ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 25ஆவது ஆண்டு நிறைவு மற்றும் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 6ஆவது அரசு பதவி ஏற்பு விழா ஜுலை முதல் நாள் காலையில் கோலாகலமாக நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
தற்போது சீனர்களின் சராசரி ஆயுள்காலம் 77.93 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. உடல்நலம் தொடர்பான முக்கிய குறியீடுகள், நடுத்தர மற்றும் உயர் வருமானமுடைய நாடுகளின் முன்னணியில் உள்ளன.
சீனாவுக்கு மட்டுல்ல உலகிற்கும் துணைபுரியும் சீனாவின் சீர்திருத்தம், சீனப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு உலகப் பொருளாதாரத்தின் செழுமைக்கும் முக்கிய பங்காற்றியுள்ளது.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 5ஆம் நாள், அல்ஜீரிய அரசுத் தலைவர் தெபனுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி, சுதந்திர புரட்சியில் அல்ஜீரியா வெற்றி பெற்ற 60ஆவது ஆண்டு நிறைவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சிந்தனை கிடங்கு ஊடகங்களின் உயர் நிலை கருத்தரங்கு, உலக வளர்ச்சிக்கான பொது கடமை மற்றும் பங்களிப்பு என்ற தலைப்பில் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இக்கருத்தரங்கிற்கு வாழ்த்து செய்தி அனுப்பனார்.
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு சீன செஞ்சிலுவை சங்கம் கொடுத்த மீட்புதவி பொருட்களின் ஒப்படைப்பு விழா, 3ஆம் நாள், காபுலிலுள்ள ஆப்கான் செம்பிறை சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது. சீன தூதர் வாங் யூவும், இச்சங்கத்தின் தலைவர் ஹாரிஸும் இதில் கலந்துகொண்டனர்.
அமெரிக்காவின் அக்ரான் நகரில் பொது மக்கள் ஜுலை ஆர்ப்பாட்டம் நடத்தி, உள்ளூர் காவற்துறையினர் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜெய்லண்ட் வாக்கரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மியன்மாரின் பாகனில் நடந்த லாங்காங்-மெகாங் ஒத்துழைப்பு பற்றிய ஏழாவது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, கலந்து கொண்டார். அவர் 3ஆம் நாள், மியான்மர் வெளியுறவு அமைச்சர் வென்னா மவுங் ல்வினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனுக்கு தெற்கே உள்ள அமேகர் தீவில் பெரிய வணிக வளாகம் ஒன்றில் 3ஆம் நாள் பிற்பகல் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர் என்று டென்மார்க் காவற்துறை 4ஆம் நாள் தெரிவித்தது.
சீனாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிடையே அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு முன்னேற்ற கூட்டம் ஜுலை 2ஆம் நாள் நிங்சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் நடைபெற்றது.
ஜுலை 2ஆம் நாளிரவு மணிப்பூர் மாநில அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை 34 பேர் நிலச்சரிவில் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காணாமல் போயினர் என்று தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் 50ஆவது கூட்டத்தின் போது, ஆப்கான் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மனித உரிமை நிலைமை பற்றிய விவாதம் ஜுலை முதல் நாள் நடைபெற்றது.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பெங் லியுவான் அம்மையார் ஜூன் 30ஆம் நாள் கவுலூன் பண்பாட்டு மாவட்டத்திலுள்ள நாடக மையத்திற்குச் சென்று பார்வையிட்டார்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை முதல் நாள் புதிதாக பதவியேற்றுள்ள ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி லீ ஜியாச்சாவ்வைச் சந்தித்துரையாடினார்.
நாட்டுபற்றுடையவரே ஹாங்காங்கை ஆளுவது என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ஹாங்காங்கின் தனிச்சிறப்பான தகுநிலை மற்றும் நன்மைகளை நிரந்திரமாக நிலைநிறுத்துவதை மத்திய அரசு முழுமையாக ஆதரித்து வருகின்றது. சர்வதேச நிதி, கப்பல் போக்குவரத்து, வர்த்தகத்தின் மையம் என்ற தகுநிலையை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், ஹாங்காங்கின் ஜனநாயக அமைப்பு முறை, ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கொள்கைக்குப் பொருந்தியது. அதுவும், ஹாங்காங் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கும், ஹாங்காங்கின் செழுமை மற்றும் நிதானத்துக்கும் நலன் தரும் என்று தெரிவித்தார்.
சீன மத்திய அரசின் ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தையும், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் உயர்ந்த தன்னாட்சி அதிகாரத்தையும் ஒன்றிணைத்து உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம் தான், இப்பிரதேசத்தைச் சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
ஜுலை 1ஆம் நாள் காலை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் முன்னிலையில், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 6ஆவது அரசின் முக்கிய அதிகாரிகள், இப்பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி லி ஜியாச்சாவ்வின் தலைமையில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றனர்.
ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 25ஆவது ஆண்டு நிறைவு மற்றும் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 6ஆவது அரசு பதவி ஏற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
கோடைகால பயிர்களின் நிர்வாகத்தில் ஆள்ளில்லா ட்ரோன் மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இயந்திரக் கொள்வனவுக்காக உள்ளூர் விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கப்பட்டது.
ஹாங்காங், அனைவரையும் உள்ளடக்கிய சர்வதேச மாநகராகும். வாழ் நாளில் குறைந்தது ஒரு முறை ஹாங்காங்கிற்குச் சென்று தனிச்சிறப்பான பண்பாட்டை அனுப்பவிக்க வேண்டும்~
ஐ.நா.வுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஜாங் ஜுன் ஜூன் 30ஆம் நாள் ஐ.நா. பேரவையில் உலகச் சாலை பாதுகாப்பு பற்றி நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டில் உரை நிகழ்த்திய போது, வளரும் நாடுகளின் சாலை போக்குவரத்து அடிப்படை வசதிக் கட்டுமானத்துக்குச் சர்வதேசச் சமூகத்தின் மாபெரும் ஆதரவு அவசரமாகத் தேவைப்படுகிறது என்றார்.
ஜுலை 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் உலகளாவிய எதிர்கால அறிவியல் தொழில் நுட்பத்தின் புத்தாக்க ஒத்துழைப்பு மாநாட்டை சீனா நடத்த உள்ளது என்று சீன வர்த்தக முன்னேற்ற மன்றத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
நேட்டோ அமைப்பு, உக்ரைன் மோதலைச் சாக்குப்போக்காகக் கொண்டு, புதிய பனிப்போரைத் தொடுத்து, ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் வேண்டுமென்றே முரண்பாடு மற்றும் பிரிவினையை உருவாக்கக் கூடாது.
27ஆம் நாள், புடாபேஸ்ட் நகரில் நடைபெறுகின்ற 2022 உலக நீச்சல் சாம்பியன் பட்டப் போட்டியின் 10 மீட்டர் மேடை நீர் குதிப்பு போட்டியில், சீன வீராங்கனைகளான சேன் யுசி, ச்சுவன் ஹுங்ச்சன் இருவரும் தங்கம் வெள்ளை பதக்கங்களைப் பெற்றனர்.
ஏழு நாடுகள் குழுவின் உச்சிமாநாடு 28ஆம் நாள் ஜெர்மனியின் பவேரியாவி மாநிலத்தில் நிறைவடைந்தது. ஏழு நாடுகள் குழு உலகளாவிய பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாது என்று உலகளவில் பலர் விமர்சித்தனர்.
ஜூன் 24 மற்றும் 25ஆம் நாட்களில், 6ஆவது உலக நுண்மதி நுட்ப மாநாடு சீனாவின் தியன் சின் மாநகரில் நடைபெற்றது. செயற்கை நுண்மதி நுட்பம், நுண்மதி நுட்பத் தயாரிப்பு, டிஜிட்டல் பொருளாதாரம் முதலிய துறைகளில் கவனம் செலுத்திய இந்த மாநாடு காணொளி வழியில் நடைபெற்றது.
இங்கிலாந்தில் பிறந்த டேவிட் 2006ஆம் ஆண்டு சீனாவுக்கு வந்து வேலை செய்து கொண்டிருக்கின்றார். அவரது மனைவியால் தாக்கம் பெற்ற டேவிட் சீன பண்பாட்டில், குறிப்பாக தேயிலை பண்பாட்டில் வலுவான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.
கருக்கலைப்பின் உரிமை நிறுத்தம் தொடர்பான தீர்ப்பு, அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியது, பெண்களின் மனித உரிமை மற்றும் பாலியல் சமத்துவத்துக்குப் பெரும் தாக்கம் ஏற்படுத்தும்
2022 உலக நீர் குதிப்பு சாம்பியன் பட்ட போட்டி புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. ஜுன் 26ஆம் நாள் நடைபெற்ற 3 மீட்டர் பலகை இறுதி போட்டியில், சீன விளையாட்டு வீரர்கள் முதலிடம் பெற்று, முதலாவது தங்க பதக்கம் வென்றனர்.
சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஆப்கானிஸ்தான் தற்காலிக அரசின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் முட்டாகியுடன் ஜுன் 27ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.
சீனாவுக்கும் கயானாவுக்கும் இடையே தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50ஆம் ஆண்டுநிறைவை முன்னிட்டு, இரு நாட்டு அரசுத் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
நுண்மதி நுட்ப உற்பத்தி உள்ளிட்ட நுண்மதி நுட்ப அறிவியல் தொழில் நுட்பம் கடந்த பல ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது, இது சீனாவின் ஒட்டுமொத்த அறிவியல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றி வருகின்றது. மக்களின் வாழ்க்கையும் மேலும் அருமையாக இருக்கின்றது.
ஆப்கானிஸ்தான் கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ ஜுன் 24ஆம் நாள் ஆப்கானிஸ்தானின் தற்காலிக அரசின் வெளியுறவு அமைச்சர் முட்டாகிக்கு ஆறுதல் செய்தி அனுப்பினார்.
இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, ரஷிய அரசுத் தலைவர் விளாதிமிர் புதின் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் உலக வளர்ச்சிக்கான உயர்நிலை பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
ஜெனிவாவுக்கான சீனப் பிரதிநிதி குழுவும், சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேச அரசும், 23ஆம் நாள் மக்களின் இன்ப வாழ்வு மிக உயர்ந்த மனித உரிமை என்ற தலைப்பில் சின்ச்சியாங் தொடர்பான காணொளி பரப்புரை கூட்டத்தை நடத்தியுள்ளன.
ஆப்கானிஸ்தானின் தேவைகளுக்கு ஏற்ப அவசர மனித நேய உதவிகளை வழங்க சீனா விரும்புகின்றது. மேலும், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்துக்குப் பிந்தைய நிவாரணப் பணிக்காக சீனா அந்நாட்டுக்குக் கூடுதலான அவசர மனித நேய உதவியை வழங்க உள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின்24ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ ஜுன் 22ஆம் நாள், பதவியை விட்டு நாட்டுக்குத் திரும்பவுள்ள இந்திய தூதர் பிரதீப் குமார், தென்கொரிய தூதர் ஹாசுங் ஜாங் ஆகியோரைச் சந்தித்துரையாடினார்.
23ஆம் நாள் வரை, அமெரிக்காவிலுள்ள 25 மாநிலங்களில் 173 குரங்கம்மை நோய் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்தது. தென் ஆப்பிரிக்காவிலும் பல்கேரியாவிலும் முதல்முறையாக குரங்கம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 23ஆம் நாளிரவு காணொளி வழியாக, 14ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்.பிரிஸ்க் நாட்டு தலைவர்களின் 14ஆவது பேச்சுவார்த்தையின் பெய்ஜிங் முன்மொழிவு இப்பேச்சுவார்த்தையில் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
அமெரிக்காவின் சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, எதிர்காலத்தில் அமெரிக்கா ஜனநாயக நாடாக இருக்காது என கேள்விக்குப் பதிலளித்தவர்களில் 49 விழுகாட்டினர் கருதுகின்றனர்.
இவ்வாண்டு ஜனவரி முதல் மே வரை, சீனாவில் உள்ளபடியே அன்னிய முதலீட்டுப் பயன்பாட்டுத் தொகை, 56 ஆயிரத்து 420 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 17.3 விழுக்காடு அதிகரித்தது.
அமெரிக்கா, சட்டவிரோத மரண தண்டனை பிரச்சினையில் சீனா கவனம் செலுத்துகின்றது என்று ஐ.நா மனித உரிமை கவுன்சில் 50ஆவது கூட்டத்தில் சட்டவிரோத மரண தண்டனை விவகாரத்துக்கான சிறப்பு அதிகாரியுடன் பேசிய சீன பிரதிநிதி தெரிவித்தார்.
ஜுன் 22ஆம் நாளிரவு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், காணொளி வழியாக பிரிக்ஸ் வணிக மன்றத்தின் துவக்க விழாவில் கலந்துகொண்டு, கால வளர்ச்சி போக்கைக் உணர்ந்து, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
ஏப்ரலில் எரியாற்றல் விலை முன்பு கண்டிராத அளவில் உயர்ந்ததால், மே திங்கள் பணவீக்க விகிதம் 9.1 விழுக்காடாக உய்ர்ந்து, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
உக்ரைனின் தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான கருங்கடல் இடைவழியை உருவாக்குவது பற்றி ஐ.நா. முன்னெடுத்த 4 தரப்பு பேச்சுவார்த்தை அடுத்த வாரம் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற உள்ளது.
மனித உரிமைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றில், சொந்த நாட்டின் நடைமுறை நிலைமைகள் மற்றும் காலஓட்டத்திற்கு ஏற்ற ஒரு பாதையைத் தேடி அமைத்துக் கொண்டு, சீனா இப்பாதையில் முன்னேறி சென்று வருகிறது.
8ஆவது சீன-உலகமயமாக்கல் மன்றம் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சர்வதேச சமூகம், கையோடு சவால்களைச் சமாளிப்பதற்கான எதிர்பார்ப்பை, சீனாவுக்கான வெளிநாட்டுத் தூதர்கள் பலர் இம்மன்றத்தில் தெரிவித்தனர்.
நகரப்புற மற்றும் கிராமப்புற பள்ளிகளிலுள்ள அடிப்படை வசதிகள் ரீதியிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில், சீன மத்திய அரசு மொத்தமாக 40 ஆயிரம் கோடி யுவானுக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. உள்ளூர் அரசு 1 இலட்சம் கோடி யுவானுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்வதை இது கொண்டுள்ளது என்று சீன கல்வி அமைச்சகம் 21ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளது.
