தியன் ச்சி ஃபாங் இடத்தின் அருகிலுள்ள லெ தியன் மண்பாண்ட பயிலரங்கு, 1985ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. சீனாவில் மிகப் பெரிய மண்பாண்ட கலை மையமாகத் திகழும் அது, தொழில் முறை சார் கலைஞர்களையும் ஆர்வலர்களையும் ஈர்த்து வருகிறது. மொத்தம் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுடைய இந்த பயிலரங்கின் முதல் மாடியில், அதன் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இரண்டாவது மாடியிலுள்ள பணிமனை, மண்பாண்ட பொருட்களின் தயாரிப்பு மற்றும் தொடர்புடைய அறிவுகளைக் கற்றுக்கொள்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மண்பாண்ட பொருட்களின் தயாரிப்புக்காக பல்வேறு இடங்களிருந்து சிறப்பாக தெரிவு செய்யப்பட்ட மண் வகைகள் குறிப்பிட்டத்தக்கவை. ஆர்வம் இருந்தால் அங்கே மண்பாண்ட பொருட்களைச் சுற்றுலா பயணியர்களும் தயாரிக்கலாம்.