சீன மக்கள் விடுதலை படை நிறுவப்பட்ட 95ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் ஜுலை 31ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் விருந்து அளித்தது.
லிதுவானியாவின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறையின் துணை அமைச்சர் அக்னே வைசியுகேவிசியூட் மீது தடை நடவடிக்கையை மேற்கொள்வதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.71 விழுக்காடாக குறைந்துள்ளதாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வளர்ச்சி முன்னெடுப்பு குறித்து பன்னாட்டு சிவில் சமூக ஒற்றுமை மாநாடு சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டலுடன், சர்வதேச பரிமாற்றத்துக்கான சீன அரசு சாரா அமைப்புகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஆகஸ்ட் 12ஆம் நாள் காணொளி வழியாகவும் நேரடியாகவும் நடைபெற்றது.
தனியார் மின்னாற்றல் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சிலோன் பெட்ரோலியம் நிறுவனத்திலிருந்து, அரசு சார் மின்னாற்றல் உற்பத்தி நிறுவனமான சிலோன் மின்சார வாரியம் 13790 கோடி ரூபாய் கடன் வாங்கியது
கடநத் ஜுலை 29ஆம் நாளில் இருந்த 838கோடியே 54இலட்சம் அமெரிக்க டாலரை விட, 55கோடி 50இலட்சம் அமெரிக்க டாலர் குறைந்து, 2019ஆம் ஆண்டு அக்டோபருக்குப் பிறகு மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
குகே மன்னராட்சி வரலாற்று நினைவுச் சின்னம், திபெத்தின் அலி பிரதேசத்தில் அமைந்துள்ளது. இது 300க்கும் மேற்பட்ட வீடுகள், 300க்கும் மேற்பட்ட குகைகள், 2 சுரங்கப் பாதைகள் முதலியவற்றைக் கொண்டுள்ளது. திபெத் வரலாற்றை ஆய்வு செய்வதற்கு மட்டுமல்ல, பண்டைய சீனக் கட்டிட ஆய்வுக்கும் முக்கியமான தரவுகளை வழங்குகிறது.
கோடைகாத்தில் அதிக வெப்பநிலை தொடர்ந்து, ராட்சத பாண்டாகள் மிகவும் சூடாக இருக்கின்றன. அவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்து, வெப்பத்திலிருந்து தப்பிக்க பெரும்பாலான நேரம் அரங்கிற்குள் இருக்கின்றன.
தைவான் நீரிணை நிலைமை பற்றி 3 ஆபத்தான வளர்ச்சிப் போக்குகளின் மீது விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ அண்மையில் எச்சரித்துள்ளார்.
சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சிஜிடிஎன் சிந்தனைக் குழு மற்றும் சீனாவின் ரென்மின் பல்கலைக்கழகத்தின் தேசிய ஆளுமை மற்றும் பொதுக் கருத்து சூழலியல் நிறுவனம் ஆகியவை, “புதிய யுகத்தில் சீனா” என்ற உலகளாவிய பொது மக்கள் கருத்துக் கணிப்பை நடத்தின.
2022ம் ஆண்டு உலக 5 ஜி மாநாடு சீனாவின் ஹால்பின் நகரில் 10ஆம் நாள் துவங்கியது. சீன அரசவை உறுப்பினர் வாங் யொங் அதன் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார்.
இலங்கையில் குரங்கு அம்மை நோய் தொற்று பரவியுள்ளதா இல்லையா என்பதைக் கண்டறியும் வகையில் சுகாதார பணியாளர்கள் பொது மக்களுக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்யத் துவங்கியுள்ளனர்.
சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 10ஆம் நாள் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள நேபாள வெளியுறவு அமைச்சர் நரயன் காட்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஐந்து கண்டங்களில் உள்ள 22 நாடுகளில் மேற்கொண்ட ஒரு உலகளாவிய பொது மக்கள் கருத்து கணிப்பின் படி, கடந்த பத்து ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி சாதனைகளை பெரும்பாலான வெளிநாட்டு மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். இதில் சீனப் பொருளாதாரம், உலகப் பொருளதாரத்தின் இயந்திரமாக மாறி, உலகப் பொருளாதாரத்துக்கு நம்பிக்கையையும் உயிராற்றலையும் ஊட்டுகின்றது என்று 78.34 விழுக்காட்டுப் பேர் கருத்து தெரிவித்தனர்.
புதைபடிவ எரிபொருட்களின் நுகர்வை குறைப்பதற்காக இலங்கையில் மின்சார முச்சக்கர வாகனங்களை பதிவு செய்வதற்கு இலங்கையின் அமைச்சரவை செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது.
கடந்த வாரம், இந்திய அரசாங்கம் 72 ஜிகாஹெர்ட்ஸ், 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் விடுவதாக அறிவித்தது. இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் வெளியிடுவதற்கான பந்தயம் தொடங்கியுள்ளது.
ஆக்ஸ்ட் 10ஆம் நாள், சீன அரசவயைின் தைவான் விவகார அலுவலகமும், தகவல் தொடர்பு பணியகமும் தைவான் பிரச்சினை மற்றும் புதிய யுகத்தில் சீனாவின் ஒன்றிணைப்பு என்ற வெள்ளையறிக்கையை வெளியிட்டது.
