2011ம் ஆண்டு உலக மக்கள் தொகை நிலைமை பற்றிய அறிக்கையை ஐ.நா மக்கள் தொகை நிதியத்தின் செயற்குழுத் தலைவர் Babatunde Osotimehin 26ம் நாள் இலண்டனில் வெளியிட்டார். மக்கள் தொகை அதிகரிப்பினால் ஏற்பட்ட அறைகூவலை உலக மக்கள் கூட்டாக சமாளிக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார். இளைஞர்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தால், இந்த அறைகூவல், நீண்டகால வளரும் வாய்ப்பாக மாறக் கூடும் என்று அவர் கூறினார்.
அக்டோபர் திங்கள் 31ம் நாள் உலக மக்கள் தொகை, 700 கோடியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டது. மனித குல மருத்துவ சிகிச்சை சுகாதார நிலைமையின் மேம்பாட்டால் ஏற்பட்ட சாதனைகளை இது காட்டியது. முதியோர், உயிரினச்சுற்றுச்சூழல் முதலிய பிரச்சினை, தொடரவல்ல வளர்ச்சிக்கு அறைகூவலை ஏற்படுத்தும் என்றும் இவ்வறிக்கை கூறியது.