சீனாவில் புதிய ரயில்வே கால அட்டவணை ஜுன் 20ஆம் நாள் அமலுக்கு வந்தது. பல புதிய நிலையங்கள் மற்றும் புதிய பாதைகளின் திறப்புடன், நாடளவில் ரயில்வே பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்து திறன் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஜுன் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் காணொளி வழியாக, உலக வளர்ச்சி அறிக்கையை வெளியிடும் கூட்டத்தில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.
ஆக்ஸ்ட் திங்கள் இறுதியில், ரஷியாவுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்த வாய்ப்பு உண்டு என்று உக்ரைன் பேச்சுவார்த்தை பிரதிநிதிக் குழுவின் தலைவர் அலஹமியா கூறியதை உக்ரைன் ஊடகங்கள் மேற்கோள் காட்டியுள்ளன.
இந்திய செய்தி ஊடகம் 18ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, வடகிழக்கு இந்தியாவின் அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் பல நாட்களாக பெய்து வரும் புயல் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குறைந்தது 32 பேர் உயிரிழந்தனர்.
இன்று தந்தையர் தினமாகும். சீனாவின் புகழ்பெற்ற கலைஞரும் சிங்குவா பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியருமான ஹான் மெய்லின் ஒரு "உறுதியான மற்றும் இதமான அன்பு" என்று பீங்கானால் தயாரிக்கப்பட்டுள்ள காட்டன்-பேட் ஜாக்கெட்களை உருவாக்கியுள்ளார். அவை இத்தினத்துக்கான சிறப்பு அன்பளிப்பாகும்.
இலங்கைப் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே, தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பது தொடர்பான வரைபடத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வரும் திங்கட்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு, பொதுத்துறை ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுவார்கள் என இலங்கை அரசு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
யுனிசெப் 17ஆம் நாள் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின் படி, 2021ஆம் ஆண்டின் இறுதி வரை, மோதல், வன்முறை, பிற நெருக்கடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள வீடுவாசலின்றி அல்லல்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, 3 கோடியே 65 இலட்சமாகும். இது, இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, மிக உயர்வான பதிவாகும்.
விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர் ஜூலியன் அச்சான்ச்சை அமெரிக்காவுக்குத் திரும்பி அனுப்பும் கோரிக்கைக்கு, பிரிட்டன் உள்துறை அமைச்சர் பாடெல் அம்மையார் 17ஆம் நாள் அனுமதி கொடுத்தார்.
பிரிக்ஸ் அமைப்பின் நடப்புத் தலைவர் பதவி வகிக்கும் சீனா, பல்வேறு தரப்புகளின் ஆதரவுடன் 70க்கும் மேற்பட்ட கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
குரோஷியாவில் யூரோ பயன்பாடு குறித்து யூரோ பிரதேச நாடுகளின் 19 நிதி அமைச்சர்கள் வழங்கிய முன்மொழிவு, 16ஆம் நாள் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
புதிய தரை-கடல் பாதையில் சர்வதேச கூட்டு போக்குவரத்துக்கான சோதனை தொடர்வண்டி ஜுன் 16ஆம் நாள் சீனாவின் சோங்சிங் மாநகரிலுள்ள ஒரு நிலையத்திலிருந்து புறப்பட்டது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார ஆணைய அலுவலகத்தின் தலைவருமான யாங்சியேச்சு, 15ஆம் நாள் பெய்ஜிங்கில், காணொளி வழியாக, பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகளின் 12ஆவது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வியட்நாம் வெளியுறவு அமைச்சர் புய் தான் சான் ஆகியோர் உள்ளுர் நேரப்படி 15ஆம் நாள் புது தில்லியில் சென்றனர்.
உக்ரைனுக்கு 100கோடி டாலர் மதிப்புள்ள கூடுதல் பாதுபாப்புதவி மற்றும் 22.5கோடி டாலர் மதிப்புள்ள மனித நேய உதவியை வழங்கவுள்ளதாக அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் தெரிவித்தார்.
ஜெனிவாவிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கும் ஸ்வீட்சர்லாந்திலுள்ள இதர சர்வதேச அமைப்புகளுக்குமான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சென் சூ, 14ஆம் நாள் ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் 50ஆவது கூட்டத்தில் 30க்கும் மேலான நாடுகளின் சார்பாக உரை நிகழ்த்தினார்.
மே திங்கள் அமெரிக்காவில் உற்பத்தியாளர் விலைக் குறியீடு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 10.8 விழுக்காடும், கடந்த மாதம் இருந்ததை விட 0.8 விழுக்காடும் அதிகரித்துள்ளது.
கோதுமை அறுவடை பற்றி சீன வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகம் புதிதாக வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, நாடளவில் ஒரு கோடியே 64 இலட்சத்து 70 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் விளைந்த கோதுமை அறுவடை செய்யப்பட்டுள்ளது.
முத்தரப்பு ஒத்துழைப்புக்கான சர்வதேச மன்றக் கூட்டத்துக்கு சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 14ஆம் நாள் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.
சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் மே வரை, சீனாவில் உண்மையாகப் பயன்படுத்திய அந்நிய முதலீட்டுத் தொகை, 56 ஆயிரத்து 420 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 17.3 விழுக்காடு அதிகமாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய இணைய உள்கட்டமைப்பைக் சீனா உருவாக்கியுள்ளது. சீனாவின் 5G கட்டுமானம் உலகளாவில் முன்னணியில் உள்ளது என்று சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் துணைத் தலைவர் சின் கோ பின் 14ஆம் நாள் தெரிவித்தார்.
நேட்டோவில் சேர்வதற்கான ஸ்வீடன் மற்றும் பின்லாந்தின் செயல்முறை எதிர்பார்த்ததை விட மிகவும் சிக்கலானது. இரு நாடுகளும் நேட்டோவில் அனுமதிக்கப்படும் சரியான நேரத்தை உறுதி செய்ய முடியாது என்று நேட்டோ நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் 13ஆம் நாள் ஸ்வீடனில் தெரிவித்தார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், மத்திய வெளிவிவகாரக் கமிட்டியின் அலுவலகத் தலைவருமான யாங்ச்சேச்சு, ஜுன் 13ஆம் நாள் லக்சம்பர்கில் தேசிய பாதுகாப்புக்கான அமெரிக்க அரசுத் தலைவரின் ஆலோசகர் சுல்லிவனுடன் சந்திப்பு நடத்தினார்.
உலக வர்த்தக அமைப்பின் 12ஆவது அமைச்சர் நிலைக் கூட்டம் 12ஆம் நாள் ஜெனிவாவில் துவங்கியது. சீன வணிக அமைச்சர் வாங்வென்தாவ், இக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.
வட இந்தியாவில் உள்ள இமாச்சலப் பிரதேசத்தின் மலைப் பகுதியில், பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் கிராமப்புற நீர் வழங்கல் திட்டம் நடைபெற்று வருகிறது.
பின்லாந்து அரசுத் தலைவர் சவுலி நினிஸ்டோ, நேட்டோ அமைப்பின் தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஆகியோர் 12ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பாகிஸ்தான் புள்ளியியல் பணியகம் 11ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த வாரத்தில் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 23.98 விழுக்காட்டை எட்டி, வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது.
19ஆவது ஷங்ரி-லா பேச்சுவார்த்தையில் பிரதேச ஒழுங்கு குறித்த சீனாவின் விருப்பம் என்ற தலைப்பில், சீன அரசவை உறுப்பினரும் தேசியப் பாதுகாப்பு அமைச்சருமான வெய் ஃபெங் ஹெ 12ஆம் நாள் உரை நிகழ்த்தினார்.
மே திங்கள் அமெரிக்காவின் நுகர்வோர் விலைக் குறியீடு ஏப்ரலில் இருந்ததை விட 1 விழுக்காடும், கடந்த ஆண்டின் மே திங்களில் இருந்ததை விட 8.6 விழுக்காடும் அதிகரித்தது.
19ஆவது ஷங்ரி-லா பேச்சுவார்த்தை 10ஆம் நாள் சிங்கப்பூரில் துவங்கியது. 40 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 500 அதிகாரிகளும் அறிஞர்களும் இதில் கலந்துகொண்டனர்.
எண்ணியல் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, நிலையான வளர்ச்சி, விநியோக சங்கிலி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரிக்ஸ் நாடுகள் ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளன.
அமெரிக்கா-பிரிட்டன்-ஆஸ்திரேலியா இடையேயான அணு ஆற்றல் நீர்மூழ்கி கப்பல் ஒத்துழைப்பில், அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கைக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் அணு பொருட்களின் ஒப்படைப்பு, அதற்கான உத்தரவாதம் மற்றும் கண்காணிப்பு ஆகிய பிரச்சினைகள் பற்றி, சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் 9ஆம் நாள் பரிசீலனை செய்துள்ளது.
சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் ஐந்து திங்கள் காலத்தில் சீனாவின் வெளிநாட்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை, 16 இலட்சத்து 4 ஆயிரம் கோடி யுவானாகும்.
அமெரிக்காவில் கோவிட்-19 தடுப்பூசி போடுதலில் கடும் பிரச்சினை நிலவுகிறது என்று அந்நாட்டின் உயர்நிலை சுகாதார அதிகாரி எச்சரித்துள்ளதாக சிஎன்என் தகவல் வெளியிட்டது.
சீனாவின் பல்வேறு இடங்களில் வனத் தொழில் பொருளாதாரம் ஆக்கப்பூர்வமாக வளர்ந்து வருகின்றது. உள்ளூர் உயிரினச்சுற்றுச்சூழல் மேம்பட்டு, மக்கள் செல்வமடையத் துவங்கியுள்ளனர்.
சீனாவில் கோதுமை கோடைகால தானிய விளைச்சலில் 90 விழுக்காட்டுக்கும் மேல் இருக்கின்றது. தற்போது, பல்வேறு இடங்களிலுள்ள கோதுமை அறுவடை செய்யப்பட்டுள்ளது.
