35 லட்சத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டவர் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டனர். இதுவரை கடும் சுற்றுலாப் பாதுகாப்பு விபத்து எதுவும் ஏற்பட வில்லை என்று சீனத் தேசிய சுற்றுலா ஆணையத்தின் தலைவர் shao qi wei 26ம் நாள் ஷாங்காயில் கூறினார்.
2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி வளரும் நாடுகளில் நடைபெறுகின்ற முதலாவது உலகப் பொருட்காட்சியாகும். அதற்கான பரப்புரைப் பணி சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டது. அது இயங்கிவரும் பயனும் உயர்வானது. இப்பொருட்காட்சியை 7 கோடி பயணிகள் பார்வையிடுவர் என்ற இலக்கு வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது என்று அவர் தொடர்புடைய கூட்டத்தில் கூறினார்.
சுற்றுலாக் குழுக்கள் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டோரில் முக்கிய பகுதியாகும். அக்டோபர் 24ம் நாள் வரை பயணக் குழுக்கள் மூலம் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டோரின் எண்ணிக்கை உலகப் பொருட்காட்சியில் சுற்றுலா பயணம் மேற்கொண்டோரின் எண்ணிக்கையில் சுமார் 30 விழுக்காடு வகித்துள்ளது என்றார் அவர்.