ஜெயா....... சரி, ஆயத்த பணி முடிந்தது. சமைக்கப் போகிறோம்.
சக்திவேல்.......முதலில், வாணலியில் எண்ணெய்யை ஊற்றி, மிளகை வாணலியில் போட்டு வதக்குங்கள்.
ஜெயா.......மிளகு வாசனை வீசிய போது, வெளியே எடுத்து விடுங்கள்.
சக்திவேல்.......அதற்குப் பிறகு, பச்சை வெங்காயம், இஞ்சி மற்றும் காய்ந்த சிறிய சிவப்பு மிளகாய் துண்டுகள் வாணலியில் போட்டு வதக்குங்கள்.
ஜெயா.......நறுமணம் வரும் போது, உருளைக்கிழங்கு துண்டுகளை வாணலியில் போட்டு வதக்குங்கள்.
சக்திவேல்.......இப்போது, உடனடியாக புளிப்பு சாற்றை ஊற்றி, சுமார் ஒரு நிமிடம் நன்றாக வதக்கிய பிறகு, மிளகாய் மற்றும் உப்பு உள்ளே போடுங்கள்.
ஜெயா.......தொடர்ந்து நன்றாக வதக்கி, பூண்டு துண்டுகளையும், மிளகாய் எண்ணெயையும் போட்டுக் கலக்குங்கள்.
சக்திவேல்....... நன்றாகக் கலந்த பிறகு, தீயை அணையுங்கள்.
ஜெயா....... சரி, இப்போது, புளிப்பு மற்றும் காரம் கலந்த உருளைக்கிழங்கு வறுவல் தயார்.