80 ஆயிரம் இருக்கைகள் உடைய இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கில் இத்துவக்க விழா நடைபெற்றது. பிரிட்டன் ராணி 2வது எலிசபெத், உலக ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜாக்குஸ் ரோக், பிரிட்டன் தலைமையமைச்சர் டேவிட் கேமரூண், ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் ஆகியோர், பிரமாண்டமான இத்துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.
உலக ஒலிம்பிக் கமிட்டியின் 204 உறுப்பு நாடுகள் அனுப்பிய விளையாட்டுக் குழுக்கள், இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்கின்றன. மேலும் 4 விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் நாட்டு அடையாளமின்றி தனித் தகுநிலையில் கலந்து கொள்கின்றனர். சீன விளையாட்டுப் பிரதிநிதிக் குழுவில், மொத்தம் 396 விளையாட்டு வீரர்கள் அடங்குகின்றனர்.