சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 25ஆம் நாள் பெய்ஜிங்கில் இருந்தவாறு காணொளி வழியில் மனித உரிமைக்கான ஐ.நாவின் உயர் ஆணையர் பேச்லெட்டுடன் சந்திப்பு நடத்தினார்.
சீனப் பிரதிநிதிக் குழுவினர் மே 22 முதல் 24ஆம் நாள் வரை ஸ்விட்சர்லாந்தின் தாவோஸ் வட்டத்தில் உலகப் பொருளாதார மன்றத்தின் 2022ஆம் ஆண்டுக்கூட்டத்தில் பங்கெடுத்தனர்.
சீன நிதி அமைச்சகத்திலிருந்து கிடைத்த தகவலின்படி, சீனாவின் பசுமை மற்றும் கார்பன் நடுநிலை நகரங்கள் திட்டத்துக்கு உலக வங்கி அண்மையில் அங்கீகாரம் அளித்துள்ளது.
பிரிக்ஸ் நாடுகளின் தொழிற்துறை இணையம் மற்றும் எண்ணியல் தயாரிப்பு வளர்ச்சி குறியீடுகள் மே 24ஆம் நாள் சீனாவின் ஃபூஜியான் மாநிலத்தின் சியாமென் நகரில் வெளியிடப்பட்டன.
சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் வாழ்கின்ற பொது மக்கள் சிரிப்பின் மூலம் அவர்களது இன்பமான வாழ்க்கையை அனுபவித்து மகிழ்கின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு உச்சி மாநாட்டில் ரஷிய எண்ணெய் தடையாணை குறித்து தீர்வு காணுவதற்கு வாய்ப்பு குறைவு என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் தெரிவித்தார்.
சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, அழைப்பை ஏற்று, மே 26ஆம் நாள் முதல் ஜுன் 4ஆம் நாள் வரை, சாலமன் தீவுகள், கிரிபதி, சமோவா, ஃபிஜி, டோங்கா, வனுவாடு, பப்புவா நியூ கினியா, கிழக்கு திமோர் ஆகிய 8 நாடுகளில் அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொள்வார்
மனித உரிமைக்கான ஐ.நாவின் உயர் ஆணையர் பேச்லெட்டுடன், சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மே 23ஆம் நாள் குவாங்சோவில் சந்திப்பு நடத்தினார்.
சீனத் துணை அரசுத் தலைவர் வாங் ச்சீஷான் பிரேசில் துணை அரசுத் தலைவருடன் இணைந்து, சீன-பிரேசில் உயர்நிலை ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புக் கமிட்டியின் 6வது கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கினார்.
சீனா நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் நிரந்தர அமைதி மற்றும் தொடரவல்ல வளர்ச்சிக்கு மேலும் பெரும் பங்காற்றும் என்றும் வாங் யீ தெரிவித்தார்.
இவ்வாண்டு மே 23ஆம் நாள் சீன திபெத் தன்னாட்சிப் பிரதேசம் அமைதியாக சுதந்திரம் பெற்ற 71ஆவது ஆண்டு நிறைவு நாளாகும். திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஓவியம் போன்ற அழகான காட்சிகள் உங்களுக்காக.
சீன-பாகிஸ்தான் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 71வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பாகிஸ்தானுக்கான சீனத் தூதரகத்தில் மே 21ஆம் நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது
துருக்கி அரசுத் தலைவர் எர்டோகன், 21ஆம் நாள், நேட்டோ தலைமை செயலாளர், ஸ்வீடன் தலைமை அமைச்சர், பின்லாந்து அரசுத் தலைவர் ஆகியோருடன் முறையே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இவ்விரு நாடுகள் நேட்டோவில் சேர்வது பற்றி விவாதித்தார்.
அணு கழிவு நீரை ஜப்பான் கடலில் வெளியேற்றும் திட்டம் பற்றிய கவலையைத் தெரிவிக்க ஜப்பான் மக்களுக்கும் அதன் அண்டை நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கும் உரிமை உண்டு.
சீனாவின் சந்திர நாட்காட்டின்படி, நாளை ஷியோ மன் என்ற பருவ நாள். அதற்குப் பிறகு வடக்கு பகுதியில் கோடைக்காலப் பயிர்கள் பக்குவம் அடையத் தொடங்கும். தென்பகுதியில் மழை பெய்யும் காலம் வரும்.
காலை வணக்கம், “மே 20ம் நாள்” என்பதன் சீன மொழி உச்சரிப்பில் நான் உங்களைக் காதலிக்கிறேன் என்ற பொருள்~காதல் மற்றும் அன்பை வெளிக்காட்டும் காட்சி உங்களுக்காக~
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், மே 18ஆம் நாள், சீனாவின் நான்ஜிங் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று படித்து தாய்நாட்டுக்குத் திரும்பிய இளம் அறிஞர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி, வரவேற்பு மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கலை மீது உறுதியான மனப்பான்மையுடன் மர ஓவியத்தில் ஹுவாங் யுங் யூ என்பவர் 80 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். மர ஓவியம் மூலம் கவிதை, சிறுகதை உள்ளிட்ட பல வகை இலக்கியங்கள் மக்களுக்கு படைக்கப்பட்டுள்ளன.
பிரிக்ஸ் அமைப்பின் அரசியல் கட்சிகள், சிந்தனை கிடங்குகள் மற்றும் அரசுசாரா அமைப்புகளின் மன்றக்கூட்டம் மே 19ஆம் நாள் காணொலி வழியாக பெய்ஜிங்கில் தொடங்கப்பட்டது.
