சீனா உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த 10வது ஆண்டு நிறைவுக்கான உயர் நிலை கருத்தரங்கு 11ம் நாள் முற்பகல் பெய்சிங்கில் நடைபெற்றது.
எதிர்காலத்தை எதிர்நோக்கி, அமைதியான வளர்ச்சி என்ற பாதையில் சீனா உறுதியாக காலடியெடுத்து வைத்து, கூட்டு வளர்ச்சியைத் தூண்டும். பலதரப்பு வர்த்தக அமைப்பு முறையைப் பேணிக்காத்து, உலகப் பொருளாதார கட்டுப்பாட்டில் பங்கெடுக்கும் என்று சீன அரசுத் தலைவர் ஹூச்சிந்தாவ் வலியுறுத்தினார்.
சீனத் துணை தலைமையமைச்சர் வாங் ச்சி சான் இக்கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கினார். உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குநர் Pascal Lamy, ஐ.நா வர்த்தக மற்றும் வளர்ச்சி மாநாட்டு அமைப்பின் தலைமை இயக்குநர் Supachai Panitchpakdi, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பொறுப்பாளர்கள் ஆகியோரும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.