2022ஆம் ஆண்டு ஜுன் வரை, சீனாவில் 54 அணு மின்னாக்கிகள் இயங்கி வருகின்றன. 23 அணு மின்னாக்கிகள் கட்டியமைக்கப்பட்டு வருகின்றன. இவை, உலகளவில் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளன.
ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி சாங் ஜுன் 9ஆம் நாள் நடைபெற்ற பயங்கரவாத செயல்களால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் பற்றிய ஐ.நா பாதுகாப்பவையின் கூட்டத்தில் உரை நிகழ்த்தி, பயங்கரவாதத்தை அழிப்பது பற்றி சீனாவின் கருத்துகளை விளக்கினார்.
ஆகஸ்டு 9ஆம் நாள், ஜப்பானின் செண்டாய் நகரில் கோடை வெயில் காலத்தில் உள்ளூர் விலங்கியல் பூங்காயில் உள்ள அணில்கள், பனிக்கட்டிக்கு அருகில் உணவுப்பொருட்களைச் சாப்பிடுகின்றன.
ஃபுளோரிடா மாநிலத்தின் பால்ம் கடற்கரையில் உள்ள தனது வீட்டில் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் முன்னறிவிப்பு இன்றி சோதனை மேற்கொண்டனர் என்று முன்னாள் அரசுத் தலைவர் டிரம்ப் 8ஆம் நாள் தெரிவித்தார்.
55 இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் இலங்கையின் தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு அல்லது QR குறியீட்டு முறைமையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர திங்கட்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகியவை மேற்கொண்டுள்ள அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பற்றிய ஒத்துழைப்பைச் சீனா உறுதியாக எதிர்க்கிறது என்று 8ஆம் நாள் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் 10ஆவது பரிசீலனை மாநாட்டில் படைக்கலக்குறைப்பு விவகாரங்களுக்கான சீனத் தூதர் லி சோ சிறப்புரையில் கூறினார்.
பெலோசி, அமெரிக்க அரசின் 3ஆவது உயர் தலைவராவார். அவரது தைவான் பயணத்துக்கு அனுமதி கொடுத்த அமெரிக்க அரசு, எச்சரிக்கை கோட்டைத் தாண்டி, ஐ.நாவின் தீர்மானம் மட்டுமல்ல, அமெரிக்கா தானே வழங்கிய வாக்குறுதியையும் மீறியுள்ளது என்றும் கால்னி தெரிவித்தார்.
அண்மையில், இரவுப் பொருளாதாரம் மற்றும் வெளிப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சி ஆன் நகரில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளன. அந்த நடவடிக்கைகள், நுகர்வை தூண்டி, கிராமப்புற மறுமலர்ச்சியை முன்னேற்றியுள்ளன.
2021 செப்டம்பரில் சீனா, உலக வளர்ச்சி முன்னெடுப்பை முன்வைத்ததைத் தொடர்ந்து, இந்த முன்னெடுப்புக்கு சர்வதேச சமூகத்தின் ஆக்கப்பூர்வமான வரவேற்பும் ஆதரவும் கிடைத்துள்ளன.
சி ஹு ஏரியின் இயற்கைக்காட்சி எனும் ஓவியம் சீனாவின் புகழ்பெற்ற ஓவியர் ட்சென் ஜியா லீங் வரைந்ததாகும். மையால் வரையும் சீன ஓவியக் கலையின் தனிச்சிறப்பை இந்த ஓவியத்திலிருந்து அறிந்து கொள்ள முடியும்.
கம்போடியாவின் புனோம் பெனில் நடைபெற்ற 29ஆவது ஆசியான் பிராந்திய மன்றத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகஸ்ட் 5ஆம் நாள் கலந்து கொண்டார்.
சர்வதேச சட்டத்தைப் பின்பற்றி, பல்வேறு நாடுகளின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணிக்காக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டோனி பிளிங்கன் தெரிவித்ததற்கு வாங் யீ பதிலளிக்கையில்
பாகிஸ்தானின் திட்டமிடல், மேம்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகளுக்கான அமைச்சர் அஹ்சன் இக்பால், நாட்டின் பொருளாதாரம் மீட்பு நிலையில் இருப்பதாக கூறினார். மேலும், நீண்ட கால பொருளாதார இலக்குகளை அடைவதற்காக அரசியல் நிலைத்தன்மை மற்றும் கொள்கையின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் வியாழக்கிழமை வலியுறுத்தினார்.
இந்தியாவின் மத்திய வங்கி வெள்ளிக்கிழமை ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகளாக ஆக்கி, 5.4 விழுக்காடாக உயர்த்தியுள்ளது. இது சந்தையின் எதிர்பார்ப்பன 25-35 அடிப்படை புள்ளிகளை விட சற்று அதிகமாகும்.
சீன மக்கள் குடியரசின் தொடர்புடைய சட்டத்தின்படி, பெலோசி மற்றும் அவரது உறவினர்களுக்குத் தடை விதிக்க சீனா திட்டமிட்டுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 5ஆம் நாள் அறிவித்தார்.
