜப்பான் கடல்பரப்பின் மீது நடத்தும் ஏவுகணை சோதனைக்கு பிரான்ஸ் உறுதியான கண்டனம் தெரிவித்துள்ளது. இச்செயல் ஐ.நா பாதுகாப்பவையின் தீர்மானத்துக்குப் புறம்பானது, இது பிரதேச மற்றும் சர்வதேச பாதுகாப்பை அச்சுறுத்தியுள்ளது என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

ரஷியா நாடாளுமன்ற மேலவையின் சர்வதேச அலுவல் கமிட்டித் தலைவர் கொச்சேவ் பேசுகையில் வடகொரியாவின் இச்செயல், கொரிய தீபகற்பப் பிரச்சினை தீர்வில் பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது. அது மட்டுமல்லாமல், வடகொரியாவும் இச்செயலால் இன்னலில் சிக்கிக்கொள்ளக் கூடும் என்று குறிப்பிட்டார். (கலைமகள்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040