மே 18ஆம் நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் மத்திய வெளிவிவகார ஆணைய அலுவலகத்தின் தலைவருமான யாங்சியேச்சு, அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
சீனாவின் காதல் மலர் என்று அழைக்கப்பட்ட பியோனி, 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயிரிடப்படத் தொடங்கியது. பண்டைக்கால கவிஞர்கள் அடிக்கடி பியோனி மலரை கவிதையில் எழுதிப் போற்றினர்.
அசேலிய மலர்(Azalea)ஏப்ரல் மற்றும் மே திங்களில் பூத்துக் குலுங்குகிறது. இம்மலர்களின் அழகு கண்டு ரசிக்க மட்டுமல்ல, அவை தேநீர் மற்றும் மருந்து தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறன.
பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் வியாழக்கிழமை காணொளி வாயிலாக சந்திப்பு நடத்த உள்ளனர் என்று சீன வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய இரு நாடுகள், நேட்டோவில் சேர்வதற்கான விண்ணப்பங்களை நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்கிடம் இரு நாட்டுத் தூதர்கள் 18ஆம் நாள் அளித்தனர்.
இலங்கையில் மே 9 ஆம் நாள் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக, இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை கைதி செய்யப்பட்டுள்ளனர். சனத் நிஷாநாத மற்றும் மிலன் ஜெயதிலக்க ஆகிய இந்த இருவரின் மீது குற்றப் புலனாய்வு விசாரணை மேற்கொள்ளப்படும்.
மே 17ஆம் நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை, "சீனாவில் இந்தப் பத்து ஆண்டுகள்" என்ற தலைப்பில் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது.
அமெரிக்கா, தென்சீனக் கடல் பிரதேச அமைதியைப் பேணிக்காக்கும் முயற்சிக்கு மதிப்பளித்து, கோட்பாட்டின் நடைமுறையாக்கத்தில் தலையிட வேண்டாம் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ச்சாவ் லீச்சியேன் 16ஆம் நாள் தெரிவித்தார்.
சிச்சுவான் மாநிலத்தின் ஷெஹாங் நகரில் கோதுமை உள்ளிட்ட பயிர்களைப் பயிரிட்டு, விவசாயிகளின் வருமானம் அதிகரித்து வருகின்றது. அண்மையில், கோதுமை அறுவடை காலத்தில் நுழைந்துள்ளது.
பாகிஸ்தானுக்குச் செல்லும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் நடத்தப்படும் நோய் எதிர்ப்பு சோதனையை அதிகரிக்க அந்நாட்டு சுகாதார நிறுவனம் 15ஆம் நாள் முடிவு செய்துள்ளது.
உள்ளூர் செய்திகளின் படி, இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மே 26 ஆம் நாள் தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கையில் தொடர்ச்சியான கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 600 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
கட்டியமைக்கப்பட்டு வரும் இப்பாலம், 728 மீட்டர் நீளமும், 118 மீட்டர் உயரமும் கொள்கிறது. அடுத்த ஆண்டின் ஜுலை திங்கள் இப்பாலம் பயன்பாட்டுக்கு வருமென மதிப்பிடப்பட்டுள்ளது.
அற்புதமான மேக கடல், வானவில், சூரிய உதயம் மற்றும் சந்திரன் காட்சி போன்ற இயற்கை அழகு எங்கே பார்க்கலாம்?அண்மையில் சீன வானிலை சேவை சங்கம், சிறப்பு வானிலை காட்சியைக் கண்டுரசிக்கக் கூடிய 15 காட்சித்தலங்களை வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிக்கு உதவி அளிக்கும் விதமாக, அன்புமிக்க இந்த அப்பம் கடையில் பாதியளவு பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவர். அவர்கள் பயிற்சி பெற்ற பின், மற்ற பணியாளர்களுடன் சமமாகவும் கண்ணியமாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா தயாராக இருக்க வேண்டும் என்று உலகின் மிகப்பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றான கோல்ட்மேன் சாக்ஸின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி லாயிட் பிளாங்க்ஃபைன், மே 15ஆம் நாள் கூறினார்.
ஷாங்காய் மாநகரில் நகரவாசிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் மே 16ஆம் நாள் திங்கள்கிழமை முதல், கடைகள் மற்றும் சந்தைகள் உள்பட வணிகச் சேவை படிப்படியாக மீண்டும் திறக்கப்படும்
13ஆம் நாள் காணொலி வழியாக நடைபெற்ற காலநிலை மாற்றச் சமாளிப்பு குறித்த உயர்நிலை மாநாட்டில், பிரிக்ஸ் நாடுகளின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவின் மத்திய கல்வி அமைச்சகம் தற்போதைய வெப்ப அலையின் மோசமான விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிகளுக்கு வெளியிட்டுள்ளது என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
உக்ரைனுக்கான முன்பு கண்டிராத மதிப்புடைய உதவி மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனெட் அவை ஏற்றுக்கொள்வதை, குடியரசு கட்சியின் செனெட் அவை உறுப்பினர் ரான்ட் போல் தடை செய்துள்ளார்.
சீன வணிக அமைச்சகம் 12ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரை, சீனாவில் அந்நிய முதலீட்டில் உண்மையாகப் பயன்படுத்திய தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 20.5 விழுக்காடு அதிகமாகும்.
சீனத் தேசிய தானிய மற்றும் பொருள் இருப்புப் பணியகம் 12ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, தற்போது, நாடளவில் நடப்பு வருடாந்திர இலையுதிர்கால தானிய கொள்முதல் சுமுகமாக முடிந்தது.
ஷாங்காய் மாநகரில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய 9 ஆயிரம் தொழில் நிறுவனங்களில் சுமார் 4400 தொழில் நிறுவனங்கள் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளன.
