ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுத் தீபத் தொடரோட்டம் 6ம் நாள் தொடர்ந்து குவாங்சோ மாநகரில் நடைபெறுகின்றது.
அன்று 100 விளையாட்டு வீரர்கள் 10 கிலோமீட்டர் தொலைவில் ஒருவர் மற்றவரிடம் தீபத்தை ஒப்படைக்க இறுதியில் தீபம் லோக்காங் நகரவாசி சதுக்கத்துக்கு அனுப்பப்பட்டது.
தீபத் தொடரோட்ட நடவடிக்கை குவாங்சோ மாநகரில் 7 நாட்கள் நடைபெற்ற பின் ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுத் தீபம் 12ம் நாள் ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுத் துவக்க விழா நடைபெறும் இடத்துக்கு அனுப்பப்படும்.திட்டத்தின் படி டிசெம்பர் 12ம் நாள் குவாங்சோ ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கி 19ம் நாள் நிறைவடையும். 45 ஆசிய நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் மூவாயிரம் விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொள்வர்.