• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
30வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவக்கம்
  2012-07-28 18:38:42  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகக் கவனத்தை ஈர்க்கும் 30வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, 27ஆம் நாள் பிரிட்டனின் இலண்டனில் சிறப்பாகத் துவங்கியது.

80 ஆயிரம் இருக்கைகள் உடைய இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கில் இத்துவக்க விழா நடைபெற்றது. பிரிட்டன் ராணி 2வது எலிசபெத், உலக ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜாக்குஸ் ரோக், பிரிட்டன் தலைமையமைச்சர் டேவிட் கேமரூண், ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் ஆகியோர், பிரமாண்டமான இத்துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

உலக ஒலிம்பிக் கமிட்டியின் 204 உறுப்பு நாடுகள் அனுப்பிய விளையாட்டுக் குழுக்கள், இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்கின்றன. மேலும் 4 விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் நாட்டு அடையாளமின்றி தனித் தகுநிலையில் கலந்து கொள்கின்றனர். சீன விளையாட்டுப் பிரதிநிதிக் குழுவில், மொத்தம் 396 விளையாட்டு வீரர்கள் அடங்குகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040