சீனாவின் யுன்னன் மாநில அரசு, இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய 10ஆயிரம் உணவு பொதிகள், இன்று கிழக்கு மாநிலத்தின் திரிகோணமலையில் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இலங்கையின் முன்னாள் தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு காரணங்கள் கருதி, விமானம் மூலம் திருகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன புதன்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்திய ஏற்றுமதியாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்துடன் 2900 கோடி அமெரிக்க டாலர்கள் வரையிலான வாய்ப்பைப் பெறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கட்டாய உழைப்பு” என்ற விவகாரத்தை அமெரிக்கா அரசியல்மயமாக்கி, அதன் உள்ளடகம் மற்றும் பயன்பாட்டை விரிவாக்குவது, சர்வதேசச் சமூகத்தின் ஆரம்ப நோக்கத்தை மீறியுள்ளது.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, 2021ஆம் ஆண்டு அமெரிக்காவில் மருந்து மிகையளவு பயன்பாட்டால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை வரலாறு காணாத உயர் பதிவை எட்டியுள்ளது என்று அந்நாட்டின் சிஎன்என் செய்தி நிறுவனம் மே 11ஆம் நாள் தகவல் வெளியிட்டது.
இலங்கையில் ஏற்பட்ட வன்முறைக்கு பிறகு, பொதுச் சொத்துக்களைச் சூறையாடுபவர்கள் அல்லது பிறருக்குத் தீங்கு விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை நாட்டின் ஆயுதப் படைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் இருந்தபோதிலும், ரஷ்ய-உக்ரைன் மோதல் தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 3 மடங்கு அதிகரித்துள்ளது என்று உள்ளூர் செய்தித்தாள் ஒன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.
"2022 சீனா-ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் பற்றிய கருத்தரங்கு" 10ஆம் நாள் நடைபெற்றது. அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் மனித உரிமைகள் குறித்து இந்தக் கருத்தரங்கு கவனம் செலுத்துகிறது.
பிரீமியர் ஆராய்ச்சி நிறுவனமான இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் திங்களன்று வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவின் ஸ்மார்ட்போன் உற்பத்தி கடந்த ஆண்டை விட தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக 5 விழுக்காடு குறைந்துள்ளதாகவும், விற்பனையாளர்கள் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3 கோடியே 70 இலட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இலங்கை அரசுத் தலைவர் கோட்டாபய ராஜபசவின் உத்தரவின் பேரில் திங்கட்கிழமை இரவு வெளியிடப்பட்ட அரசு அறிக்கையில், தலைமை அமைச்சர் மஹிந்த ராஜபச திங்கட்கிழமை அன்று பதவி விலகியுள்ளார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் நிறுவப்பட்ட 100ஆவது ஆண்டு நிறைவு மாநாட்டில் தற்கால இளைஞர்களின் மீது அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் எதிர்ப்பார்ப்பு தெரிவித்துள்ளார்.
சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ மே 9ஆம் நாள் பெய்ஜிங்கில் இருந்தவாறு, உலக வளர்ச்சி முன்மொழிவுக்கான நண்பர்கள் குழுவின் உயர் நிலைக் காணொளிக் கூட்டத்தின் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார்.
இலங்கையின் முன்னணி எரிவாயு விநியோக நிறுவனமான லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட், புதிய எரிவாயு இருப்புகள் வரும் வரை உள்நாட்டு நுகர்வோருக்கு எரிவாயுவை வழங்க இயலாது என்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
உள்ளூர் மக்கள் தொடர்ந்து 10 ஆண்டுகளாக நாட்டுகோழிகளை வளர்த்து வருகின்றனர். தற்போது, ஆண்டுக்கு சுமார் ஒரு இலட்சம் கோழிகள் சந்தைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
2022ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் சிந்தனை கிடங்கின் 2ஆவது சர்வதேசக் கருத்தரங்கு அண்மையில் சீனாவின் ஜூங்ஜிங் மாநகரில் நேரிலும் இணையம் வழியிலும் நடைபெற்றது.
சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, கம்போடிய துணைத் தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான பிரக் சோக்ஹோனுடன் 8ஆம் நாள் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சர்வதேச நாணய நிதியம் மே 9 முதல் மே 23 வரை இலங்கையுடன் அடுத்த சுற்று தொழில்நுட்ப கலந்துரையாடல்களை தொடங்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழு தலைவர் மசாஹிரோ நோசாகி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், இலங்கை அரசுத்தலைவர் கோத்தபய ராஜபக்ச வெள்ளிக்கிழமை இரவு அவசரகால நிலையை அறிவித்தார்.
தெற்கு அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்கிழக்கு வங்கக் கடலைக் கடந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை அன்று தெரிவித்தது.
மே 5ஆம் நாள் முதல் இதுவரை, ஐ.நா மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன், அசுவ்ஸ்டோல் இரும்புருக்கு தொழிற்சாலையிலிருந்து 51 அப்பாவி மக்கள் வெளியேறியுள்ளனர்.
ஈரானின் செய்தி ஊடகங்கள் 7ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளரும், வெளிவிவகார நடவடிக்கை பணியகத்தின் துணைத் செயலாளருமான மோரா 10ஆம் நாள் ஈரானில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியை வழங்க சுகாதார அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமண வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தார்.
இந்தியாவின் மத்திய ரயில்வே அமைச்சகம் அடுத்த 20 நாட்களில் சுமார் 1,100 பயணிகள் ரயில்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டன.
சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, இந்தோனேசிய ஒருங்கிணைப்புத் துறை அமைச்சர் லுஹுட் ஆகியோர் 6ஆம் நாள் காணொளி வழியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உக்ரைனுக்கான புதிய சுற்று பாதுகாப்பு உதவித் திட்டத்தை அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் அறிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை 6ஆம் நாள் தகவல் வெளியிட்டது. இத்திட்டத்தின்படி, மேலதிக வெடிபொருட்கள், ரேடார் மற்றும் பிற சாதனங்களை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கவுள்ளது.
அமெரிக்கா தனது முன்னிலை மற்றும் ஏகபோக தகுநிலையை நிலைநிறுத்தும் விதம், விதிமுறைகளைப் பின்பற்றாமல் சீனாவின் இணையம் மற்றும் எண்ணியல் வளர்ச்சியைத் தடுத்து வருகிறது.
உக்ரைன் பிரச்சினை குறித்து ஐ.நா பாதுகாப்பவை 5ஆம் நாள் நடத்திய கூட்டம் ஒன்றில், சர்வதேச சமூகம் முழு முயற்சியுடன், போர் நிறுத்தத்தை முன்னேற்ற வேண்டும் என்றும், இம்மோதலால் ஏற்படும் மனித நேய பாதிப்பைக் குறைக்க வேண்டும் என்றும் சீனாவின் பிரதிநிதி சாங் ஜுன் வேண்டுகோள் விடுத்தார்.
அர்ஜென்டீனா சுகாதார அமைச்சகம் உள்ளூர் நேரப்படி மே திங்கள் 5ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, மே திங்கள் முதல், அந்நாட்டில் அறியப்படாத காரணத்தால் ஏற்படுகின்ற குழந்தை ஹெபடைடிஸ் நோயினால் பாதிக்கப்பட்டோரின் 8 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் உயிரியல் ஆய்வங்கள் உலகளவில் பரவலாக அமைந்துள்ளன. உக்ரைனிலுள்ள அதன் ஆய்வகத்தின் சுற்றுப்புறத்தில், 20 படையினர்கள் திடீரென சளிக்காய்ச்சலால் உயிரிழந்தனர்.
பழங்குடியினர்களின் துன்பகரமான அனுபவங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமெரிக்கா நிறுவப்பட்டது. பழங்குடியினர் பிரச்சினை, அமெரிக்காவின் குற்றச் செயலால் ஏற்பட்டது.
போலியான தகவல்களை ரஷியா பரப்பியதற்கு சீனா துணை புரிந்தது என்ற அமெரிக்காவின் செய்தியை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சாவ் லிச்சியன் 5ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மறுத்தார்.
தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவில் புதிய கரோனா வைரஸின் புதிய திரிபுகள் காணப்பட்ட போதிலும், கடும் நோய் மற்றும் உயிரிழப்பைத் தடுப்பதற்குதடுப்பூசி பயனுள்ளதாக உள்ளது.
உக்ரைன் அரசுத் தலைவர் செலன்ஸ்கி, 4ஆம் நாள் ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலில் அசோல் இரும்புருக்கு தொழிற்சாலையிலுள்ள மக்களின் வெளியேற்றத்திற்கு உதவி அளிக்குமாறு கேட்டு கொண்டார்.
ரஷிய அரசுத் தலைவர் புதின் சில நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் மேற்கொண்ட பகைமை நடவடிக்கைகளுக்குப் பதில் கொடுக்கும் விதம் சிறப்பு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான உத்தரவை 3ஆம் நாள் வெளியிட்டார்.
ரஷிய அரசுத் தலைவர் புதின் 3ஆம் நாள் பிரான்ஸ் அரசுத் தலைவர் மக்ரோனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உக்ரைன் நிலைமை குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.
சீனாவின் 31 மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள் மற்றும் மாநகரங்கள் அண்மையில் அடுத்தடுத்து முதல் காலாண்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கியக் குறியீடுகளை வெளியிட்டுள்ளன.
சீனாவுடனான வர்த்தக நெடுநோக்கு பற்றி அமெரிக்க அரசு உணர்வுபூர்வமாக ஆய்வு செய்து வருகிறது. சீனா மீதான கூடுதல் வரி வசூலிப்பு நீக்கம் கருத்தில் கொள்ளத்தக்கது என்று யேலன் தெரிவித்தார்.
ஜெர்மனி தலைமை அமைச்சர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அந்நாட்டில் பயணம் மேற்கொண்ட இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியுடன் 2ஆம் நாள் பெர்லினில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பெய்ஜிங் பங்குச் சந்தை மே 2ஆம் நாளிரவு வெளியிட்ட தகவலின் படி, 2021ஆம் ஆண்டில், இச்சந்தையில் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் மொத்த வருமானம் 6689 கோடி யுவானை எட்டியுள்ளது.
சீனத் தேசிய விளையாட்டு தலைமைப் பணியகத்தின் குளிர்கால விளையாட்டு நிர்வாக மையம் சின்ஜியாங்கில் மே தின விடுமுறைக்கான பனி விளையாட்டுப் போட்டியை நடத்தி வருகிறது.
மா யூடிங் உள்ளிட்ட 49 பேருக்கும், ஷோவ்காங் குழுமத்தைச் சேர்ந்த பெய்ஜிங் குளிர்கால விளையாட்டுப் போட்டிக்கான இளைஞர் சேவை குழு உள்ளிட்ட 16 குழுக்களுக்கும், 26வது சீன இளைஞர்கள் விருதுகள் வழங்கப்படும்.
ஜொல்மோ லுங்மா சிகரத்துக்கான சீனாவின் புதிய அறிவியல் ஆய்வு நடவடிக்கையைச் சேர்ந்த சிகரத்தில் ஏறும் நடவடிக்கை மே 2ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது.
