ஏப்ரல் 14ம் நாள் பூஃசியன் மாநிலத்தில் பணி பயணம் மேற்கொண்டிருக்கின்ற சீன வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்பட அறிவிப்பாளர்கள் அடங்கிய பிரதிநிதிக் குழு வூயீ மலை உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரதேசத்தைப் பார்வையிட்டது. குழுவினர்கள் புகழ் பெற்ற வூயீ மலை காட்சியிடங்களை கண்டுரசித்தனர். வளைந்து கொடுக்கும் 9 திருப்புகள் நிறைந்த ஆற்றில் மூங்கில் படகில் சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். இதற்கிடையில் சீனாவில் மட்டுமல்ல உலகிலும் புகழ் பெற்ற டாஹோன்பௌ என்னும் வகை தேயிலை விளையும் மலை குன்று இடங்களில் தேயிலைச் செடிக் காட்சியைக் கண்டு ரசித்தனர். தவிரவும் வூயீ பிரதேசத்தின் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆணையத்தின் தலைவர் zhang quan xin விவரித்த டாஹோன்பௌ என்னும் வகை தேயிலையின் வரலாற்றைக் கேட்டறிந்தனர். அருமையான கதைகள் கொண்டுள்ள வூயீ மலை காட்சியிடங்களை மூங்கில் படகுகளின் மேல் உட்கார்ந்த
வண்ணம் கண்டு ரசித்தனர். இரவு தேயிலைச் செடிகளை பயிரிட்டு வளர்க்கும் விவசாயிகளின் வாழ்க்கையையும் சீனாவின் பண்டைகாலத்தில் டாஹோன்பௌ என்னும் வகை தேயிலையின் உருவாக்கத்தை வர்ணிக்கும் கதையையும் வெளிப்படுத்தும் தேயிலையின் நினைவு என்ற தலைப்பிலான கலைநிகழ்ச்சியை தானியங்கி வளைந்து செல்லும் அரங்கில் உட்கார்ந்து கண்டுரசித்தனர்.
தி. கலையரசி வூயீ மலை உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரதேசத்திலிருந்து இதை அறிவித்துள்ளார்.