சீன அரசுத் தலைவர் ஹூச்சிந்தாவும் இந்திய அரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டில் அம்மையாரும் 27ம் நாள் பெய்சிங்கில் சந்தித்துரையாடினர். சீன-இந்திய நெடுநோக்கு கூட்டாளியுறவை மேலும் வளர்ப்பது உள்ளிட்ட பொது அக்கறைக் கொண்ட பிரச்சினைகள் பற்றி இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில், இரு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன், இரு நாட்டுறவு வளர்ந்து வருகிறது என்று ஹூச்சிந்தாவ் தெரிவித்தார். சீன-இந்திய நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவின் வளர்ச்சி, இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்குப் பொருந்தியது. இது இப்பிரதேசம் மற்றும் உலகின் அமைதி, நிதானம் மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய-சீன உறவு, உலக மற்றும் நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இந்தியாவின் அனைத்து கட்சிகளும், இரு நாட்டுறவை மேலும் வளர்க்க ஆதரவளிக்கின்றன என்றும் பிரதீபா தேவிசிங் பாட்டில் அம்மையார் தெரிவித்தார். பொருளாதார வர்த்தக உறவு, இந்திய-சீன உறவின் ஆதாரத்தூண்ணாகும் என்றும், இரு தரப்புகளும் உறுதிப்படுத்திய வர்த்தக இலக்குகளை நனவாக்க கூட்டாக பாடுபட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.