மே 9ஆம் நாள், ரஷியாவின் தேசிய பாதுகாப்பு போருக்கான நினைவு நாளுக்கு முன், உக்ரைனின் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கையை நோக்கத்துடன் நிறுத்தாது என்று ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் மே முதல் நாள் தெரிவித்தார்.
அமெரிக்காவின் சிபிஎஸ் செய்தி நிறுவனம் ஏப்ரல் 30ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, அமெரிக்காவிலுள்ள கரோனா வைரஸ் பரவல் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகின்றது.
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் கெனுன் நகரில் கடந்த 23ஆம் நாள் பரவத் தொடங்கி குதிரைக் காய்ச்சலால், இப்போது வரை அங்குள்ள ஒரு தொழுவத்தில் தற்காலிகமாக வளர்ந்து வந்த 102 வனக் குதிரைகள் உயிரிழந்துள்ளன என்பதை அம்மாநிலத்தின் பல வாரியங்கள் ஏப்ரல் 30ஆம் நாள் உறுதி செய்துள்ளன.
5 லட்சம் யுவானுடன் சிறப்பு நிவாரண நிதியை உருவாக்குவதாக, கன்பியூஷியஸ் கழகம் என்ற சின்னத்தை நிர்வகிக்கும் சீனச் சர்வதேச சீன மொழி கல்வி நிதியம் ஏப்ரல் 30ஆம் நாள் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நிலவி வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு வெவ்வேறு அணுகுமுறைகளின் மூலம் தீர்வு காணப்படும் என்று அரசுத் தலைவர், தலைமை அமைச்சர் ஆகியோர் சர்வதேச உழைப்பாளர் தின வாழ்த்துச் செய்திகளில் தெரிவித்தனர்.
ஏப்ரல் திங்களில் தேசிய இருப்புப்பாதை மூலம் ஏற்றிச் செல்லப்பட்ட சரக்குகளின் எடை 33 கோடி டன்னை எட்டி, கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட 10.1 விழுக்காடு அதிகரித்தது.
அறிவியல் தொழில் நுட்ப வல்லரசை விரைவாக கட்டியமைப்பது, உயர் நிலை அறிவியல் தொழில் நுட்ப சுதந்திரத்தை நனவாக்குவது என்ற தலைப்பில், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தலைமை செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் எழுத்திய கட்டுரை, மே முதல் நாள் வெளியாகும் ஜியு ஷி என்ற இதழில் வெளியிடப்படவுள்ளது.
கடல் சட்டம் பற்றிய ஐ.நா பொது இணக்க உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 29ஆம் நாள் நடைபெற்ற உயர் நிலைக் கூட்டத்தில் ஐ.நாவுக்கான சீனாவின் துணை பிரதிநிதி தை பிங் உரை நிகழ்த்தினார்.
சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் ஏப்ரல் 29ஆம் நாள் பிற்பகல் அழைப்பின் பேரில் நார்வே தலைமை அமைச்சர் ஜோனஸ் காஹ்ர் ஸ்டோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
இலங்கையில் ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டு நாணய வருவாயை இலங்கை ரூபாயாக மாற்றுவதில் உள்ள விதிமுறைகளை விரைவில் நீக்க உள்ளதாக அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் கனான் நகரத்திலுள்ள புல்வெளி பகுதி ஒன்றில் 67 காட்டுக் குதிரைகள் ஒரு வாரத்துக்குள் மிகவும் பரவக் கூடிய அறியப்படாத தொற்று நோயினால் உயிரிழந்தன
ஐ.நா பொதுச் செயலாளர் குட்ரேஸுடன் கீவு நகரில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியதாக உக்ரைன் அரசுத் தலைவர் ஸெலென்ஸ்கி உள்ளூர் நேரப்படி 28ஆம் நாள் சமூக ஊடகத்தில் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் பல்வேறு இடங்களில் தொழிற்துறைமயமாக்க வளர்ச்சியின் மூலம், அற்புதமான புத்தாக்கம், பாரம்பரிய கிராமங்களின் தோற்றத்தையும் கிராம மக்களின் வாழ்க்கையையும் மாற்றி வருகிறது.
ஏப்ரல் 29ஆம் நாள், சீனாவின் கிராமப்புற வளர்ச்சி மேம்பாட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஓராண்டு நிறைவாகும். இந்தச் சட்டம், கிராமப்புற வளரச்சியைப் பன்முகங்களிலும் முன்னேற்றுவதற்கான சட்ட உத்தரவாதத்தை வழங்குகிறது. பன்முக வளர்ச்சி மற்றும் கட்டுமானத்தின் மூலம், சீன விவசாயிகள் மென்மேலும் செல்வமடைந்து வருகின்றனர்.
ஏப்ரல் 24ஆம் நாள், சீனாவின் விண்வெளி தினமாகும். விண்வெளிக் கனவு பற்றிய சீனக் குழந்தைகள் வரைந்த 60க்கும் மேற்பட்ட ஓவியங்கள் சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் 26ஆம் நாள் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, இவ்வாண்டு பிப்ரவரி வரை, 75 சதவீத அமெரிக்க குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் இரத்தத்தில் கரோனா வைரஸுக்கான எதிரணு கண்டறியப்பட்டது.
சீன-சாலமன் அரசுகளிடையே பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக் கட்டுக்கோப்பு உடன்படிக்கை இறையாண்மை கொண்ட இரு நாடுகளின் புனிதமான உரிமை மற்றும் இயல்பான ஒத்துழைப்பு ஆகும்.
2022 நியூயார்க் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட விழாவில், சி.ஜி.டி.என் செய்தி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட "A Musical Toast to 2022" எனும் புத்தாண்டு சிறப்பு இசை நிகழ்ச்சி தங்க விருது வென்றது.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்றிலிருந்து ஞானத்தைப் பெற்று, சீன-அமெரிக்க உறவை சீராக வளரும் பாதைக்குத் திரும்பச் செய்வதற்கு ஆக்கப்பூர்வ பங்கினை ஆற்ற வேண்டும்.
