மே முதல் நாள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்கவுள்ளது. 189 நாடுகளும் 57 சர்வதேச அமைப்புகளும் இதில் கலந்து கொள்ளும் என்று இப்பொருட்காட்சியின் அலுவல் ஒருங்கிணைப்பு ஆணையத்தின் தலைவர் HONG HAO 28ம் நாள் தெரிவித்தார். இதில் கலந்து கொள்ளும் தரப்புகளின் எண்ணிக்கையும் அரங்குகளின் பரப்பும் உலகப் பொருட்காட்சியின் வரலாற்றில் மிக உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ஜெர்மன் அரங்கு, ஆப்பிரிக்கக் கூட்டு அரங்கு உலகச் செஞ்சிலுவை சங்க அரங்கு முதலியவற்றின் கட்டுமானமும், அலங்கரிப்பும் நிறைவேற்றப்பட்டுள்ளன. துருக்கி, ரஷியா, தென் கொரியா, ஜப்பான் முதலிய நாடுகளின் கலைக் குழுக்கள் ஷாங்காய் வந்தடைந்துள்ளன. தவிர, பல்வேறு நாடுகளின் தேசிய சின்னங்கள் படிப்படியாக அரங்குகளில் வைக்கப்பட்டு வருகின்றன.
உலகக் கண்காட்சி ஆணையத்தின் தலைமைச் செயலாளர் Vicente Gonzales Loscertales ஷாங்காய் உலகப்பொருட்காட்சியின் ஏற்பாட்டுப் பணிகளுக்கு மனநிறைவு தெரிவித்தார். முன்பு மதிப்பிட்டதை விட இது மிகவும் சிறப்பாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.