சர்வதேசச் சமூகத்தின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், அணுக் குண்டுச் சோதனையை வட கொரியா மீண்டும் நடத்தியதை சீனா உறுதியாக எதிர்க்கின்றது என்று சீன வெளியுறவு அமைச்சகம் 12ஆம் நாள் தனது இணையம் முலம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
கொரிய தீபகற்பத்தின் அணு ஆயுதமின்மை, அணு ஆயுதப் பரவல் தடுப்பு, வடக்கிழக்காசியாவின் அமைதி மற்றும் நிதானம் ஆகியவற்றைப் பேணிக்காப்பது சீனாவின் நிலையான நிலைப்பாடாகும் என்று அவ்வறிக்கை கூறியது. அணு ஆயுதமின்மை பற்றி அளித்திருக்கும் வாக்குறுதியை வட கொரியா நிறைவேற்றி, நிலைமையை மேலும் மோசமாக்காமல் தவிர்க்கும் பொருட்டு செயல்பட வேண்டும் என்று சீனா உறுதியாகக் கோருவதாகவும் அறிக்கை கூறியது.