பல்கேரியா மற்றும் போலந்துக்கான எரிவாயு விநியோகம் ஏப்ரல் 27ஆம் நாள் முதல் தற்காலிகமாகத் துண்டிக்கப்படும் என்று ரஷிய இயற்கை எரிவாயு நிறுவனம் அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், சர்வதேச வரவு செலவின் சரிசம நிலை பற்றிய முதற்கட்ட புள்ளிவிவரங்களைச் சீனத் தேசிய அந்நிய செலாவணிப் பணியகம் 27ஆம் நாள் வெளியிட்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் துறையின் துணை இயக்குநர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் சீனா மிகப் பெரிய பொருளாதாரச் சமூகமாகும்.
சீனாவின் ஜிலின் மாநிலத்தின் ச்சாங்ச்சுன் நகரில், சமூக கட்டுப்பாடு படிப்படியாக நீக்கப்பட்டு, உற்பத்தி மற்றும் வாழ்க்கை ஒழுங்கு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
கோவிட்-19 நோய் பரவலால், அமெரிக்காவில் சுமார் 2 இலட்சம் குழந்தைகள் தங்கள் பெற்றோர் அல்லது ஆதாரவாளர்களை இழந்துள்ளனர். அந்த அனாதைக் குழந்தைகளுக்கு உதவியளிப்பதில், அமெரிக்க அரசு மெத்தனமாகச் செயல்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி பல்கலைக்கழகத்தில் உள்ள கன்பிஃசியெஸ் கழகத்தின் பள்ளி வாகனம் ஒன்றின் மீது ஏப்ரல் 26ஆம் நாள் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், 3 சீன ஆசிரியர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். 1 சீன ஆசிரியர் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சீனா வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கான கொவேக்சின் தடுப்பூசிக்கும் 5 முதல் 12 வயது குழந்தைகளுக்கான கார்பிவேக் தடுப்பூசிக்கும் அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு செவ்வாய்க்கிழமை அளித்துள்ளது.
சீன அரசு 24ஆம் நாள் வெளியிட்ட தொடர்புடைய புள்ளிவிவரங்களின் படி, 2021ஆம் ஆண்டில் சீனாவின் சர்வதேச அறிவுசார் காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை, தொடர்ந்து 3 ஆண்டுகளாக உலகில் முதலிடம் வகித்துள்ளது.
வகுப்பறையில் மட்டுமே கற்பது கல்வி அல்ல. சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் மாணவர்கள், பருவத்துக்கேற்ப அடிக்கடி படிமுறை வயல்களில் விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 25ஆம் நாள் பிரான்ஸ் அரசுத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இம்மானுவேல் மக்ரோனுக்கு செய்தி அனுப்பி, வாழ்த்து தெரிவித்தார்.
இலங்கையில் மருத்துவப் பொருள்கள் பற்றாக்குறையாக இருப்பதால் அடுத்து வரும் 90 நாள்கள் மிகவும் கடினமான காலமாக இருக்கும் என்று அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் சன்னா ஜெயசுமனா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
புதிதாக தயாரிக்கப்பட்ட மூங்கில் குடைகளுக்கு இந்தோனேசிய தொழிலாளர்கள் வண்ணம் தீட்டுகின்றனர். பல வெள்ளை குடைகள் ஆழ்ந்த ஜியாங்னான் பாணியைப் பிரதிபலிக்கின்றன.
பிரான்சில் ஏப்ரல் 24ஆம் நாள் நடைபெற்ற அரசுத் தலைவருக்கான 2ஆவது கட்டத் தேர்தலில், தற்போதைய அரசுத் தலைவர் மேக்ரான், தீவிர வலது சாரி கட்சி வேட்பாளர் லெப்பென் அம்மையாரை விட முன்னணி வகித்து, மீண்டும் அரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஏப்ரல் 18 முதல் 22ஆம் நாள் வரை, இலங்கைக்கு ஆதரவு வழங்கும் திட்டம் குறித்து, இலங்கை பிரதிநிதி குழுவினர்களுடன், சர்வதேச நாணய நிதியம், பயனுள்ள பேச்சுவார்த்தையை நடத்தினர்
ஏப்ரல் 24ஆம் நாள் சீனாவின் விண்வெளி தினம் மற்றும் நாட்டின் முதல் பூமி செயற்கைக்கோளான "டாங்ஃபாங்ஹாங்--1" வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதன் 52வது ஆண்டு நிறைவு விழாவாகும்.
2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை, அமெரிக்காவில் "மிகவும் ஆரோக்கியமற்ற" மற்றும் "அபாயகரமான" காற்று மாசு நாட்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது
சீனாவின் முதல் தேசிய வாசிப்பு மாநாடு 23ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. இதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் வாழ்த்து செய்தி அனுப்பினார்.
சீன அரசவை உறுப்பினரும் தேசிய பாதுகாப்பு அமைச்சருமான வேய் ஃபாங் ஹே, 20ஆம் நாள் அமெரிக்க தேசியப் பாதுகாப்பமைச்சர் ஆஸ்டினுடன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார்.