சீன வெளியுறவுத் துணை அமைச்சர் டெங்லீ சீனாவுக்கான தொடர்புடைய ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதர்களை அவசரமாக வரவழைத்து சந்தித்து, கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
சிங்காய்-திபெத் பீடபூமியில் நடத்தப்பட்ட 2ஆவது பன்னோக்கு அறிவியல் ஆய்வு, நீர் வளம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த சில சாதனைகளைப் பெற்றுள்ளது.
சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, ஆகஸ்ட் 4ஆம் நாள், கம்போடியாவின் தலைநகர் பினோம்பெனில் நடைபெற்ற ஆசியான் சீனா ஜப்பான் மற்றும் தென்கொரியாவின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அமெரிக்க சிஎன்என் செய்தியின்படி, அமெரிக்காவில் குரங்கம்மைக்கான தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதால், பொது மக்கள் நீண்டகாலம் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்கும் வகையில் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை நிறுவ, தன்னுடன் இணையுமாறு அரசியல் கட்சிகளுக்கு இலங்கை அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்கே புதன்கிழமை வலியுறுத்தியுள்ளார்.
சீனாவின் இறையாண்மையை ஊறுபடுத்திய அமெரிக்காவின் ஆத்திரமூட்டல் செயல் குறித்து சீனாவின் நிலைப்பாட்டைச் சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ மேலும் விளக்கினார்.
படைப்பிரிவுகளின் கூட்டு போரியக்கத் திறனைச் சோதிக்கும் விதம், தைவான் தீவின் அருகிலுள்ள கடல் மற்றும் வான் பரப்பில் முழு நாள் இராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பென் ஜியுசீ என்ற சீன இளைஞருக்கு விளையாட்டு மிக பிடிக்கும். இரு ஆண்டுகளுக்கு முன், மூங்கில் கம்பத்தைப் பயன்படுத்தி, ஆற்றில் நடந்து செல்ல பயிற்சி தொடங்கினார்.
ஐ.நா. பொது பேரவையின் 2758ஆவது தீர்மானத்தைப் பின்பற்ற வேண்டும் என்று ஆகஸ்டு 2ஆம் நாள் ஐ.நா. தலைமைச் செயலாளரின் செய்தித்தொடர்பாளர் டுஜாரிக், அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவர் பெலோசியின் தைவான் பயணம் குறித்து பேசுகையில் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவர் நான்சி பெலோசி ஜுலை 2ஆம் நாள் சீனாவின் கடும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், தைவான் பிரதேசத்தை அடைந்து பயணம் மேற்கொள்கிறார்.
அமெரிக்க மக்களவைத் தலைவர் பெலோசி சீனாவின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், தைவானில் மேற்கொண்ட பயணத்துக்கு சீனப் பாதுகாப்பமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தைவான் பணியகமும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் வெளிவிவகார ஆணையமும் 2ஆம் நாளிரவு பெலோசியின் தைவான் பயணத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆகஸ்டு 2ஆம் நாள் சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்து கூறுகையில் தைவான் பிரச்சினை குறித்து சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்தார்.
சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஆகஸ்டு 3ஆம் நாள் முதல் 5ஆம் நாள் வரை, கம்போடியாவின் புனோம் பென் நகரில் நடைபெறவுள்ள சீனா-ஆசியானின் (10+1) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், ஆசியான் மற்றும் சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் (10+3) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் மற்றும் ஆசியான் பிரதேச மன்றத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.
சீன மக்கள் குடியரசின் கடல்சார் பாதுகாப்பு நிர்வாகம் வெளியிட்ட செய்தியின் படி, ஆகஸ்ட் 2 ஆம் நாள் விடியற்காலை 12 மணி முதல் ஆகஸ்ட் 6ஆம் நாள் நள்ளிரவு 12 மணி வரை தென் சீனக் கடலின் சில நீர்நிலைகளில் இராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
2013ம் ஆண்டு ஸ்னோடன் வெளியிட்ட இரகசிய ஆவணத்தில், அமெரிக்கத் தேசியப் பாதுகாப்புப் பணியகம், 35 வெளிநாட்டுத் தலைவர்களின் தொலைப்பேசி தொடர்பை ஒற்றுக் கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானின் காபூலில் அமெரிக்கா அல்கொய்தா அமைப்பைக் குறிவைத்து ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றை நடத்தி, இவ்வமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரியைக் கொன்றது.
2022ஆம் ஆண்டு சீனச் சர்வதேசச் சேவை மற்றும் வர்த்தகக் கண்காட்சி ஆகஸ்டு 31ஆம் நாள் முதல் செப்டம்பர் 5ஆம் நாள் வரை பெய்ஜிங் தேசிய மாநாட்டு மையம் மற்றும் ஷோகாங் பூங்காவில் நடைபெறவுள்ளது.
