ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 7ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்திப்பு நடத்தினார்.
டிசம்பர் 10ஆம் நாள், பிலிப்பைன்ஸின் மூன்று கப்பல்கள், சீனாவின் அனுமதியைப் பெறாத நிலைமையில், தென் சீனக் கடலிலுள்ள ரென் ஐ என்ற பாறையின் அருகிலுள்ள கடற்பரப்பில் நுழைந்தன.
பிலிப்பைன்ஸ் மீன் பிடிப்பு மற்றும் மீன் மூலவள பணியகத்தைச் சேர்ந்த 3 கப்பல்கள், சீனாவின் எச்சரிக்கையை மீறி, சீனாவின் ஹுவாங் யன் தீவு கடற்பரப்பில் நுழைந்தன.
டிசம்பர் 9ம் நாள் ஜப்பானின் சுருமரு என்ற கப்பலும், சில ரோந்து கப்பல்களும், சீனாவைச் சேர்ந்த தியோயூ தீவின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்தன. சீனக் கடல் காவற்துறை அவற்றைக் கட்டுப்படுத்திய பிறகு விரட்டியதாக சீனக் கடல் காவற்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
டிசம்பர் 10ஆம் நாள், பிலிப்பைன்ஸின் மூன்று கப்பல்கள், சீனாவின் அனுமதியைப் பெறாத நிலைமையில், தென் சீனக் கடலிலுள்ள ரென் ஐ என்ற பாறையின் அருகிலுள்ள கடற்பரப்பில் நுழைந்தன.
ஈராக் தலைநகர் பாக்தாதின் க்ரீன் சோனிலுள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அந்நாட்டு மேற்குப் பகுதியிலுள்ள அமெரிக்க வான் படை தளம் ஆகியவை 8ஆம் நாள் தாக்கப்பட்டன.
காசா பிரதேசத்தில் மனித நேய போர் நிறுத்தம் பற்றி அரபு அமீரகம் முன்வைத்த தீர்மானம், 8ம் நாள் மாலை ஐ.நா பாதுகாப்பவையின் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்படவில்லை.
ஆஸ்திரிய முன்னாள் தலைமை அமைச்சர் வொல்ஃப்கங் ஷுசெல், சீனாவின் குவாங் ச்சோ நகரில் “சீனாவைப் புரிந்து கொள்ளுதல்”என்ற சர்வதேசக் கூட்டத்தில் கலந்து கொண்டு, சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார்.
பிலிப்பைன்ஸ் பிரதிநிதிகள் அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானம், கடல் சார் விவகாரத்தில் சீனா மீது ஆதாரமின்றி குற்றஞ்சாட்டி, உண்மையை திரித்துக்கூறியுள்ளது.
சீன வணிகத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியின்படி, சீனாவுக்கும் சிங்கப்பூருக்குமிடையில் தாராள வர்த்தக உடன்படிக்கையை மேம்படுத்துவதற்கான நடைமுறைகள் ஆவணம் அண்மையில் கையொப்பமிட்டப்பட்டுள்ளது.
சீனத் துணைத் தலைமையமைச்சர் டிங் சுயே சியாங், டிசம்பர் 7ஆம் நாளன்று சீனாவின் தியன்ஜின் மாநகரில், சிங்கப்பூர் துணைத் தலைமையமைச்சரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்கினைச் சந்தித்துரையாடினார்.
பெய்ஜிங்கில் டிசம்பர் 7 ஆம் நாள் நடைபெற்ற 24 ஆவது சீன-ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாட்டுக்கு ஐரோப்பிய அவையின் தலைவர் சார்லஸ் மைக்கேல், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் லேயன் ஆகியோருடன் சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் கூட்டாகத் தலைமை தாங்கினார்.
ஹமாஸ் ஆயுதப்படையினர் மீதான தரை தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து விரிவாக்குவதாகவும், காசா பகுதியில் ராணுவமயமாக்கமின்மையை நனவாக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் தலைமையமைச்சர் பெஞ்சமின் நேத்தன்யாஹூ டிசம்பர் 5ஆம் நாள் தெரிவித்தார்.
டிசம்பர் 6ஆம் நாள் 2023ஆம் ஆண்டு உலக நுண்ணறிவு உற்பத்தி மாநாடு நாசிங்கில் துவங்கியது. உலகின் 500 முன்னணி தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டன.
பிரபலமான பாட்காஸ்ட் லெக்ஸ் ஃப்ரிட்மேன் (Lex Fridman) நடத்திய பேச்சு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எலான் மஸ்க், சீன-அமெரிக்க மோதல் தவிர்க்க முடியாததா?இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?போன்றவை குறித்து கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் 6ஆம் நாள் சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் சௌதி அரேபியா பட்டத்து இளவரசர் ஷேக் முகமது ஸாயீத் அல் நயானுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். கையோடு கை கோர்த்து மத்திய கிழக்குப் பிரதேசத்தின் நிதானத்தைப் பேணிகாக்க பாடுபடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஐரோப்பிய ஆணையம் உள்ளூர் நேரம் 15ஆம் நாள் அன்று 2023ஆம் ஆண்டின் இலையுதிர்கால பொருளாதார முன்னாய்வு அறிக்கை வெளியிட்டது. இதில் இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோ பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான முன் மதிப்பீட்டைக் குறைப்பதாக தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டில் ஏபெக் நிதி அமைச்சர்கள் கூட்டத்துக்கு பிந்தைய செய்தியாளர் கூட்டத்தில் அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெலன் கூறுகையில், ஏபெக் பொருளாதார உறுப்பினர்கள் உலகப் பொருளாதாரத்தின் மையத்தில் உள்ளன என்றும், ஏபெக் பொருளாதார உறுப்பினர்களுக்கிடையிலான ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்தார்.
உள்ளூர் நேரப்படி நவம்பர் 15ஆம் நாள் ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் மெஹ்தி சஃபாரி, தலைநகர் தெஹ்ரானில் ரஷியாவின் துணை வெளியுறவு அமைச்சரும் பிரிக்ஸ் விவகாரத்துக்கான ரஷிய ஒருங்கிணைப்பாளருமான செர்கை ரியாப்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிக்ஸ் ஒத்துழைப்பு இயங்குமுறையில் ஈரான் இணைந்த பிறகு ரஷியாவுடன் நடத்திய முதல் சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தை இதுவாகும்.
2024ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் மங்களப் பொருளான “ச்சென் ச்சென்” என்னும் டிராகன் உருவம் டிசம்பர் 6ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
2023ஆம் ஆண்டில் ரஷியாவின் கவச ஆயுதங்களின் உற்பத்தி மூன்று மடங்காக உயர்ந்து, விமான சாதனங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களின் உற்பத்தி இரட்டிப்பாகியுள்ளது என்று ரஷியாவின் தலைமையமைச்சர் மிக்கைல் மிஷுஸ்டின் 5 ஆம் நாள் தெரிவித்தார்.
