• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கென்ய கிரிக்கெட்டின் சரிவு- முன்னாள் வீரர் வருத்தம்
  2016-04-23 16:21:39  cri எழுத்தின் அளவு:  A A A   
கென்ய கிரிக்கெட் வீர்ர்களின் நிறைவேற்றமுடியாத கோரிக்கை, கிரிக்கெட் வாரியத்தில் நடைபெற்ற சண்டைகள், போதிய கட்டமைப்பு வசதி உள்ளிட்ட பல காரணிகள், கென்ய கிரிக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்த்தாக அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஆசிப் கரீம் குற்றம் சாட்டியுள்ளார்.

2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின்போது கென்ய அணி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விளையாடும் அந்தஸ்து பெற்ற இலங்கை, ஜிம்பாப்வே, வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளைத் தோற்கடித்து பிரகாசித்த்து. ஆனால், அதன்பின்னர், ஏற்பட்ட பல குழப்பங்கள் காரணமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியை விளையாடக் கூடிய தகுதியையும் அந்த அணி இழந்தது.

2002ஆம் ஆண்டில், கென்ய அணிக்கு, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அந்தஸ்து அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வங்கதேசத்தை விட கென்ய அணி சிறப்பாகச் செயல்பட்டு வந்தபோதிலும், வங்கதேச அரசு அந்நாட்டு அணிக்கு ஆதரவை அளித்து வந்த்து என்று கரீம் சுட்டிக்காட்டுகிறார்.

தற்போது கென்ய அணி, கீழ்நிலைப் போட்டிகளில் மட்டும் கலந்து கொண்டு வருகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040