• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்
  2013-03-11 17:11:52  cri எழுத்தின் அளவு:  A A A   
மார்ச் திங்கள் 8-ஆம் நாள் இடம்பெற்ற நிகழ்ச்சிகளைக் கேட்டேன். இன்றைய, 'செய்தி விளக்கம்' நிகழ்ச்சியில், 'சீன மக்கள் தேசியப் பேரவையின் பணி அறிக்கை' என்ற கட்டுரையைக் கேட்டு மகிழ்ந்தேன். கடந்த 5 ஆண்டுக்காலத்தில், சீன மக்கள் தேசியப் பேரவை ஆற்றிய பங்கு பற்றி மிகவும் சிறப்பான முறையில், அதன் தலைவர் வூபாங்கோவ் அவர்கள் தொகுத்து வழங்கினார். நகரக்கட்டுமானம் பற்றி சில கருத்துக்கள் இடம்பெற்றதை நான் வரவேற்கிறேன். கிராமங்களில் வசிக்கும் பலர், வசதியாக வாய்ப்புக்களுக்காகவும், வருமானத்திற்காகவும் நகரங்களை நோக்கிச் செல்கின்றனர். எனவே, படிப்படியாக, நகரங்களின் மக்கள் தொகை பலமடங்கு பெருகி வருகிறது. எனவே, நகரக் கட்டுமானத்தின் பணியை வலுப்படுத்த வேண்டும் என விரும்புகின்றேன்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040