பெலோசியின் தைவான் பயணம் குறித்து, சீனா அமெரிக்காவுக்கு பல முறை கடும் எதிர்ப்பு மற்றும் கவனத்தைத் தெரிவித்துள்ளது. அவர் தைவானுக்குச் சென்றால், கடும் பின்விளைவு ஏற்படும்
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா நாடு,பாகிஸ்தானிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் முதல் குழுவை அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளதாக, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
ஆப்கானிஸ்தானில் சீன அரசின் உதவியோடு கட்டியமைக்கப்பட்ட காபுல் பல்கலைக்கழகத்தின் பன்நோக்கு கல்வி கட்டிடம் மற்றும் மண்டபத்தின் திறப்பு விழா ஜுலை 31ஆம் நாள் காபுல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
2022ஆம் ஆண்டு சர்வதேச நுகர்வு பருவம் மற்றும் ஷாங்காய் பொருள் வாங்குதல் விழாவின் துவக்க நிகழ்ச்சி ஜுலை 31ஆம் நாளிரவு ஷாங்காய் கண்காட்சி மையத்தில் நடைபெற்றன.
இந்தியாவில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கண்டறியப்பட்ட முதலாவது குரங்கம்மை நோயாலி குணமடைந்துளார். சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எதிர்மறை முடிவு வந்துள்ளது என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.
பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கும் வீரர் சங்கேத் சர்கார் ஆடவருக்கான 55 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனைத்தொடர்ந்து இந்தியா தனது முதல் பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது.
2022ஆம் ஆண்டு சீன கணக்கீட்டு திறன் மாநாடு 30ஆம் நாள் ஜினன் நகரில் துவங்கியது. தற்போது சீனாவில் உலகளவில் மிகப்பெரிய மற்றும் முன்னேறிய இணைய உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கத் தரப்பின் கோரிக்கையின்படி, ரஷிய வெளியுறவு அமைச்சர் லாப்ரோப், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கனுடன் 29ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்பு மேற்கொண்டார்
சீன சர்வதேச வர்த்தக முன்னேற்றச் சங்கம் 29ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீனாவில் அந்நிய முதலீட்டின் வணிகச் சூழல் குறித்த 2022ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டது.
மேலும் பெருமளவில் மேலதிக தாக்கமுள்ள சர்வதேசக் கூட்டம் நடத்தி, அதில் கலந்து கொள்ள, ஐ.நா பாதுகாப்பவையின் உறுப்பு நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு அமைதி போக்குடன் தொடர்புடைய அனைத்து தரப்புகளையும் அழைக்க வேண்டும் என்று ஐ.நாவுக்கான சீன நிரந்தரத் துணை பிரதிநிதி தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்கு பிறகு, ரஷியா, சர்வதேச விண்வெளி நிலையத் திட்டத்திலிருந்து விலகி, சுற்றுப்பாதையில் சொந்தமான சேவை நிலையத்தை உருவாக்கவுள்ளது என்று ரஷிய தேசிய விண்வெளி நிறுவனத்தின் தலைமை இயக்குநராக பதவி ஏற்ற பாவ்லிசோஃப் 26ஆம் நாள் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் 26ஆம் நாள் அரசியல் உடன்படிக்கை ஒன்றை எட்டி, ஐரோப்பிய ஒன்றியத்தின் எரியாற்றல் வினியோகப் பாதுகாப்பை உயர்த்தும் வகையில், இவ்வாண்டின் குளிர்காலத்தில் இயற்கை எரிவாயுத் தேவையை 15 விழுக்காடு குறைக்கத் தன்னார்வமாக நடவடிக்கை மேற்கொள்ள உடன்பட்டுள்ளன.
சீனத் தூதாண்மை அதிகாரி லீ ச்சுன்ஹுவா, பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐ.நா துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்று ஐ.நா பொதுச் செயலாளர் குட்ரேஸ் ஜுலை 25ஆம் நாள் அறிவித்தார்.
ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ஆஸ்பென் பாதுகாப்பு கருத்தரங்கு, அண்மையில், அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் ஆஸ்பென் நகரில் நடைபெற்றது. சீனாவுக்கு எதிரான தப்பு எண்ணங்கள் ஏன் அவதூறுகள் கூட இக்கருத்தரங்கில் வெளியிடப்பட்டன.
சீனாவில் மக்களின் பாதுகாப்பு உணர்வு பற்றிய மதிப்பீட்டு விகிதம் 2012ஆம் ஆண்டில் 87.55 விழுக்காட்டில் இருந்து 2021ஆம் ஆண்டில் 98.62 விழுக்காடாக உயர்ந்துள்ளதோடு, கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ச்சியாக உயர் நிலையில் இருந்து வருகிறது
இலங்கையில் எரிபொருள் விநியோகத்துக்கான க்யூஆர் குறியீடு நடைமுறையை செயல்படுத்துவது தாமதமாகும் என்று அந்நாட்டு தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
கொவைட்-19 தொற்றுநோய் பரவலால் முடங்கிப்போன நேபாளத்தின் சுற்றுலாத் துறையை மீட்கும் விதம் புதிய செயல்திட்டத்தை அந்நாட்டு அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. இச்செயல்திட்டத்தில், 2023 முதல் 2033 வரையிலான நேபாளத்தில் 10 ஆண்டு பயணம் உள்ளிட்ட புதிய நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
சீனாவின் தெற்கிலிருந்து வடக்கிற்கு நீர் வளத்தை எடுத்துச் செல்லும் திட்டப்பணி குழுமத்திலிருந்து கிடைத்த தகவலின் படி, ஜுலை 22ஆம் நாள் வரை, இத்திட்டப்பணியைச் சேர்ந்த தாவ் சா கால்வாய் மூலம் முதன்மை கால்வாய்க்கு 5000 கோடி கனமீட்டர் நீர் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய துறைகளில் இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக பங்கெடுப்பதற்கு பல்வேறு நாடுகள் பெரிதும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் விபத்தில் மாசுபட்ட நீரை கடற்பரப்பில் வெளியேற்றுவது தொடர்பாக டோக்கியோ மின்சாரத் தொழில் நிறுவனம் வகுத்த திட்டத்தை, ஜப்பானிய அணு ஆற்றல் திட்ட ஆணையம் ஜுலை 22ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.
அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனுக்கு கொவிட்-19 நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், நோய் தொற்று அறிகுறிகள் குறைவாக உள்ளது என்றும் வெள்ளை மாளிகை 21ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திரௌபதி முர்மு 25ஆம் நாள் நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்கவுள்ளார். இந்திய வரலாற்றில் பழங்குடியினத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவராகவும் 2ஆவது பெண் குடியரசுத் தலைவராகவும் அவர் திகழ்கின்றார்.
சீனாவின் சின்ஜியாங்கிலுள்ள சாய்ராம் ஏரி, "அட்லாண்டிக் பெருங்கடலின் கடைசி கண்ணீர்" என அழைக்கப்படுகின்றது. 14ஆவது சாய்ராம் ஏரி சாலை மிதிவண்டி போட்டி ஜூலை 20ஆம் நாள் முதல் 26ஆம் நாள் வரை இங்கு நடைபெறுகின்றது.
கோடை விடுமுறை காலத்தில், சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த குழந்தைகள், பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகளில் கலந்து கொண்டு கோடை விடுமுறையை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை தலைவர் பெலோசி, சீனாவின் தைவானில் மேற்கொள்ளக் கூடிய பயணம் குறித்து, அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் கூறுகையில்,இப்பயணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றார்.
ஆசிய-பசிபிக் பிரதேசத்திலுள்ள வளரும் பொருளாதாரச் சமூகங்களின் 2022ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி கணிப்பு 5.2 விழுக்காட்டிலிருந்து 4.6 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பைக் கண்டறிய உதவும் வகையில், சீன ஊடகக் குழுமம்,சீன அரசவை அரசுச் சொத்துக்கள் கண்காணிப்பு மற்றும் நிர்வாக ஆணையம், தேசிய வளர்ச்சி மற்றும் முதலீட்டு குழு நிறுவனத்தின் மனித வளச் சேவை நிறுவனம் ஆகியவை தேசிய வேலைவாய்ப்பு நடவடிக்கை தளத்தைக் கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன.
2022ஆம் ஆண்டின் ஜூலை திங்கள் சியானா கல்லூரியுடன் இணைந்து தி நியூயார்க் டைம்ஸ் நடத்திய பொது கருத்துக் கணிப்பில், அமெரிக்காவின் அரசு அமைப்பு முறை தோல்வியடைந்து விட்டது என்று பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோடை விடுமுறையில் குழந்தைகள் கண்காட்சியைக் கண்டு ரசிப்பது, நாடகம் மற்றும் பொருள் சாரா மரபு செல்வங்களைக் கற்றுக்கொள்வது முதலியவை மூலம், பாரம்பரிய பண்பாட்டின் ஈர்ப்பாற்றலை உணர்ந்து மகிழ்கின்றனர்.
2022ஆம் ஆண்டு சீன சர்வதேச நுகர்வு பொருட்காட்சியின் நிலைமை பற்றி சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் 20ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஈரான் அரசுத் தலைவர் ரைசி, ரஷிய அரசுத் தலைவர் புதின், துருக்கி அரசுத் தலைவர் எர்டோகன் ஆகியோர் 19ஆம் நாளிரவு ஈரானின் தலைநகரான தெஹரானில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இவை, கைவினைப் பொருட்கள் மட்டுமல்ல, பணியாரமும் ஆகும். சுவையான பணியாரச் சமையலை, சீனப் பாரம்பரிய பண்பாட்டுடன் இணைத்தால், சுவையான வாசனையுடன் அழகிய தோற்றமும், கிடைக்கும். இவற்றை ருசிக்க ஆசை உண்டா?
கோடைக்காலத்தில் சின்ச்சியாங்கின் காட்சி மிகவும் அழகாக இருக்கும். உண்மையிலே ஆண்டு முழுவதும் இப்பிரதேசத்தில் எழில் மிக்க இயற்கை காட்சியைக் கண்டு ரசிக்க முடியும்!
உலகின் முக்கியமான வேளாண்மை பண்பாட்டு மரபுச்செல்வங்களின் மாநாடு ஜுலை 18ஆம் நாள் சீனாவின் சேஜியாங் மாநிலத்தில் துவங்கியது. துணைத் தலைமை அமைச்சர் ஹு ச்சுன் ஹுவா துவக்க விழாவில் அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் வாழ்த்து கடிதத்தை வாசித்தார்.
சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ பிரான்ஸ் அரசுத் தலைவரின் வெளிவிவகார ஆலோசகர் போனாவுடன் 18ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
உயிரிழந்தவர்களுக்கு நியாயம் அளிக்கும் வகையில், அடக்கு முறை மற்றும் துன்புத்தலிலிருந்து பல்வேறு நாடுகளின் மக்களைப் பாதுகாக்கும் வகையிலும், போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் நடவடிக்கை மேற்கொண்ட அமெரிக்காவையும் பிரிட்டனையும் சர்வதேச சமூகம் முற்றிலும் புளனாய்வு செய்ய வேண்டும்
வென்தியன் எனும் விண்வெளி நிலையத்தின் ஆய்வகம் மற்றும் லாங்மார்ச் -5B-Y3 ஏவூர்தி ஜுலை 18ஆம் நாள் ஏவுத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விரைவில் செலுத்தப்பட உள்ளன.
பிளாக் ஸ்டா நியூஸ் இணையதளத்தில் வெளியாகிய ஒரு கட்டுரையில், நாம் சகோதரர்கள் போல் கூட்டாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அல்லது முட்டாள்கள் போல ஒன்றாக அழிவோம்
இலங்கை தனது கடுமையான கடன் பிரச்சினைகளைத் தீர்க்க முயல்கிறது. சீனாவுக்கான இலங்கை தூதர் பாலித கொஹொன 15ஆம் நாள் குளோபல் டைம்ஸ் செய்தியாளருக்கு அளித்த சிறப்பு பேட்டியில், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் மேலை முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவை தற்போது இலங்கைக்கு மிக அதிக கடன் வழங்குபவர்களாக உள்ளனர்.
சீனா தயாரித்த ஏ ஆர் ஜேய்21 விமானம் மூலம் 50 இலட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். சர்வதேசப் பயணியர் விமானத் துறையில் இந்த எண்ணிக்கை, விமானத்தின் பாதுகாப்பு மற்றும் நம்பகத் தன்மையின் முழுமையான வெற்றியைக் காட்டுகிறது.
நேபாளத்தில், அன்னியச் செலவாணி கையிருப்பு குறைவதைத் தடுக்கும் விதம், 10 விதமான பொருள்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, ஆகஸ்ட் இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
14ஆம் நாள், ஷென்யாங் அரண்மனை அருங்காட்சியகத்தைச் சேர்ந்த சிறப்பான தொல் பொருட்கள், குய் சோ மாநிலத்தின் தேசிய இன அருங்காட்சியகத்தில் முதலாவது காட்சிக்கு வைக்கப்பட்டன. அவை சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
2022ஆம் ஆண்டு உலகத் தடகள விளையாட்டு சாம்பியன் பட்டப் போட்டியில் 16ஆம் நாள் நடைபெற்ற உலக நீளம் தாண்டுதல் இறுதிச் சுற்றில், சீன வீரர் வாங் ஜியானன், 8.36 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார்.
இந்தியாவில் முதல்முறையாக கேரளத்தில் குரங்கு அம்மை பாதிப்பு வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மத்திய உயர்நிலைக் குழு கேரள மாநிலம் சென்று ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கியது.
இலங்கையின் அரசுத் தலைவர் பதவியை கோத்தபய ராஜபக்சே வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார். அவரின் ராஜிநாமா கடிதம் கிடைக்கப் பெற்றதாக நாடாளுமன்றத் தலைவர் அபய்வர்தனா செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் 15ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின் படி, இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 56 இலட்சத்து 26 ஆயிரத்து 420 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டை விட 2.5 விழுக்காடு அதிகமாகும்.
ஜுலை 11 முதல் 21ஆம் நாள் வரை, ரஷியாவிடமிருந்து ஐரோப்பாவுக்கு இயற்கை எரிவாயு ஏற்றிச்செல்லும் நோர்த் ஸ்ட்தீம்-1 என்ற குவாய், பராமரிப்புப் பணிக்காக இடைநிறுத்தத்தில் இருப்பதால், ஐரோப்பாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் இந்திய ரூபாயிலேயே வரவு-செலவுகளை மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பை மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு வணிகச் சங்கங்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இலங்கையின் கொழும்புவில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினர்களுக்கும் இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து, வியாழன் மதியம் முதல் வெள்ளி காலை வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சீனச் சுங்கத் துறைத் தலைமை பணியகம் 13ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 8 காலாண்டுகளில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தக ஏற்றுமதி இறக்குமதித் தொகை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரம், அடுத்த ஆண்டு முதல் வீழ்ச்சியைக் கண்டு, 6 மாதங்களுக்கு மேல் மந்தமாக இருக்கும் என்று நெவிகேட்டர் முதலீட்டாளர் தொழில் நிறுவனத்தின் இயக்குநர் கைல் ஷொஸ்டக், ரஷிய டாஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
12ஆம் நாள் நடைபெற்ற அமைதி காப்பு நடவடிக்கையின் நெடுநோக்கு தொடர்பு பற்றிய ஐ.நா பாதுகாப்பவையின் விவாதக் கூட்டத்தில், ஐ.நாவுக்கான சீன நிர்ந்தர பிரதிநிதி சாங் ஜுன் உரை நிகழ்த்தினார்.
சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையமும், போக்குவரத்து துறை அமைச்சகமும் ஜுலை 12ஆம் நாள் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்புத் திட்டத்தை வெளியிட்டுள்ளன.
ஜூலை 11ஆம் நாள், உலக மக்கள் தொகை தினம். 11ஆம் நாள் ஐ.நா. வெளியிட்ட 2022ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை முன்னோட்ட அறிக்கையின் படி, இந்த ஆண்டு நவம்பர் 15ஆம் நாள் உலக மக்கள் தொகை 800 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதேச திறப்பு கொள்கையில் ஊன்றி நிற்பது குறித்து சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, ஜுலை 11ஆம் நாள் ஆசியான் செயலகத்தில் உரை நிகழ்த்தினார்.
பட்டுப்பாதை தொடர்பாக ஆய்வு செய்த வெளிநாட்டு இளைஞர்களின் குழு அண்மையில் சிச்சுவான் மாநிலத்தின் லாங் ச்சொங் என்ற பண்டைய நகரின் சின்னமான ச்சொங் தியென் கட்டிடத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டது.
இவ்வாண்டு முற்பாதியில், பல்வேறு துறைகளின் முயற்சியுடன், சீனாவின் வறுமை ஒழிப்பு சாதனைகள் வெற்றிகரமாக விரிவாக்கப்ட்டுள்ளன. பெருமளவிலான மக்கள் வறுமை நிலைக்கு மீண்டும் திரும்பும் சம்பவம் நிகழவில்லை என்று சீன தேசிய கிராமப்புற மறுமலர்ச்சி பணியகம் 11ஆம் நாள் தகவல் வெளியிட்டது.
இலங்கையில் மக்களின் கொந்தளிப்புக்கு மத்தியில் அரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்சேவும், தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கேவும் தங்களின் பதவியை ராஜிநாமா செய்வதற்கு ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவர் அபெய்வர்தனா சனிக்கிழமை தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அமர்நாத் பகுதியில் மேகவெடிப்பால் கனமழை பெய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. மேலும், 40 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 9ஆம் நாள் பாலி தீவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சீன-அமெரிக்க உறவு, பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேசங்களின் பிரச்சினைகள் குறித்து அவர்கள் விரிவான முறையிலும் ஆழமாகவும் ஆலோசனை நடத்தினர்.
சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் 9ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, ஜூன் திங்களில், சீனாவில் நுகர்வு விலை குறியீட்டு எண், கடந்த ஆண்டு ஜூனை விட 2.5 விழுக்காடு அதிகமாகும். ஜனவரி முதல் ஜூன் வரை, சராசரி நுகர்வு விலை குறியீட்டு எண், கடந்த ஆண்டை விட 1.7 விழுக்காடு அதிகமாகும்.
சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ பாலி தீவில் 20 நாடுகள் குழுவின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் 8ஆம் நாள் கலந்து கொண்டார். 20 நாடுகள் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்திய அரசின் புல்லட் ரயில் திட்டத்தின் தலைவர் சதீஷ் அக்னிஹோத்ரி லஞ்ச குற்றச்சாட்டுகள் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனினும், என்ன குற்றச்சாட்டுகள் என்பது குறித்த விளக்கம் தெரிவிக்கப்படவில்லை.
ஜப்பானின் முன்னாள் தலைமை அமைச்சர் ஷின்சோ அபேயின் மரணம் குறித்து ஜப்பானின் தலைமையமைச்சர் ஃபுமியோ கிஷிடாக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 9ஆம் நாள் இரங்கல் செய்தி அனுப்பினார்.
போரிஸ் ஜான்சன் 7ஆம் நாள் உரை நிகழ்த்துகையில், ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் தலைமை அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார்.
சீன வணிக அமைச்சகம், சீன தேசிய சந்தை ஒழுங்குமுறைக்கான நிர்வாகம் முதலியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் 28ஆவது சீன லன்ச்சோ முதலீடு மற்றும் வர்த்தகப் பொருட்காட்சி 7ஆம் நாள் கன்சூ மாநிலத்தின் தலைநகர் லன்ச்சோவில் துவங்கியது.
இதர நாடுகளின் மீது அமெரிக்கா மேற்கொண்ட ஒரு தரப்பு பொருளாதாரத் தடை நடவடிக்கை, மனித உரிமையை வெளிப்படையாகவும் முறையாகவும் மீறியுள்ளது என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் நிகழ்ச்சியின் போது வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சீனத் தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் சட்டப்படி செயல்படுமாறு சீன அரசு கோருவதோடு, அவை தங்களது சட்டப்பூர்வ உரிமை நலன்களைப் பேணிக்காப்பதற்கும் ஆதரவளிக்கிறது.
ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் 50ஆவது கூட்டத்தின் போது, உலக மனித உரிமை நிர்வாகத்தை வலுப்படுத்தி, மனித குலத்தின் கூட்டு மதிப்பை வெளிப்படுத்துவது என்ற கூட்டம் 5ஆம் நாள் காணொளி வழியாக நடைபெற்றது.
