இந்த அற்புதமான பாதை, திபெத்தில் தொடர்வண்டி வரலாற்றைத் துவக்கியுள்ளது. உள்ளூர் மக்களின் வாழ்க்கை, மேலும் சீராக மாறியுள்ளது. துதங்தொவ்ஜியின் நண்பர்களும் குடும்பத்தினர்களும் அவர் சிங்ஹெய்-திபெத் இருப்புப்பாதையில் வேலை செய்வதில் பெருமை பெறுகின்றனர்.
எனது குடும்பத்தினரும் பெருமை பெறுகின்றனர். நாங்கள் வாழ்கின்ற சிறிய வட்டத்தில் ஒவ்வொருவரும் அறிந்துள்ளனர். எனது மகன் தொடர்வண்டி ஓட்டுகிறார் என்று எனது அம்மா பிறரிடம் பெருமையுடன் கூறியதாக அவர் கூறினார்.
தற்போது சிங்ஹெய்-திபெத் இருப்புப்பாதையில் சுமார் 800 ஓட்டுநர்கள் உள்ளனர். அவர்கள் திபெதிற்கு செழுமையான வாழ்க்கையை கொண்டு வருகின்றனர் இருந்தாலும், இவ்வேலையில் உள்ள கடினம் பற்றி குறைவாகவே அறியப்பட்டுள்ளது. இந்த இருப்புப்பாதை அமைந்துள்ள பிரதேசம், உயர்ந்த கடல் மட்டத்தில் அமைந்துள்ளது. அங்குள்ள இயற்கை நிலையும் மோசமானது. பல ஓட்டுநர்கள் அக்சிஜன் உட்கொண்டுதான் தொடர்வண்டியை ஓட்ட வேண்டும். துதங்தொவ்ஜியின் ஆசிரியர் 37 வயதான லாகாவ்செய்ராங் இத்தகைய அனுபவத்தை பெற்றுள்ளார்.
முன்பு, 4700 மீட்டர் கடல் மட்டத்தில் தொடர்வண்டியை ஓட்டினேன். ஓட்டுநர் அறையில் அக்சிஜன் கலன் உடன் கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.