பெய்ஜிங் மாநகரில் மியௌயிங் பைய் டா என்னும் கோயில் மிகவும் தனிச்சிறப்பியல்பு வாய்ந்தது. சீனாவின் யுவான் வம்சகாலத்தின் போது, நேபாளத்திலிருந்து கைவினைஞர் ஒருவர் இக்கோயிலை வடிவமைத்தார்.
கடும் பனி எனும் சீனாவின் பாரம்பரிய சிறப்பு நாள் வருகின்றது. இந்த நாளுக்கு முன், சிச்சுவான் மாநிலத்தின் மெஷன் நகரில் விவசாயிகள் வயல்களில் வெள்ளை முள்ளங்கிகளை அறுவடை செய்யும் பணியை முடிக்கும் வழக்கமாக கொண்டிருக்கின்றார்கள்.
காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.வின் கட்டுக்கோப்பு பொது ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட தரப்புகளுக்கான 28ஆவது மாநாட்டில் (காப் 28),டிசம்பர் 4ஆம் நாள், சீனா நடத்திய கூட்டம் ஒன்றில், சர்வதேச எரியாற்றல் நிறுவனத்தின் தலைவர் ஃபாத்தி பிரோல் கலந்துகொண்டார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ டிசம்பர் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் சீனாவுக்கான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் தூதாண்மை அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.
4ஆம் நாள் பிற்பகல் காசா நகரில் இரண்டு பள்ளிகளின் மீது இஸ்ரேல் படை வான் தாக்குதலை நடத்தியது. இதில் குறைந்தது 50 பேர் உயிரிழந்தனர் என்று பாலஸ்தீனத் தொலைக்காட்சி நிலையம் செய்தி வெளியிட்டது.
சீனாவின் மாற்றுத்திறனாளிகளுக்கான சம்மேளனம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டு முதல், சீனாவில் குணமடைதலுக்கான சேவையை அனுபவித்துள்ள மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 69 இலட்சத்து 17 ஆயிரமாகும்.
ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சந்திப்பு நடத்தவுள்ளார்.
தெற்குக் காசா பகுதியில் 2ஆம் நாள் நடவடிக்கைகளை இஸ்ரேல் படை தொடங்கியுள்ளது. அதே வேளையில், வடக்கு காசா பகுதியில் பெற்றுள்ள சாதனைகள் தொடர்ந்து உறுதி செய்யப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் தலைமை அதிகாரி ஹெர்சி ஹலெவி டிசம்பர் 3ஆம் நாள் தெரிவித்தார்.
சீனத் தேசிய வனம் மற்றும் புல்வெளி பணியகம் வெளியிட்ட தகவல்களின்படி, சமீபத்தில், சீனாவில் சதுப்பு நிலப் பாதுகாப்பு அமைப்புமுறை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பாரிஸில் 2ஆம் நாள் கத்தியைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் முன்னாதாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் மீது விசுவாசம் கொண்டிருக்கும் வகையிலான காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பவளப்பாறை பக்கத்தில் உள்ள மீன் வலைகளை நீக்கும் பணி ஓமன் தலைநகரில் நடைபெற்று வருகிறது. தன்னார்வத் தொண்டர்கள், கடலில் முக்குளித்து கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து வருகின்றனர்.
மீன் துறைமுகத்தின் சுவர், ஓவிய அலங்காரம் செய்யப்பட்ட பின், உள்ளூர் பண்பாட்டு வளங்களை வெளிக்கொணர்ந்து பயணிகளை ஈர்த்துள்ளது. பருந்துப் பார்வையில் இதனைத் துறைமுகம் என நம்ப முடியுமா?
சீனாவின் ஹாங்காங்கில் 3ஆம் நாள் மாபெரும் பொம்மலாட்ட கார்னிவல் பரேட் நடைபெற்றது. 4 மீட்டர் உயரமுள்ள 10 பெரிய பொம்மலாட்டங்கள், 250க்கும் மேலான கலை பொருட்கள் முதலியவை, பொது மக்களுக்குக் கண்விருந்து அளித்தன.
நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்ற உத்திநோக்கு பார்வையுடன் கூடிய ஒரு திட்டமாக சுற்றுலா வளர்ச்சியை முன்னெடுக்க கியூபா முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் மாற்றுத்திறனாளிகளுக்கான சம்மேளனம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டு முதல், சீனாவில் அடிப்படை குணமடைதலுக்கான சேவையை அனுபவித்துள்ள மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 69 இலட்சத்து 17 ஆயிரமாகும்.
சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹாய்சியொங் ஆற்றிய பங்கிற்குப் பாராட்டு தெரிவிக்கும் விதம், அந்நாட்டின் தலைச்சிறந்த சாதனை விருது அவருக்கு வழங்கப்பட்டது.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும் சீனத் துணைத் தலைமை அமைச்சருமான டிங் சுயேசியாங், உலக காலநிலை செயல்திட்ட உச்சிமாநாட்டில் உரை நிகழ்த்தினார்.
பாலஸ்தீன அரசு செய்தி நிறுவனம் டிசம்பர் முதல் நாள் வெளியிட்ட செய்தியின் படி, காசா பிரதேசத்திலுள்ள ஹமாஸ் இயக்கத்தின் மீதான ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் அன்றுமீண்டும் துவங்கியது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், நவம்பர் 29ஆம் நாள் சீனாவின் கிழக்கு கடலுக்கான ஆயுத காவற்துறை தலைமையகத்தில் ஆய்வு பயணம் மேற்கொண்டார்.
இவ்வாண்டு சீனப் பொருளாதார வளர்ச்சி 5.2 விழுக்காடு அதிகரித்ததோடு, ஆசிய-பசிபிக் பிரதேசம் மற்றும் உலகப் பொருளாதார அதிகரிப்பின் முக்கிய இயக்காற்றலாக விளங்கும்.
இப்புரிந்துணர்வு குறிப்பாணையானது, இரு நாடுகளின் கொள்கை மற்றும் தொடர்பு, வசதிகளின் இணைப்பு, தடையில்லாத வர்த்தகம், மூலதன நிதி மற்றும் மக்கள் இதயங்களின் தொடர்பை மேம்படுத்தும் என்று சென் சுவாண்டோங் தெரிவித்தார்.