20 நாடுகள் குழுவின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது, சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கனுடன் சந்திப்பு நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்குச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சாவ் லிஜியன் 5ஆம் நாள் பதிலளிக்கையில், அழைப்பின் பேரில் முக்கிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பிரதேசங்களின் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் இரு தரப்பு சந்திப்புகளை வாங் யீ நடத்துவார்.
பிரிட்டன் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலம் மிகவும் மோசமாகி வருகின்றது என்று பிரிட்டன் வங்கி ஜூலை 5ஆம் நாள் எச்சரித்தது. உலகின் பல்வேறு இடங்களில் எரியாற்றல் மற்றும் எரிபொருட்களின் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனால் வாழ்க்கைச் செலவுகளும் அதிகரித்து வருவதாக இவ்வங்கி தெரிவித்தது.
தற்போது சீனர்களின் சராசரி ஆயுள்காலம் 77.93 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. உடல்நலம் தொடர்பான முக்கிய குறியீடுகள், நடுத்தர மற்றும் உயர் வருமானமுடைய நாடுகளின் முன்னணியில் உள்ளன.
சீனாவுக்கு மட்டுல்ல உலகிற்கும் துணைபுரியும் சீனாவின் சீர்திருத்தம், சீனப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு உலகப் பொருளாதாரத்தின் செழுமைக்கும் முக்கிய பங்காற்றியுள்ளது.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 5ஆம் நாள், அல்ஜீரிய அரசுத் தலைவர் தெபனுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி, சுதந்திர புரட்சியில் அல்ஜீரியா வெற்றி பெற்ற 60ஆவது ஆண்டு நிறைவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சிந்தனை கிடங்கு ஊடகங்களின் உயர் நிலை கருத்தரங்கு, உலக வளர்ச்சிக்கான பொது கடமை மற்றும் பங்களிப்பு என்ற தலைப்பில் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இக்கருத்தரங்கிற்கு வாழ்த்து செய்தி அனுப்பனார்.
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு சீன செஞ்சிலுவை சங்கம் கொடுத்த மீட்புதவி பொருட்களின் ஒப்படைப்பு விழா, 3ஆம் நாள், காபுலிலுள்ள ஆப்கான் செம்பிறை சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது. சீன தூதர் வாங் யூவும், இச்சங்கத்தின் தலைவர் ஹாரிஸும் இதில் கலந்துகொண்டனர்.
அமெரிக்காவின் அக்ரான் நகரில் பொது மக்கள் ஜுலை ஆர்ப்பாட்டம் நடத்தி, உள்ளூர் காவற்துறையினர் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜெய்லண்ட் வாக்கரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மியன்மாரின் பாகனில் நடந்த லாங்காங்-மெகாங் ஒத்துழைப்பு பற்றிய ஏழாவது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, கலந்து கொண்டார். அவர் 3ஆம் நாள், மியான்மர் வெளியுறவு அமைச்சர் வென்னா மவுங் ல்வினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனுக்கு தெற்கே உள்ள அமேகர் தீவில் பெரிய வணிக வளாகம் ஒன்றில் 3ஆம் நாள் பிற்பகல் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர் என்று டென்மார்க் காவற்துறை 4ஆம் நாள் தெரிவித்தது.
சீனாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிடையே அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு முன்னேற்ற கூட்டம் ஜுலை 2ஆம் நாள் நிங்சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் நடைபெற்றது.
ஜுலை 2ஆம் நாளிரவு மணிப்பூர் மாநில அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை 34 பேர் நிலச்சரிவில் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காணாமல் போயினர் என்று தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் 50ஆவது கூட்டத்தின் போது, ஆப்கான் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மனித உரிமை நிலைமை பற்றிய விவாதம் ஜுலை முதல் நாள் நடைபெற்றது.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பெங் லியுவான் அம்மையார் ஜூன் 30ஆம் நாள் கவுலூன் பண்பாட்டு மாவட்டத்திலுள்ள நாடக மையத்திற்குச் சென்று பார்வையிட்டார்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை முதல் நாள் புதிதாக பதவியேற்றுள்ள ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி லீ ஜியாச்சாவ்வைச் சந்தித்துரையாடினார்.
நாட்டுபற்றுடையவரே ஹாங்காங்கை ஆளுவது என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ஹாங்காங்கின் தனிச்சிறப்பான தகுநிலை மற்றும் நன்மைகளை நிரந்திரமாக நிலைநிறுத்துவதை மத்திய அரசு முழுமையாக ஆதரித்து வருகின்றது. சர்வதேச நிதி, கப்பல் போக்குவரத்து, வர்த்தகத்தின் மையம் என்ற தகுநிலையை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், ஹாங்காங்கின் ஜனநாயக அமைப்பு முறை, ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கொள்கைக்குப் பொருந்தியது. அதுவும், ஹாங்காங் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கும், ஹாங்காங்கின் செழுமை மற்றும் நிதானத்துக்கும் நலன் தரும் என்று தெரிவித்தார்.