சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவின் பேச்சு குறித்து சர்வதேசச் சமூகத்தின் கருத்துக்கள்
மனம் ஒருமித்து, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வளர்ச்சி பெறும் எழுச்சியை வெளிக்கொணர்ந்து, உலகப் பொருளாதார வளர்ச்சியையும் நிதி நிதானத்தையும் முன்னேற்ற, இருபது நாடுகள் குழு பாடுபட வேண்டும் என்று 20 நாடுகள் குழு உச்சிமாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் குறிப்பிட்டார். இது பற்றி வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் வல்லுனர்களும் அறிஞர்களும் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
இவ்வுச்சிமாநாட்டின் மூலம் பொருளாதார அதிகரிப்பை நிலைநிறுத்தி, நிதி நிதானத்தை முன்னேற்றும் தெளிவான தகவல்களை சர்வதேசச் சமூகத்திற்கு தெரிவிக்க ஹுச்சிந்தாவ் விரும்பியதாக Reuters நிறுவனம் கட்டுரையில் கூறியது.
பிரான்ஸின் Le Figaro வெளியிட்ட செய்தியில், ஹுச்சிந்தாவின் பேச்சு, ஐரோப்பிய கடன் நெருக்கடிக்கு தீர்வு காணும் நம்பிக்கையை தெரிவித்தது என்று குறிப்பிட்டது.