யுன்னான் மாநிலத்தின் பூர் நகரில் காப்பி விளைச்சல் செய்யும் தளத்தில் காப்பிகளைப் பறிந்துத் தேர்ந்தெடுக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில், காப்பி வளர்ப்புத் தொழில் துறையின் மூலம், உள்ளூர் விவசாயக் குடும்பத்தினர் 20 ஆயிரம் யுவான் வரை வருமானம் பெற்று வருகின்றனர்.
யுன்னான் மாநிலத்தின் பூர் நகரில் அவகோடா பழங்கள் அமோக அறுவடை காலத்தில் நுழைந்துள்ளன. விவசாயிகள் சுறுசுறுப்பாக அவகோடா பழங்களைப் அறுவடை செய்த பின் அவற்றைச் சந்தையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்.
நவம்பரில், குவாங்சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சொங் சோ நகரின் டா சின் மாவட்டத்தில் உள்ள தே தியான் அருவி கூட்டத்தின் காட்சியிடத்தினைப் பயணிகள் மூங்கில் படகின் மூலம் சுற்றிப் பார்த்து மகிழலாம்.
விவசாய நிலப் பாதுகாப்பு மற்றும் உவர்நிலத்தின் விரிவான பயன்பாடு குறித்த கட்டுரையைச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் கட்டுரை டிசம்பர் முதல் நாள் வெளியானது.
சீனா உலகின் இரண்டாவது பெரிய பத்திர சந்தையாக மாறியுள்ளது. சீனாவின் ஏ-பங்குகள் மற்றும் அரசு கடன் பத்திரம் என இரண்டும், MSCI, ப்ளூம்பெர்க் பார்க்லேஸ், ஜேபி மோர்கன் சேஸ் போன்ற முக்கிய உலகளாவிய குறியீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக சீன மக்கள் வங்கி தலைவர் பான் கோங்ஷெங் அண்மையில் தெரிவித்தார்.
காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.வின் கட்டுக்கோப்பு பொது ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட தரப்புகளுக்கான 28 ஆவது மாநாடு 30ஆம் நாள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் துவங்கியது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், துணைத் தலைமையமைச்சருமான டிங் சுவேசியாங் நவம்பர் 28, 29 ஆகிய நாட்களில், துர்க்மேனிஸ்தானில் பயணம் மேற்கொண்டார்.
யாங்சீ ஆற்றுக்கழிமுகத்தின் ஒருமைப்பாட்டு வளர்ச்சியை முன்னேற்றுவது பற்றிய கூட்டத்துக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 30ஆம் நாள் முற்பகல் தலைமை தாங்கினார்.
நவம்பர் 26, 27 ஆகிய நாட்களில், சீனத் துணை தலைமை அமைச்சர் டிங் சுய்சியாங் கஜகஸ்தானில் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டின் அரசுத் தலைவர் மற்றும் தலைமை அமைச்சருடன் தனித்தனியாக சந்தித்தார்.
ஜப்பான் கடலோர காவல்படை வெளியிட்ட தகவல்களின்படி, ஜப்பானில் உள்ள அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த வி-22 ஆஸ்ப்ரே விமானம், அகோஷிமா மாநிலத்தின் கிழக்கு யாகுஷிமா தீவு அருகே கடலில் விழுந்து நொறுங்கியது.
ஐ.நா.சாசனத்தின்படி, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பேணிக்காப்பதில் முதன்மை பொறுப்புகளை ஏற்கும் ஐ.நா. பாதுகாப்பு அவை, பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினையில் நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான பங்குகளை ஆற்ற வேண்டும்.
மனித நேய உதவி பொருட்களை ஏற்றிச்சென்ற 242 சரக்குந்துகள், ராஃபா நுழைவாயிலின் மூலம் காசா பிரதேசத்தைச் சென்றடைந்ததாக எகிப்தின் கைரோ செய்தி ஊடகம் 29ஆம் நாள் தெரிவித்தது.
சீனாவில் சொந்தமாகவே ஆராய்ச்சி செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட லூங்சன்3A6000 எனும் புதிய தலைமுறை மையச் செயலகம்(சி.பி.யூ) 28ஆம் நாள் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் வெளியிடப்பட்டுள்ளது.
சீனச் சர்வதேச நட்புத் தொடர்பு சம்மேளனமும், சீன ஊடகக் குழுமமும் கூட்டாக நடத்திய 2023ம் ஆண்டு பாண்டா பாசி அமைதி மற்றும் நட்பு மன்றக் கூட்டம் நவம்பர் 28ம் நாள் சிச்சுவான் மாநிலத்தின் டு ஜியாங் யன் நகரில் நடைபெற்றது.
தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியின் போது, கூட்ட நெரிசலில் மிதிபட்டு 4 பேர் உயிரிழ்ந்தனர், 64க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளிடமிருந்து வரும் நியாயமான கோரிக்கைகளை பிரிட்டன் சரிவர நோக்கி, கொள்ளையடித்தல் வழியாக பெற்ற தொல்பொருட்களை வெகுவிரைவில் திருப்பி கொடுக்க வேண்டும் என கருதப்படுகிறது.
ஐ.நா. பாதுகாப்பு அவையின் நடப்புத் தலைவர் பதவி வகிக்கும் நாடான சீனா நவம்பர் 29ஆம் நாள் பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினை பற்றிய உயர்நிலை கூட்டத்தை நடத்தவுள்ளது.
சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் 10ஆவது கூட்டம் நவம்பர் 26ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று தென் கொரியாவின் பூசானில் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு நவம்பர் 27ஆம் நாள் நடத்திய கூட்டத்தில், யாங்சி ஆற்று பொருளாதார மண்டலத்தின் உயர்தர வளர்ச்சியை முன்னெடுக்கும் கொள்கை பற்றிய கருத்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் தூதாண்மை பணி விதிகள் ஆகியவை பரிசீலனை செய்யப்பட்டன.
நவம்பர் 27ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் சீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தையை அறிமுகப்படுத்தினார்.
தென்மேற்கு சீனாவிலுள்ள யுன்னான் மாநிலத்தில் இரண்டு பிரபலமான சுற்றுலா காட்சிதலங்களான லீஜியாங், ஷாங்ரி-லா நகரங்களை இணைக்கும் ரயில் 26ஆம் நாள் ஞாயிற்றுகிழமையன்று முறையாக போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், சீனாவின் மென் பொருள் மற்றும் தகவல் தொழில் நுட்பச் சேவைத் துறையின் செயல்பாடு சீராக வளர்ந்து, மென் பொருள் துறையின் வருமானம் வேகமாக அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் அக்டோபர் வரை, மென் பொருள் துறையின் வருமானம் 9 இலட்சத்து 81 ஆயிரத்து 910 கோடி யுவானாகும்.