கோதுமை வயல்கள், விவசாய இயந்திரங்கள், வியர்வை, பூத்த முகங்கள் ஆகியவை அறுவடையின் ஓவியக் காட்சியை உருவாக்குகின்றன.
ஹாங்காங்குடனான பண்பாட்டுப் பரிமாற்றத்தை முன்னெடுக்கும் வகையில், சீன அரண்மனை அருங்காட்சியகம், ஹாங்காங் அரண்மனை பண்பாட்டு அருங்காட்சியகம் ஆகியவை ஜுலை திங்கள் கூட்டாக 7 கண்காட்சிகளை நடத்தவுள்ளன.
சீனத் தேசிய அந்நிய செலாவணிப் பணியகம் 7ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, மே இறுதி வரை, சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொகை, 3 இலட்சத்து 12 ஆயிரத்து 780 கோடி அமெரிக்க டாலராகும். இது, ஏப்ரல் திங்களை விட, 0.26 விழுக்காடு அதாவது, 810 அமெரிக்க டாலர் அதிகரித்துள்ளது.
சீன வேளாண் துறை மற்றும் கிராமப்புற அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, ஜுன் 6ஆம் நாள் வரை, சீனாவில் 2 கோடியே 75 இலட்சத்து 11 ஆயிரம் ஏகர் கோதுமை அறுவடை செய்யப்பட்டுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சாவ் லிஜியன் 6ஆம் நாள் அமெரிக்காவின் 2021ஆம் ஆண்டு சர்வதேச மத சுதந்திர அறிக்கையில் தவறான எண்ணங்களே நிறைந்துள்ளன என்று தெரிவித்தார்.
சீனாவின் சின்ஜியாங் பிரதேசத்தில் இன ஒழிப்பு நடத்தப்பட்டது என்பது, அமெரிக்க அரசியல்வாதிகள் வேண்டுமென்றே கூறி வரும் பொய்யாகும். அமெரிக்காவின் பொய் தூதாண்மையின் உருமாதிரியான படைப்பு இது.
சீன ஒருங்கிணைந்த மருத்துவக் காப்புறுதி தகவல் தளம் அண்மையில் உருவாக்கப்பட்டு, உலகளவில் மிகப் பெரிய அடிப்படை மருத்துவக் காப்புறுதி வலைப்பின்னலாக மாறியுள்ளது.
சுமார் 1.1 கோடி சீன மாணவர்கள் ஜுன் 7ஆம் நாள் கா காவ் தேர்வில் பங்கெடுக்கின்றனர். பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான கா காவ், மேல் நிலை மாணவர்களுக்கு மிகவும் முக்கியத் தேர்வாகும்.
இந்திய உத்தரக்கண்ட் மாநிலத்தில் 5ஆம் நாள் ஒரு பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தபட்சம் 25 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
மேற்கத்திய நாடுகள் சர்வதேச நிதி துறையில் தனது தகுநிலையைத் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தி வருவதால், சரக்கு ஏற்றுமதியில் ரூபிள் மூலமான பணப் பரிவர்த்தனை முறையை விரிவாக்க நேரிட வாய்ப்புள்ளது
கனடாவில் 58 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் முதன்மை பொதுச் சுகாதார அதிகாரி திரேசா தாம் ஜுன் 3ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.
ஒபெக் அமைப்பைச் சேர்ந்த பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் மற்றும் இதர பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் 29வது அமைச்சர்கள் கூட்டம் காணொலி வழியில் ஜூன் 2ஆம் நாள் நடைபெற்றது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில், உற்பத்தி நாளுக்கு 6 லட்சத்து 48 ஆயிரம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
பிரிக்ஸ் நாடுகளின் கட்டுக்கோப்பின் கீழ் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சாவ் லிஜியன் ஜூன் 2ஆம் நாள் அறிமுகப்படுத்தினார்.
சீனப் பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சகம், ஹூ பெய் மாநில அரசு ஆகியவை ஏற்பாடு செய்த 2022ஆம் ஆண்டின் டிராகன் படகு பண்பாட்டு விழா ஜுன் 2ஆம் நாள் ஹு பெய் மாநிலத்தின் யீச்சாங் நகரில் துவங்கியது.
