ஐ.நா பற்றிய தகவல் பாஸிசம் எதிர்ப்பு உலகப் போர் வெற்றியின் போது ஐ.நா நிறுவப்பட்டது. 1942ம் ஆண்டின் ஜனவரி திங்கள் முதல் நாள், ஜெர்மன், இத்தாலிய மற்றும் ஜப்பானிய பாசிசத்தின் மீது போரிட்டு கொண்டிருக்கின்ற சீனா, அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் முதலிய 26 நாடுகளின் பிரதிநிதிகள், வாஷிங்டனில் ஐ.நா அறிக்கையை வெளியிட்டனர். 1945ம் ஆண்டின் ஏப்ரல் திங்கள் 25ம் நாள், 50 நாடுகளின் பிரதிநிதிகள், அமெரிக்காவின் சன் பிரான்சிஸ் சோவில் ஐ.நா சர்வதேச அமைப்பின் கூட்டத்தை நடத்தினர்.【மேலும்】
| |
|
|
வரலாற்றுப்பதிவு
- நவ சீனா நிறுவப்பட்ட பின், சீனாவின் தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான சோ அன் லாய், ஐ•நாவின் தலைமைச் செயலாளர், ஐ•நா பொது பேரவையின் தலைவர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு, சீன மக்கள் குடியரசு, சீன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு சட்டப்பூர்வமான அரசு என்பதை உறுதிப்படுத்தினார்.
- 1961ஆம் ஆண்டு, ஐ•நாவில் சீனாவின் பிரதிநிதித்துவ உரிமைப் பிரச்சினையை ஐ•நா பொது பேரவைக் கூட்டத்தின நிகழ்ச்சி நிரல்களில் வைக்க 16வது ஐ•நா பொது பேரவை முடிவு எடுத்தது. 【மேலும்】
| |
|
|
அமைதிக் காப்பு ஐ.நா பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடாக, ஐ.நா சாசனத்திலுள்ள குறிக்கோளுக்கும் கோட்பாட்டுக்கும் சீனா எப்போதும் முக்கியத்துவம் அளித்து ஆதரவு அளிக்கின்றது. அதன் வழிகாட்டலில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கு சீனா ஆக்கமுள்ள பங்காற்றி வருகின்றது.【மேலும்】
| |
|