3ஆவது கட்டமாக பிணைக்கைதிகளை 26ஆம் நாள் ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது. அவர்களில் 13 பேர் இஸ்ரேலையும், 3 பேர் தாய்லாந்தையும் ஒருவர் ரஷ்யாவையும் சேர்ந்தவர்கள் என்று இந்த இயக்கத்தைச் சேர்ந்த கசாங் படைப்பிரிவு அறிவித்துள்ளது.
4 நாட்கள் நீடித்த 2023ஆம் ஆண்டு ஆசிய பொது விமானக் கண்காட்சி சீனாவின் ஜுஹா நகரில் 26ஆம் நாள் இனிமையாக நிறைவடைந்தது. இதில், பல விமானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, அற்புதமான விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி முதல், சீன குடிமக்கள் 30 நாட்களுக்கு விசா இல்லாமல் மலேசியாவில் பயணம் மேற்கொள்ளலாம் என்று அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
காசா பிரதேசத்தில் தற்காலிகமான போர் நிறுத்தம் 24ஆம் நாள் அமலுக்கு வந்தது. அதற்கு பிறகு, நிறைய மனித நேய உதவி பொருட்கள் அப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, நவம்பர் 26ஆம் நாள், தென்கொரியாவின் ஃபூசன் நகரில் நடைபெறவுள்ள சீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.
சீன- உருகுவே தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 35வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, உருகுவே அரசுத் தலைவர் லாகலெ, பெய்ஜிங்கில் பயணம் மேற்கொண்ட போது சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார்.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய 6 நாடுகளின் பொது பாஸ்போர்ட் கொண்டவர்களுக்கு விசா இல்லா கொள்கையைச் சீனா சோதனை முறையில் ஒரு சார்பாக மேற்கொள்ளும்.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்பு பிரதிநிதி டிங் சுய்சியாங் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐ.நா. காலநிலை செயல்திட்ட உச்சிமாநாட்டில் பங்கெடுக்க உள்ளார்.
"ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின்" உயர்தர வளர்ச்சிக்கான எதிர்காலத்தையும் நடைமுறையையும் உறுதியாக முன்னேற்றுவது மற்றும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டுக் கட்டுமானம் பற்றிய அடுத்த 10 ஆண்டுக கால வளர்ச்சிக்கான முன்னாய்வு அறிக்கை நவம்பர் 24ஆம் நாள் வெளியிடப்பட்டது.
பெய்ஜிங்கில் 28ஆம் நாள் நடைபெறவுள்ள முதல் சீனச் சர்வதேச விநியோகச் சங்கிலி பொருட்காட்சியின் துவக்க விழாவிலும் உலக விநியோக சங்கிலி புத்தாக்க வளர்ச்சி கருத்தரங்கிலும் சீனத் தலைமை அமைச்சர் லீ ச்சியாங் கலந்து கொள்ளவுள்ளார்.
சீனாவின் சுங் ச்சிங் மாநகரில் ஆரஞ்சு பழங்கள் அறுவடை காலத்தில் நுழைந்துள்ளது. இந்நகரில் உள்ளூர் விவசாயிகள், அரசின் உதவியின் மூலம் ஆரஞ்சுகளை வளர்த்து செழுமையடைந்துள்ளனர்.
வடகொரியா அண்மையில் உளவு செயற்கைக்கோளை ஏவியது. அதனையடுத்து வடகொரியாவுடன் எட்டப்பட்ட பன் முன் ஜோம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ராணுவத் துறை உடன்படிக்கையின் சில அம்சங்களிலிருந்து விலகுவதாக தென்கொரியா அறிவித்தது.
ரஷியாவின் எல்லையில் உள்ள குசாமோ, சல்லா முதலிய கிழக்கு எல்லைக் நுழைவாயில்களை இந்த மாதம் 24ஆம் நாள் 0:00 மணி முதல் மூட முடிவு செய்துள்ளதாகவும், கிழக்கு எல்லையை கடந்து செல்ல ராஜயோசெபி நுழைவாயில் ஒன்று மட்டும் திறந்திருக்கும் என்றும் பின்லாந்து அரசு 22 ஆம் நாள் அறிவித்தது. இம்முடிவு, இந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் நாள் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ஜென்டினாவுடன் இருநாட்டு பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவின் நீண்டகாலமான நிதானமான வளர்ச்சியை முன்னேற்றுவித்து இருநாட்டு மக்களுக்கு நன்மை புரிய வேண்டும் என்று சீனா விரும்புகின்றது.
இவ்வாண்டின் அக்டோபர் திங்கள் வரை, சீனாவில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு சேவை வழங்க மொத்தமாக 20ஆயிரம் அதிவேக மின்னூட்டு சாதனங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயின் அழைப்பின் பேரில், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் கேத்தரின் கொலோனா அம்மையார் நவம்பர் 23ஆம் நாள் முதல் 24ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொண்டு, சீன-பிரான்ஸ் உயர் நிலை மனித தொடர்பு பரிமாற்ற அமைப்பு முறையின் ஆறாவது கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மெள நீங் 22ஆம் நாள் தெரிவித்தார்.
கொரிய மத்திய செய்தி நிறுவனம் 22ஆம் நாள் வெளியிட்ட செய்தியின்படி, நவம்பர் 21ஆம் நாளில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ள மலிங்யாங்-1 என்கிற உளவு செயற்கைக் கோள், திட்டமிட்டபடி சுற்று வட்டப் பாதையில் தடையின்றி நுழைந்துள்ளது.
அமெரிக்க-கனடா எல்லை பகுதியிலுள்ள ரெயின்போ பாலத்தில் வாகன குண்டு வெடிப்பு நிகழ்ந்த சில மணி நேரத்திற்குப் பிறகு, அமெரிக்க நியூயார்க் மாநில ஆளுநர் கேத்தி ஹோச்ச நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், இவ்வாகனக் குண்டு வெடிப்பில் பயங்கரவாதத் தாக்குதல் என்பதற்கான அறிகுறி காணப்படவில்லை என்று தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு 11ஆவது சீன அறிவியல் தொழில்நுட்ப நகரத்தின் சர்வதேச உயர் தொழில்நுட்ப கண்காட்சி நவம்பர் 22ஆம் நாள் சிச்சுவான் மாநிலத்தின் மியன்யாங் துவங்கியது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு சீனா வரவேற்பு தெரிவிப்பதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மெளநீங் நவம்பர் 22ஆம் நாள் கூறினார்.
உலக எண்ணியல் வர்த்தகப் பொருட்காட்சி, சீனாவில் எண்ணியல் வர்த்தகம் என்பதை கருப்பொருளாக கொண்டு பன்னாட்டுக்கு திறக்கப்படும் ஒரேயொரு தேசிய நிலையிலான பொருட்காட்சியாகும்.
