ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் இந்தியத் தேசிய அரங்கு நாள், 18ம் நாளாக இன்று துவங்கியது. இப்பொருட்காட்சி மண்டல மையத்தில் நடைபெற்ற கொண்டாட்ட விழாவில், இந்திய மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஜேயோதிராதித்யா மாதவராவ் சிந்தியா, சீனத் துணை வணிக அமைச்சர் சென்ச்சியான் இருவரும் கலந்து கொண்டு, உரை நிழ்த்தினர்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில், இந்தியாவின் தனிச்சிற்பபுடைய நாகரிகமும் தலைசிறந்த எண்ணங்களும் வெளிப்படுத்தப்படுகின்றன. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த பயணிகளின் மனத்தில், அவை ஆழப்பதிந்துள்ளன என்று சென்ச்சியான் கூறினார்.
இந்தியாவும் சீனாவும், பண்டைகால நாகரிக வாய்ந்த நாடுகளாகும். இரு நாட்டு மக்களிடையே பண்பாட்டுத்தொடர்பு நீண்டகாலமாக நிலவியுள்ளது. தற்போது, இரு நாடுகளின் நலன்கள், முன்பு காணாத வழிமுறைகளில் நெருக்கமாக இணைக்கப்படுகின்றன. எதிர்காலத்தில், இரு நாடுகளின் சமூகப் பொருளாதார வளர்ச்சி இலக்குகள் மேலும் நெருக்கமாக இணைக்கப்படுவது உறுதி என்று சிந்தியா கருத்து தெரிவித்தார்.