சீனாவின் அந்நிய செலாவணிச் சந்தை அடிப்படையில் நிதானத்தை நிலைநிறுத்தி, உறுதியான நெகிழ்வுத்தன்மையைக் காட்டியுள்ளது. ரென்மிபி மாற்று விகிதமும் ஒட்டுமொத்தமாக நியாயமான மற்றும் சீரான அளவில் இருக்கின்றது என்று சீன மக்கள் வங்கியின் துணைத் தலைவரும் சீனத் தேசிய அந்நிய செலாவணிப் பணியகத்தின் தலைவருமான பான் கோங்ஷெங் ஜூன் 2ஆம் நாள் தெரிவித்தார்.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தரவுகளின்படி, அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு வன்முறை, 0 முதல் 19 வரை வயதான குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உயிரிழப்புக்கு முக்கியக் காரணமாக மாறியுள்ளது என்று இந்திய எக்ஸ்பிரெஸ் ஊடகத்தின் இணையத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஜூன் முதல் நாள் மாலை 5:00 மணியளவில், சிச்சுவான் மாநிலத்திலுள்ள யான் அன் நகரின் லூஷன் மாவட்டத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆகப் பதிவான நிலநடுக்கம் நிகழ்ந்தது. 17:03 மணியளவில், போக்சிங் மாவட்டத்தில் ரிக்டர் அளவுகோலில் 4.5ஆகப் பதிவான நிலநடுக்கம் நிகழ்ந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 14 காயமடைந்தனர்.
சீனாவின் குவாங்தொங் மாநிலத்தின் சியாஷா கிராமத்தைச் சேர்ந்த ட்சாங் சாவ்வெய் என்பவர் டிராகன் படகுகளின் தலை மற்றும் வால் பகுதிகளைச் சுறுசுறுப்பாகத் தயாரித்து வருகின்றார்.
ஜியாங்சூ மாநிலத்தின் காவ்யூ நகரைச் சேர்ந்த 100க்கும் மேலான வாத்து முட்டை தொழில் நிறுவனங்கள் சந்தையின் தேவைக்கிணங்க சுறுசுறுப்பாக உற்பத்திச் செய்து வருகின்றன.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் விதம் 5 நிதிக் குழுவும், 10 மேற்பார்வைக் குழுவும் விரைவில் அமைக்கபட உள்ளதாக அந்நாட்டு தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். தற்போது நிதித் துறையில் 3 குழுக்கள் உள்ளதாகவும், அவற்றுடன் புதிய குழுக்கள் விரைவில் இணையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேபாளத்தில் பயணியர் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணயைம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
அமெரிக்க செய்தி ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின் படி, அமெரிக்காவின் ஓக்லாஹோமா மாநிலத்தில் 29ஆம் நாள் நடைபெற்ற இசை விழாவில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் நிகழ்ந்தது.
நேபாளத்தின் போக்ராவிலிருந்து மஸ்டங் மாவட்டத்துக்கு 22 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை மாயமாகியதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களுக்கு நிதி ஆதரவு அளிக்கும் விதம், புதிய நிவாரணத் தொகை உதவியாக, 14 கோடி டாலர் நிதியை அந்நாட்டு தலைமை அமைச்சர் ஷபாஸ் ஷாரிஃப் அறிவித்துள்ளார்.
மே 29ஆம் நாள் 20ஆவது சர்வதேச அமைதி காப்புப் படையினர் தினமாகும். சீனப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, கடந்த 30 ஆண்டுகளில், சீன இராணுவம் தொடர்ச்சியாக ஐ.நா அமைதி காக்கும் 25 நடவடிக்கைகளுக்கு, ஏறக்குறைய 50 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் வீரர்களை அனுப்பியுள்ளது. நடைமுறை நடவடிக்கைகளால், உலக அமைதியைச் சீனா பேணிக்காத்து வருகின்றது.
சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளித் திட்டப்பணி அலுவலகம் வெளியிட்ட செய்தியின் படி மே 29ஆம் நாள், மனிதரை ஏற்றிச் செல்லும் சென் சோ 14 மனிதரை விண்கலம் மற்றும் லாங்மார்ச்-2F ஏவூர்தி ஆகியவை சேர்க்கை ஏவுதளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் நாட்டுக் கொள்கை பற்றி அண்மையில் உரை நிகழ்த்திய போது, சர்வதேச ஒழுங்கிற்கு மிக தீவிரமான நீண்டகால அறைகூவல்களைச் சீனா உருவாக்கியுள்ளது என்றார்.
அமெரிக்காவில் முதன்முறையாக கொவைட்-19 தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டபோது, அப்போதைய அரசுத் தலைவர், வைரஸ் பரவுவதற்கு வழியில்லை என்றும் மறைந்து விடும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 30 பேர் உயிரிழந்துள்ளனர், 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
கிராமப்புறங்களுக்குப் புத்துயிர் ஊட்டும் விதம், சீன நிறுவனங்களால் தொடங்கப்பட்ட கிராமங்களை நேசிக்கும் திட்டம் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கெண்டா கிராமத்தில் தொடங்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா 27ஆம் நாள் நடைபெற்றது.
அண்மையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ப்லின்கன் சீனா பற்றி நிகழ்த்திய உரையை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் 27ஆம் நாள் மறுத்துரைத்தார்.