"2023ஆம் ஆண்டு சீனாவின் 5 ஜி + தொழில்துறை இணைய மாநாடு" 21ஆம் நாள் ஹூபே மாநிலத்தின் வுஹான் நகரில் நிறைவடைந்தது. இம்மாநாட்டில் 2023ஆம் ஆண்டு சீனாவின் "5 ஜி + தொழில்துறை இணையத்தின் வளர்ச்சி" பற்றிய அறிக்கையைச் சீனாவின் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில் நுட்பக் கழகம் வெளியிட்டது.
இஸ்ரேலின் ஹாரெட்ஸ் செய்திதாள் வெளியிட்ட செய்தியின் படி, ஹமாஸ் இயக்கத்துடன் தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கையை எட்ட இஸ்ரேல் அமைச்சரவை கூட்டத்தில் உள்ளூர் நேரப்படி 22ஆம் நாள் விடியற்காலையில் வாக்கெடுப்பின் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் 20ஆம் நாள், உக்ரேன் தலைநகர் கீவ் திடீர் பயணம் மேற்கொண்டு, உக்ரேனுக்கு அமெரிக்கா இராணுவ ஆதரவு தொடர்ந்து அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்திய அரசின் அழைப்பை ஏற்று, சீனத் தலைமை அமைச்சர் லீ ச்சியாங் நவம்பர் 22ஆம் நாள் ஜி20 அமைப்பின் காணொளி வழி நடைபெறும் உச்சிமாநாட்டில் பங்கெடுக்க உள்ளார்.
காசாவின் வடக்குப் பகுதியில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனை நவம்பர் 20ஆம் நாள் தாக்கப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதே நாள் தெரிவித்துள்ளது.
சீனாவுக்கும் பாலஸ்தீனத்துக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 35ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் மாலிஜி ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.
2024ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவுத் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியச் செயற்குழு 20ஆம் நாள் ஒப்புதல் அளித்தது. மொத்த புதிய வரவு செலவு திட்டத் தொகை சுமார் 18938.5 கோடி யூரோ மற்றும் மொத்த செலவுத் தொகை சுமார் 14263 கோடி யூரோ ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பானின் டோக்கியோ மின்னாற்றல் நிறுவனம் வெளியிட்ட செய்தியின் படி, ஃபுகுஷிமா அணு உலையில் கதிரியக்க நீரின் 3ஆம் கட்ட வெளியேற்றம் நவம்பர் 20ஆம் நாள் நண்பகல் நிறைவடைந்தது.
ஹுனான் மாநிலத்தில் ஆரஞ்சு பருவகாலம் வந்தது. இம்மாநிலத்தின் யொங்சோ நகரில், விவசாயிகள் ஆரஞ்சுகளைப் பறிந்து, சீனாவின் பல்வேறு பகுதிகளின் சந்தைக்கு விற்பனை செய்துள்ளனர்.
நவம்பர் 21ஆம் நாள் முதல் 30ஆம் நாள் வரை, 2023 குவாங்சோ மாநகரில் 12ஆவது சர்வதேச விளக்குகள் திருவிழா இந்நகரிலுள்ள ஹைய்சின்சா விளையாட்டுப் பூங்காவில் நடைபெற்று வருகிறது.
7வது பட்டுப்பாதை சர்வதேசப் பொருட்காட்சியும், கிழக்கு மற்றும் மேற்கு சீன ஒத்துழைப்புக்கான முதலீடு மற்றும் வர்த்தக மன்றக்கூட்டமும் நவம்பர் 20ஆம் நாள் நிறைவு பெற்றது.
2023 விண்வெளி தொழில் நுட்பத்தின் அமைதி நோக்கப் பயன்பாட்டுக் கருத்தரங்கு வெளியிட்ட தகவல்களின்படி, 50க்கு மேலான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் சீனா விண்வெளி ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு, சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பை ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
அர்ஜென்டீனத் தேசிய தேர்தல் ஆணையம் 19ஆம் நாளிரவு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, தீவிர வலதுசாரி தேர்தல் கூட்டணியின் " லா லிபர்டாட் அவன்சா கட்சியின்" வேட்பாளரான ஜேவியர் மில்லாய், அதே நாளில் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலின் இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்று அர்ஜென்டினாவின் அடுத்த அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வங்காளத்தேசப் பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் 19ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, அதே நாளில், முழு நாட்டிலும் 1291 பேர் டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாண்டு முதல் டெங்கு காய்ச்சலால் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. அவர்களில் 1549 பேர் உயிரிழந்தனர்.
காசா பகுதியில் பகைமை நடவடிக்கைகள் மற்றும் மனித நேய பேரழிவினை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், மருத்துவமனைகள் மற்றும் பிற முக்கிய அடிப்படை வசதிகள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் உலகச் சுகாதார அமைப்பு 19ஆம் நாள், ஜெனீவாவில் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மனிதரை ஏற்றிச்செல்வதற்கான விண்வெளி அலுவலகம் வெளியிட்ட தகவல்களின்படி, 2024ஆம் ஆண்டில், தியன்சோ-7 சரக்கு விண்கலம், ஷென்சோ-18 விண்கலம், தியன்சோ-8 சரக்கு விண்கலம், ஷென்சோ-19 விண்கலம் ஆகியவை 4 முறையே பறத்தல் கடமைகளை செயல்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் ஆயுதப்படையினர்கள் பணயக்கைதிகளை விடுவிக்காமல் இருந்தால், இஸ்ரேல் தாக்கலை நிறுத்தாது என்று இஸ்ரேல் தலைமையமைச்சர் பெஞ்சமின் நெதன்யாஹூ தெரிவித்தார்.
குளிர்காலம் மற்றும் வசந்தகாலத்தில் நீர்ப்பாசனம் மற்றும் சேமிப்பு, உயர்தர விளைநிலம் கட்டுமானம் ஆகியவை பற்றிய கூட்டத்தை சீன அரசவை நவம்பர் 17ஆம் நாள் நடத்தியது.
இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் சீனாவில் இணைய வழி சில்லறை விற்பனை 12.3 லட்சம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதேகாலத்தை விட 11.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சீன வணிக அமைச்சகம் 17ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரை, சீனாவில் 98 ஆயிரத்து 701 கோடி யுவான் மதிப்புள்ள அந்நிய முதலீடு நடைமுறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஈராக் குடிமக்கள் படையான இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் நவம்பர் 17ம் நாள் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஈராக் கூர்ட் தன்னாட்சி பிரதேசத் தலைநகர் ஏர்பிலில் அமைந்துள்ள அமெரிக்காவின் வான் படை தளத்திந் மீது ஒரு ஆள்ளில்லா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி, தளத்திலுள்ள ஒரு இலக்கை நேரடியாகத் தாக்கியது என்று தெரிவிக்கப்பட்டது.
ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரையில், 21 பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் படை கைது செய்துள்ளது. அவர்களில் 6 பேர், ஹமாஸ் இயக்கத்தின் ஆயுதத்தாரிகள் என உறுதியாகி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஐஸ்லாந்து வானிலை நிலையம் உள்ளூர் நேரப்படி நவம்பர் 15ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, அந்நாட்டின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ரெய்கியன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ச்சியான நிலநடுக்கம் ஏற்பட்டு, பாறைக் குழம்பு மேற்பரப்பை நோக்கி வெடிக்கும் ஆபத்து உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன ஊடகக் குழுமம், அமெரிக்க-சீன இளைஞர் மாணவர்கள் பரிமாற்றச் சங்கம் முதலியவை, உள்ளூர் நேரப்படி நவம்பர் திங்கள் 16ஆம் நாள், அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோவில் சீன-அமெரிக்க மக்கள் தொடர்பு மற்றும் பண்பாட்டு பரிமாற்றத்திற்கான நட்பு உரையாடல் எனும் நிகழ்வை கூட்டாக நடத்தின.
தென் மேற்கு சீனாவில் அமைந்துள்ள குன்மிங் நகரின் சிசான் மண்டலத்தில் சதுப்பு நிலப் பூங்காவில் எண்ணற்ற கடற்புறாகள் பறந்து, இதில் பயணம் மேற்கொண்ட பயணிகளை ஈர்த்துள்ளன.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 15ஆம் நாள் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள ஃபிலோலி பண்ணைத் தோட்டத்தில் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உள்ளூர் நேரப்படி நவம்பர் 15ஆம் நாள் காலை சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் ஆகியோர் சான் ஃபிரான்சிஸ்கோவில் சந்திப்பு நடத்தினர்
சீன வணிக துறை அமைச்சம் வெளியிட்ட செய்தியின்படி, கடந்த சில ஆண்டுகளில், சீனாவுக்கும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் இதர 20 உறுப்புகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு தொடர்ந்து ஆழமாகி வருகிறது.
உள்ளூர் நேரப்படி 14ஆம் நாள், ஐ.நாவின் மனித நேய விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, சூடானின் மத்திய கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் 2525 பேருக்கு காலரா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள சான் ஃப்ரான்சிஸ்கோ, காலிஃபோர்னிய மாநிலத்தின் 4வது மக்கள் தொகை கொண்ட நகராகும். அழகான சுற்றுச்சூழல் வாய்ந்ததால் அது, உலகின் புகழ் பெற்ற சுற்றுலா இடமாகும்.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 14ஆம் நாளிரவு சிறப்பு விமானத்தின் மூலம் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டு, அமெரிக்காவின் சான் ஃப்ராங்சிஸ்கோவுக்குச் சென்றார்.
பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற அமைதி மன்றக்கூட்டத்தின் “போட்டியில் ஒத்த கருத்துகளை எட்டுவது” என்ற ஒரு கூட்டத்தில், பிரிட்டனுக்கான முன்னாள் சீனத் தூதர் ஃபூ யிங் அம்மையார் உரை நிகழ்த்தினார்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதர் ஷென் யீ யீச்சின் நவம்பர் 15 முதல் 18ஆம் நாள் வரை மாலத்தீவில் பயணம் மேற்கொண்டு, புதிய அரசுத் தலைவரின் பதவி ஏற்பு விழாவில் பங்கெடுக்க உள்ளார்.
நவம்பர் 13ஆம் தேதி அமைச்சரவை மாற்றத்தை பிரிட்டன் பிரதமர் சுனக் அறிவித்தார். உள்துறை, வெளியுறவு, சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல பதவிகள் மாற்றியமைக்கப்பட்டன.
ஐ.நா.விலுள்ள சீன நிரந்தரப் துணை பிரதிநிதி கெங்சுவாங் 13ஆம் நாள், மத்திய கிழக்குப் பிரதேசத்தில் அணு ஆயுதம் மற்றும் பேரழிவு ஆயுதங்கள் இல்லாத மண்டலத்தை உருவாக்குவதற்கான 4ஆவது கூட்டத்தில் உரைநிகழ்த்தினார்.
சீன-அமெரிக்க உறவின் நிதானத்தைப் பேணிக்காக்கும் வகையில், இரு நாட்டு தலைவர்களின் பாலி தீவு சந்திப்பில் எட்டப்பட்டுள்ள கருத்து ஒற்றுமையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 86 விழுக்காட்டினர் கருதுகின்றனர்.
சீனாவின் குறிப்பிடத்தக்க உணவுகளில் சீனத் தோசை என்றழைக்கப்படும் ஜியன்பிங்கும் ஒன்று. தற்போது, ஜியன்பிங் தோசையானது 50க்கும் மேற்பட்ட வகைகளில் கிடைக்கின்றது.
சீனத் துணைத் தலைமையமைச்சரும் சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தகத்திற்கான சீனத் தலைவருமான ஹீ லீ ஃபெங்கின் அமெரிக்கப் பயணம் குறித்து சீனத் துணை நிதி அமைச்சர் லியாவ் மீன் நவம்பர் 10ஆம் நாள் சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தினார்.
வங்காளதேசத்தில் தோஹசாரி---காக்ஸ் பஜார் இருப்புப்பாதையின் தொடக்க விழா 11ஆம் நாள் நடைபெற்றது. சீன நிறுவனங்கள் இந்த இருப்புப் பாதையின் கட்டுமானத்தில் பங்கெடுத்தது.
சீனத் தேசிய அஞ்சல் பணியகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி 2023ஆம் ஆண்டின் நவம்பர் முதல் நாள் தொடங்கி 11ஆம் நாள் வரை, விரைவு அஞ்சல் வழியாக 526.4 கோடி பொதிகள் கையாளப்பட்டன.
அரபு-இஸ்லாமிய நாட்டு தலைவர்களின் உச்சி மாநாட்டில் பாலஸ்தீன பிரச்சினை பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது என்று சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் நவம்பர் 11ஆம் நாள் தெரிவித்தது.
சீன துணைத் தலைமை அமைச்சரும் சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக பேச்சுவார்த்தையின் சீனத் தரப்புத் தலைவருமான ஹெ லிஃபங், நவம்பர் 8 முதல் 12ஆம் நாள் வரை, அழைப்பை ஏற்று, அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டார்.
அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 14 முதல் 17ஆம் நாள் வரை சான் ப்ரன்ஸிஸ்கொவில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, தென் கிழக்காசிய மற்றும் தெற்காசிய நாடுகளின் அரசியல் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை நவம்பர் 10ஆம் நாள் சீனாவின் குன்மிங் நகரில் நடைபெற்றது.
6ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில், ஓராண்டு சரக்கு மற்றும் சேவைகளின் கொள்வனவுக்காக 7841 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆரம்பக்கட்ட ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சீன வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் நவம்பர் 10ஆம் நாள் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின் படி, அக்டோபரில் உள்நாட்டு வாகனச் சந்தை இரட்டை இலக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களிடையேயான 5ஆவது பேச்சுவார்த்தை நவம்பர் 10ஆம் நாள் புது தில்லியில் நடைபெற்றது
உள்ளூர் நேரப்படி நவம்பர் 9ஆம் நாள், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்க செய்தி ஊடக அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு காசா பிரதேசத்திலுள்ள மருத்துவ வசதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை கண்டித்துள்ளது.
புதிய யுகத்தில் ஷிசாங் தன்னாட்சிப் பிரதேசத்துக்கான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளின் நடைமுறையாக்கம் மற்றும் சாதனைகள் பற்றிய வெள்ளையறிக்கை சீன அரசு நவம்பர் 10ஆம் நாள் வெளியிட்டது.
புள்ளிவிவரங்களின் படி, 2023ஆம் ஆண்டின் ஜூன் வரை, இணையத்தளத்தின் மூலம் பொருட்களை வாங்கிய சீனப் பயனாளர்களின் எண்ணிக்கை 88.4 கோடியாகும். 2023 உலக இணைய மாநாட்டின் வூட்சென் உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட 2023ஆம் ஆண்டு சீன இணைய வளர்ச்சி அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண வீக்க விகிதத்தை 2 விழுக்காடாகக் குறைப்பற்கான நீண்டகால இலக்கை நனவாக்கும் வகையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தேவை இருந்தால் தொடர்ந்து வட்டியை அதிகரிக்கும்.
லெபனானின் ஹிஸ்புல்லா கட்சியின் ஆயுதப் படையினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக அவ்வமைப்பின் இராணுவ வசதிகளின் மீது வான் வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை நவம்பர் 9ஆம் நாளிரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
தற்போது, இப்பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்நிபந்தனைகள் இல்லை. ஆனால், இப்பேச்சுவார்த்தை மிகவும் அவசியமானதாக உள்ளது என்று ரஷியா கருதுவதாக அவர் தெரிவித்தார்.
உள்ளூர் அரசு இஞ்சி தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் ஆதரவளித்து வருகின்றது. உள்ளூர் விவசாயிகளின் வருமானம் அதிகரித்து வருகின்றது. சந்தைக்கு வழங்கும் வகையில், விவசாயிகள் சுறுசுறுப்பாக வேலை செய்து வருகின்றனர்.
சீனா மற்றும் அமெரிக்காவின் காலநிலைக்கான சிறப்புப் பிரதிநிதிகளின் தலைமையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காலநிலை குறித்து இரு தரப்புகள் நடத்திய பேச்சுவார்த்தை நவம்பர் 8ஆம் நாள் இனிமையாக நிறைவடைந்துள்ளது.
மூன்றாம் காலாண்டின் சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததை விட வலுவாக இருப்பது, சீன அரசு அண்மையில் தொடர்ச்சியான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவற்றால் 2023ஆம் ஆண்டிற்கான சீனாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பைச் சர்வதேச நாணய நிதியம் உயர்த்தியுள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் துணைத் தலைமை இயக்குநர் கீதா கோபிநாத் அம்மையார் கூறினார்.
சீன வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த ஆயுதக் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் சுன் சியௌ பொ, ஆயுதப் பரவல் தடுப்புப் பணிக்கு பொறுப்பான் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் துணை செயலாளர் ஸ்டூவர்ட் ஆகிய இருவரும் நவம்பர் 6ஆம் நாளில், வாஷிங்டன் டிசியில் கலந்தாய்வு நடத்தினர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு சீனாவின் அவசரகால நிவாரண உதவி பொருட்கள் 8ஆம் நாள், அந்நாட்டின் போக்ரா பன்னாட்டு விமான நிலையத்திற்கு சென்றடைந்துள்ளது.
சீனத் துணை அரசுத் தலைவர் ஹான் ட்செங் நவம்பர் 8ஆம் நாள் சிங்கப்பூரில் நடைபெற்ற 6ஆவது புத்தாக்கப் பொருளாதார மன்றக் கூட்டத்தின் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார்.
மத்திய கிழக்கு பிரச்சினைக்கான சீனாவின் சிறப்புத் தூதர் ஜாய்ஜுன், காசா பிரதேச அப்பாவி மக்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச மனித நேயக் கூட்டத்தில் பங்கெடுக்கவுள்ளார்.
பல நாட்களாக கடுமையான பனிப்புகை காரணமாக, இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் வரும் 13ஆம் முதல் 17ஆம் நாள் வரை ஒற்றை மற்றும் இரட்டை பதிவு எண் அடிப்படையில் வாகன இயக்கத்தை அமலாக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இக்கட்டுபாட்டு நடவடிக்கையை மீறும் ஓட்டுநர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அக்டோபர் 7ஆம் நாளிலிருந்து பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் காரணமாக, கிழக்குப் பகுதியில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் நிவாரணம் மற்றும் பணிகள் அமைப்பைச் சேர்ந்த 88 பணியாளர்கள் உயிரிழந்தனர் என்று ஐ.நா.வின் நிறுவனங்களுக்கிடையேயான நிரந்தரக் குழு நவம்பர் 5ஆம் நாளிரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
வயது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி பிரச்சினை முதலியவை காரணங்களாக, ஜான் பைடன் தொடர்ந்து அமெரிக்க அரசுத் தலைவராக பணியாற்ற முடியுமா என்ற ஐயம் எழுந்துள்ளதாகவும் கருத்துக் கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது.
அண்மையில், சீனாவின் சில நிறுவனங்கள் ரஷியாவுடன் தொடர்புடையவை என்ற சாக்குப்போக்கில், அவற்றைச் சிறப்புப் பெயர்ப் பட்டியலில் அமெரிக்க நிதித் துறை சேர்த்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் சீனாவின் ஜியாங் சூ மாநிலத்தின் நன் துங் நகரத்தின் விவசாயிகள், அழகைச் சேர்க்கும் புல் தரைவிரிப்பு வளர்ப்பின் மூலம் செழுமையாக்கியுள்ளனர்.
இவ்வாண்டு இறுதி வரை கூடுதல் எண்ணெய் உற்பத்தி குறைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து நீட்டிப்பதாக நவம்பர் 5ஆம் நாள் சௌதி அரேபியாவும் ரஷியாவும் முறையே அறிவித்தன.