அமெரிக்காவில் 2020ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை 300-க்கும் மேற்பட்ட நர்சிங் ஹோம் என அழைக்கப்படும் பேணுகை இல்லங்கள் மூடப்பட்டுள்ளன அல்லது மூடப்பட உள்ளன என்று யுஎஸ்ஏ டுடே என்ற செய்தி ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட 35 விழுக்காடு வாய்ப்பு உண்டு என்று அரசுத் தலைவர் பைடனுக்கு நெருக்கமான பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர் என்று ஃபார்ட்ஷுயூன் இதழ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நிதித் தலைநகர் என அழைக்கப்படும் மும்பையில் சர்வதேச சொகுசுக் கப்பல் மாநாடு மே 14 முதல் 15 வரையில் நடைபெற உள்ளது. இது, இந்தியா நடத்தும் முதலாவது சர்வதேச சொகுசுக் கப்பல் மாநாடு என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் சோனோவால் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இலங்கையில் முகக் கவசம் அணிவதில் கொண்டு வரப்பட்ட தளர்வு முடிவை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை மாற்றி வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து முகக் கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 6000 முதல் 7000 மீட்டர் உயரமான பகுதியில் வெப்பநிலை குறைவு, ஆக்ஸிஜன் செறிவு குறைவு உள்ளிட்ட கடும் அறைகூவல்களை எதிர்கொள்ளும் சூழலில், கழிவுப் பொருட்களை சுத்தம் செய்வது ஒரு அபாயமான பணியாகும்.
சர்வதேச தொற்றுநோய் தடுப்புக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தி நோய் எதிர்பாற்றலின் இடைவெளியைக் குறைக்க வேண்டும் என பன்னாட்டு விருந்தினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முதல் காலாண்டில் வெளிநாடுகளின் அனைத்து தொழில்களுக்கான சீனாவின் நேரடி முதலீடு 3429 கோடி டாலரை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.9 விழுக்காடு அதிகரித்தது.
சீன அரசவை தகவல் தொடர்பு பணியகம் 21ஆம் நாள், புதிய யுகத்தின் சீன இளைஞர்கள் என்ற வெள்ளையறிக்கையை வெளியிட்டது. இளைஞர்களுக்கான சீனாவின் முதல் வெள்ளையறிக்கை, இதுவாகும்.
இலங்கை தனது நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த ஏற்கனவே மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது என இலங்கை அமைச்சகம் செவ்வாய்கிழமை அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
போஆவ் ஆசிய மன்றக் கூட்டத்துக்கான செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, 2022ஆம் ஆண்டில் ஆசிய பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் 4.8 விழுக்காட்டை எட்டும்.
இந்தியாவின் இக்னாமிக்ஸ் டைம்ஸ் நாளேடு வெளியிட்ட தகவலின்படி, இந்திய அரசு சார் எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் நிறுவனங்கள், இயன்றளவில் ரஷிய எண்ணெயைக் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளன.
பல நூற்றாண்டுகளாக, வாரணாசியின் நெசவாளர்கள் தங்கள் தொழில்நுட்ப சிறப்புக்குப் புகழ் பெற்றவர்கள். வாரணாசியின் புடவைகள் குடும்பத்தின் மரபுச் செல்வமாக அடுத்த தலைமுறையினருக்கு வழங்கப்படுவது வழக்கம்.
ரஷியாவும் உக்ரைனும் வெகுவிரைவில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று 7 நாடுகள் குழு, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ ஆகியவற்றின் தலைவர்கள் 19ஆம் நாள் நடைபெற்ற காணொளி கூட்டத்தில் தெரிவித்தனர்.
அமெரிக்கா இதர நாடுகளின் ராணுவக் கட்டுப்பாடு மற்றும் அணு ஆயுத பரவல் தடுப்புக் கொள்கை பற்றி ஒன்றுக்குப் பத்தாக பேசுவதுடன் ,தன்னைத் தானே மாதிரியாகப் பரப்பி கூறி வருகின்றது.
இலங்கையில் 17 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்ற நிலையில், திங்கள்கிழமை, மேலும் 21 புதிய இணை அமைச்சர்கள் அரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றனர்.
ஓட்டுநர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்ற உறுதியை தில்லி அரசு கடந்த வாரம் தெரிவித்தபோதிலும், வேலை நிறுத்தப் போராட்டத்தை ஓட்டுநர்கள் தொடங்கியுள்ளனர்.
தானிய மழை என்பது சீனாவின் பாரம்பரிய 24 சூரிய பருவங்களில் ஆறாவது சூரிய பருவமாகும். இவ்வாண்டின் தானிய மழை, ஏப்ரல் 20ஆம் நாளாகும். இக்காலத்தில் பயிர்கள் செழித்து வளரும்.
சீனாவால் உருவாக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை அணு உலையான ஹுவாலாங்-1 இன் மூலம் இயக்கப்படும் பாகிஸ்தானின் புதிய அணுசக்தி மின்னாக்கிகள் தொகுதி வணிக பயன்பாட்டுக்கு வந்தது என்று சீன தேசிய அணுசக்தி நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்தது.
முன்பு கண்டிராத அழுத்தத்தை ரஷியா பொருளாதாரம் ஏற்றுக் கொண்டுள்ளது. மேலை நாடுகள் ரஷியாவின் மீது தொடுத்த திடீர் பொருளாதாரத் தாக்குதல் தோல்வியடைந்துள்ளது என்று ரஷிய அரசுத் தலைவர் புத்தின் 18ஆம் நாள் தெரிவித்தார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட பல்வேறு நாடுகளின் மனித உரிமை நடைமுறைகள் குறித்த அறிக்கையில், வங்காளத் தேசத்தின் மனித உரிமைகளின் நிலைமை பற்றி குறைகூறப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் முக ஓவியத்தில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள், குழந்தைகளுக்கு முக ஓவியம் வரைகின்றனர். குழந்தைகள், வயிற்றுப் பிழைப்புக்காக, பழங்குடி புராணங்களின் கடவுள்களை போல் நிகழ்ச்சி அரங்கேற்றி வருகின்றனர்.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 27 லட்சத்து 1780 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட 4.8 விழுக்காடு அதிகம்.
ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கோவிட் 19 நோய் தொற்றைக் கூட்டாக சமாளிக்கும் வகையில், மருத்துவ முக கவசம் உள்ளிட்ட நோய் தொற்று தடுப்பு பொருட்களை சீனா, அரபு லீக்கின் செயலாளரகம் நன்கொடையாக வழங்கியது.
ஃபுசோ-சியாமன்-குவாங்சோ அதிவரைவு இருப்புப் பாதையிலுள்ள மேசோ விரிகுடா பகுதி, கடல் கடந்த பாலத்தில் ஏப்ரல் 15ஆம் நாள் தண்டவாளம் அமைக்கும் பணி தொடங்கியது. இது, இந்த இருப்புப் பாதையை முன்கூட்டியே பயன்பாட்டுக்குத் திறப்பதற்கு உறுதியான அடிப்படையை உருவாக்குகின்றது.
கடந்த சில ஆண்டுகளில், குய்சோ மாநிலத்தின் டோங்ரென் நகரம், கிராமப்புறச் சுற்றுச்சூழல் நிர்வாகத்தை வலுப்படுத்தி வருகின்றது. இது வாழ்க்கைச் சூழலின் தரத்தை மேம்படுத்துவதில் பொது மக்களின் மகிழ்ச்சி உணர்வை அதிகரிக்கிறது.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்திலுள்ள ஒரு தேசிய காட்டு விலங்கு பாதுகாப்பு மண்டலத்தில் இரண்டு கொக்குகள் கழுத்துக்களைக் குறுக்காக வைத்தன. நடனமாடுவதன் மூலம் அவை தங்களின் துணையைத் தேர்ந்தெடுகின்றன.
சுற்றுவட்டப் பாதையில் சீன விண்வெளி நிலையத்தின் கட்டுமானத்தை நிறைவேற்றும் வகையில், 2022ஆம் ஆண்டில் 6 விண்வெளிக் கடமைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி திட்டப்பணி அலுவலகத்தின் இயக்குநர் தெரிவித்தார்.
மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற சித்திரை திருவிழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்தனர், 8 பேர் காயமடைந்தனர். சனிக்கிழமை காலை அழகர் ஆற்றில் இறங்குவதைப் பார்க்க கூட்டத்தின் ஒரு பகுதியினர் முந்திச் சென்றபோது நெரிசல் ஏற்பட்டதாக மதுரை ஆட்சியர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கையில் பங்குகளின் விலை தொடர்ச்சியாக சரிந்து வந்ததால் ஏப்ரல் 18 முதல் 5 நாள்களுக்கு கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக மூடப்படும் என்ற உத்தரவை அந்நாட்டு பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சனிக்கிழமை பிறப்பித்தது.
சீனா கட்டமைத்து வரும் தியன் கொங் என்ற புதிய விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்த 3 சீன விண்வெளி வீரர்கள் ஏப்ரல் 16ஆம் நாள் 9:56 மணிக்கு, ஷென்சோ-13 விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்பினர்.
இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலுக்கு மத்தியில், எரிபொருள் நிலையங்களில் வாகனங்களுக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்
பாகிஸ்தானின் தேசியப் பாதுகாப்பு என்பது நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புடையது என்று அந்நாட்டு ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பெய்ஜிங் நேரப்படி ஏப்ரல் 16ஆம் நாள் 9:56 மணிக்கு, மனிதரை ஏற்றிச்செல்லும் ஷென்சோ-13 விண்கலம், விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக டொங்ஃபெங் தரையிறங்கு தளத்தை அடைந்தது என்று விண்வெளிப் பொறியியல் பணியகம் தெரிவித்தது.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் தைவானுக்குப் பயணம் செய்தது குறித்து சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வூ ஜியன் 15ஆம் நாள் உரை நிகழ்த்தினார்.
ஏப்ரல் 15ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், மோரிஷ்ஸ் அரசுத் தலைவர் லுபாங்கும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பி, இரு நாட்டு தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடினர்.
சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தில் "குளிர் துருவம்" என்ற புகழ்பெற்ற ஜென்ஹே நகரில் வசந்தகாலம் ஏப்ரல் திங்களின் நடுப்பகுதியில் வந்துள்ளது. அங்கு நிலவும் சிறப்புமிக்க வானிலை காரணமாக , ஆற்றில் மலர் போன்ற அற்புதமான பனிக்கட்டிக் காட்சியை கண்டுரசிக்கலாம்.
உள்ளூர் நேரப்படி 2022ஆம் ஆண்டின் ஏப்ரல் 14ஆம் நாள் பிரிட்டனின் தெற்கு கென்சிங்டனில் மிகச் சிறிய அளவிலான கலை கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சி, ஏப்ரல் 15ஆம் நாள் முதல் பொது மக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இனவெறி சாராம்சத்தை நிரூபித்துள்ள ஆசிய வம்சாவழியைச் சேர்ந்தவருக்கு எதிரான பாகுபாடு என்ற அறிக்கையை சீன மனித உரிமை ஆய்வு சங்கம் வெளியிட்டது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுத் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங், 12ஆம் நாள் சீன ஹெய்நான் மாநிலத்தின் வென் சாங் விண்கலன் ஏவு தளத்தில் ஆய்வு பயணம் மேற்கொண்டு தோழர்கள் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார்.
புதிய சர்வதேச ஒழுங்கு குறித்து அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கருத்து வேற்றுமை என்ற கட்டுரை ஜப்பானிய பொருளாதாரச் செய்தியேட்டில் வெளியிடப்பட்டது.