இந்த வாரம் வரை, அமெரிக்காவிலுள்ள 7 மாநிலங்களில் 9 குரங்கம்மை நோய் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உள்ளூர் நேரப்படி மே 26ஆம் நாள் அறிவித்தது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் உவால்டி நகரிலுள்ள துவக்கப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம், அமெரிக்காவை அதிர்ச்சிய செய்த போதிலும், அமெரிக்காவின் தேசிய ரைபில் துப்பாக்கி சங்கம், உள்ளூர் நேரப்படி மே 27ஆம் நாள் ஹூஸ்டனில் மூன்று நாள் துப்பாக்கி விளம்பர நிகழ்ச்சியை நிறுத்தமின்றி தொடர்ந்து தொடங்கி வைத்தது.
சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் மே 27ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, ஏப்ரல் திங்களில், சீனாவின் சில பகுதிகளில் தொற்றுநோய் பாதிப்பு காரணமாக, தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் இயக்கத்திற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீன சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 26ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், 2021ஆம் ஆண்டு சீன இயற்கைச் சூழ்நிலைக்கான அறிக்கை வெளியிடப்பட்டது.
சீனாவுக்கும் பசிபிக் தீவு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பின் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் 25ஆம் நாள் ஆதாரமின்றி குற்றஞ்சாட்தினார்.
உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பையும் பொருளாதார கட்டமைப்பின் மாற்றத்தையும் மேற்கொண்டு வரும் சீனா, உலகளவில் அன்னிய முதலீடுகளுக்கு ஈர்ப்பாற்றல் மிக்க நாடாக தொடர்ந்து இருந்து வருகிறது
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியிலுள்ள உணவகம் ஒன்றில் மே 23ஆம் நாள் எரிவாயு வெடிப்பு ஏற்பட்டது. அவ்விபத்தில் 120க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இவர்களில் 106 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
சீனப் பிரதிநிதிக் குழுவினர் மே 22 முதல் 24ஆம் நாள் வரை ஸ்விட்சர்லாந்தின் தாவோஸ் வட்டத்தில் உலகப் பொருளாதார மன்றத்தின் 2022ஆம் ஆண்டுக்கூட்டத்தில் பங்கெடுத்தனர்.
சீன நிதி அமைச்சகத்திலிருந்து கிடைத்த தகவலின்படி, சீனாவின் பசுமை மற்றும் கார்பன் நடுநிலை நகரங்கள் திட்டத்துக்கு உலக வங்கி அண்மையில் அங்கீகாரம் அளித்துள்ளது.
பிரிக்ஸ் நாடுகளின் தொழிற்துறை இணையம் மற்றும் எண்ணியல் தயாரிப்பு வளர்ச்சி குறியீடுகள் மே 24ஆம் நாள் சீனாவின் ஃபூஜியான் மாநிலத்தின் சியாமென் நகரில் வெளியிடப்பட்டன.
சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் வாழ்கின்ற பொது மக்கள் சிரிப்பின் மூலம் அவர்களது இன்பமான வாழ்க்கையை அனுபவித்து மகிழ்கின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு உச்சி மாநாட்டில் ரஷிய எண்ணெய் தடையாணை குறித்து தீர்வு காணுவதற்கு வாய்ப்பு குறைவு என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் தெரிவித்தார்.
சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, அழைப்பை ஏற்று, மே 26ஆம் நாள் முதல் ஜுன் 4ஆம் நாள் வரை, சாலமன் தீவுகள், கிரிபதி, சமோவா, ஃபிஜி, டோங்கா, வனுவாடு, பப்புவா நியூ கினியா, கிழக்கு திமோர் ஆகிய 8 நாடுகளில் அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொள்வார்
மனித உரிமைக்கான ஐ.நாவின் உயர் ஆணையர் பேச்லெட்டுடன், சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மே 23ஆம் நாள் குவாங்சோவில் சந்திப்பு நடத்தினார்.
சீனத் துணை அரசுத் தலைவர் வாங் ச்சீஷான் பிரேசில் துணை அரசுத் தலைவருடன் இணைந்து, சீன-பிரேசில் உயர்நிலை ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புக் கமிட்டியின் 6வது கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கினார்.
சீனா நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் நிரந்தர அமைதி மற்றும் தொடரவல்ல வளர்ச்சிக்கு மேலும் பெரும் பங்காற்றும் என்றும் வாங் யீ தெரிவித்தார்.
இவ்வாண்டு மே 23ஆம் நாள் சீன திபெத் தன்னாட்சிப் பிரதேசம் அமைதியாக சுதந்திரம் பெற்ற 71ஆவது ஆண்டு நிறைவு நாளாகும். திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஓவியம் போன்ற அழகான காட்சிகள் உங்களுக்காக.
சீன-பாகிஸ்தான் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 71வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பாகிஸ்தானுக்கான சீனத் தூதரகத்தில் மே 21ஆம் நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது
துருக்கி அரசுத் தலைவர் எர்டோகன், 21ஆம் நாள், நேட்டோ தலைமை செயலாளர், ஸ்வீடன் தலைமை அமைச்சர், பின்லாந்து அரசுத் தலைவர் ஆகியோருடன் முறையே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இவ்விரு நாடுகள் நேட்டோவில் சேர்வது பற்றி விவாதித்தார்.