இந்த ஆண்டு அமெரிக்க வேளாண்மை அமைச்சகம் தலைமையிலான பிரதிநிதிக் குழு சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் முதல் முறையாக பங்கேற்றுள்ளது என்று சீனாவுக்கான அமெரிக்கத் தூதரமும் அமெரிக்க சோயா அவரை ஏற்றுமதி சங்கமும் தகவல் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின் படி, காசா நகரத்தை இஸ்ரேல் படை முற்றிலுமாக சுற்றி வளைத்து, காசா பகுதியை இரண்டாகப் பிரித்துள்ளது. அதே வேளையில், காசா நகரத்தின் வடக்குப் பகுதியிலிருந்து தென் பகுதிக்கு அப்பாவி மக்கள் வெளியேற இஸ்ரேல் படை இன்னும் அனுமதிக்கும் என்று இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ராணுவப் படையின் செய்தித் தொடர்பாளர் டேனில் ஹெகரி 5ஆம் நாள் கூறினார்.
6ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி மற்றும் ஹோங்ஜியாவ் சர்வதேச பொருளாதார மன்றக்கூட்டத்தின் துவக்க நிகழ்வில் சீனத் தலைமை அமைச்சர் உரை நிகழ்த்தினார்.
ஆஸ்திரேலியா, கியூபா, கசகஸ்தான், செர்பியா உள்ளிட்ட நாடுகளின் தலைமை அமைச்சர்கள் இப்பொருட்காட்சியின் துவக்க விழாவிலும் தொடர்புடைய நிகழ்வுகளிலும் பங்கெடுக்க உள்ளனர்.
அயர்லாந்து துணைத் தலைமை அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சருமான மைக்கேல் மார்டின் நவம்பர் 6 முதல் 9ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அண்மையில் சீனாவின் ஹாங்காங் மீது தடை மசோதாவை முன்வைத்து, ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் சில பத்து அரசு அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் மீது தடை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரியுள்ளனர்.
சீனாவில் 24 சூரிய பருவங்கள் உள்ளன. அவற்றுள் 19ஆவது சூரியப் பருவமான லிதோங் பருவம் தொடங்கியதை அடுத்து சீனாவில் பல பிரதேசங்களில் பனி பெய்யத் துவங்கியுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, நவம்பர் 2ஆம் நாள், ஜோர்டான் துணைத் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான அய்மான் சஃபாடியினைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடினார்.
அக்டோபர் 25ஆம் நாள், ஜப்பானின் ஃபுகுஷிமா முதலாவது அணு உலையில் கதிரியக்கத் திரவம் தெறித்ததாக தகவல் வெளியாகியது. இப்புதிய விபத்து, பரந்தளவில் கவனம் ஈர்த்துள்ளது.
நாட்டிற்குள் பண வீக்கம் உள்ளிட்ட பொருளாதார அறைகூவலைச் சமாளிக்க, மொத்தம் 17 லட்சம் கோடி ஜப்பானிய யென், சுமார் 11300 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை ஜப்பான் அரசு நவம்பர் 2ஆம் நாள் அறிவித்துள்ளது.
நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தப் போவதில்லை என்று அமெரிக்க ஃபெடரல் வங்கி 1ஆம் நாள் முடிவெடுத்தது. அமெரிக்க ஃபெடரல் வங்கி தொடர்ந்து 2ஆவது முறையாக வட்டி விகித உயர்வை நிறுத்தி வைத்தது.
சீனா, நவம்பர் முதலாம் நாள் தொடங்கி, ஐ.நா பாதுகாப்பவையின் நவம்பர் மாதத்திற்கான தலைமை பதவி வகிக்கிறது. நவம்பரில் காசா நிலைமை, பாதுகாப்பவையின் நிகழ்ச்சி நிரலில் மிக முக்கியமான பணியாகும்
2023ஆம் ஆண்டு ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் முழு ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 4.6 விழுக்காட்டை எட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சியில் இதன் பங்களிப்பு கிட்டத்தட்ட மூன்றில் 2 பகுதி வகிக்கிறது
இஸ்ரேல் படைகள், அக்டோபர் 31-ம் நாள் தொடங்கி 24 மணி நேரத்துக்குள் காசாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஜபலியா அகதி முகாம் மீது 2 முறை வான் தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் குறைந்தபட்சம் 195 பேர் உயிரிழந்தனர்.
சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகத்தின் செய்தியாளர் கூட்டம் நவம்பர் முதல் நாள் நடைபெற்றது. இதில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய லட்சியத்தின் உயர் தரமுள்ள வளர்ச்சியை மேம்படுத்தி மக்களின் ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பது தொடர்பான தகவல்களை சீனத் தேசிய சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய ஆணையத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் அறிமுகப்படுத்தினர்.
சீன வணிக வாகனங்களின் உள்நாட்டு தேவையும் ஏற்றுமதியும் இந்த ஆண்டு, மிகவும் அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் செப்டம்பர் வரை, சீன வணிக வாகனங்களின் மொத்த ஏற்றுமதித் தொகை 5 இலட்சத்து 49 ஆயிரமாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 30.2 விழுக்காடு அதிகமாகும்.
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங்கின் அழைப்பின் பேரில், கிரேக்கத் தலைமையமைச்சர் கிரியாகோஸ் மிசோடாகிஸ் நவம்பர் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்தார்
சீன அறிவியல் தொழில் நுட்பத் துறையின் துணை அமைச்சரின் தலைமையிலான பிரதிநிதிக் குழு, நவம்பர் முதலாம் நாள் முதல் 2ம் நாள் வரை பிரிட்டனின் பலெச்லே பூங்காவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சிமாநாட்டில் பங்கெடுத்துள்ளது.
இஸ்ரேலிலிருந்து கொலம்பியத் தூதரைத் திரும்ப அழைப்பதாகவும், இஸ்ரேல், காசா பிரதேசத்தில் தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றும் கொலம்பிய அரசுத் தலைவர் பெட்ரோ அக்டோபர் 31ம் நாள் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ் அக்டோபர் 31ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் காசா பகுதியிலுள்ள நிலைமை மற்றும் நெருக்கடி மோசமாகும் அபாயம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தோடு, மனித நேயப் போர் நிறுத்தை நனவாக்கி காசா பகுதியின் மீதான உதவி அனுமதியை விரிவாக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
காசா பகுதியில் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக இஸ்ரேல் செய்த குற்றங்களைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலுடனான தூதாண்மை உறவை போலிவியா துண்டிக்க முடிவு செய்ததாக போலிவிய அரசு அக்டோபர் 31ஆம் நாள் அறிவித்தது.