தென் சீன கடல் நிலைமையைச் சீர்குலைக்கும் ஜப்பானுக்கு சீனா கடுமையான எதிர்ப்பு
10 ஆண்டுகளுக்கு முன், கூறப்படும் தென் சீனக் கடல் நடுவர் தீர்ப்பு ஆணை வெளியிடப்பட்டது. தற்போது, இதற்கு தொடர்பில்லாத நாடான ஜப்பான், சீனாவின் சட்டப்பூர்வ கருத்துகளைக் குற்றச்சாட்ட முன்வைந்தது. அது, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 14 நாடுகளுடன் கூறப்படும் “கூட்டறிக்கை”யை வழங்கி, தென் சீன கடலில் சீனாவின் வரலாற்று உரிமையை மறுத்துள்ளது. இந்த அசிங்கமான செயல், தென் சீன கடல் பிரச்சினையில் தலையிட்டு, பிரதேச அமைதியைச் சீர்குலைக்கும் ஜப்பானின் தீய நோக்கங்களை வெளிப்படுத்தியுள்ளது. ஜப்பானுக்கு சீனா கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. ஜப்பானின் ஆத்திரமூட்டல் செயல்களுக்கு சீனா தக்க பதிலடி கொடுத்து, சொந்த உரிமைப் பிரதேச இறையாண்மையையும், கடல் உரிமையையும் உறுதியாகப் பேணிக்காக்கும்.
15-Jul-2026