14ஆம் நாள் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 100 மீடடர் ஆடவர் ஓட்டப்போட்டியில் ஜமைக்காவின் புகழ்பெற்ற வீரர் போல்ட் 9.81 வினாடிகள் என்ற பதிவில், தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இப்போட்டியின் வெற்றியாளர் பட்டங்களை அவர் தொடர்ந்து 3ஆவது முறையாக பெற்றுள்ளார்.
தவிர, 400 மீட்டர் ஆடவர் ஓட்டப்போட்டியில் தென் ஆப்ரிக்கா வீரர் பெஃன்னிகெக் 43.03 வினாடிகள் என்ற பதிவில், இப்போட்டியின் வெற்றியாளர் பட்டத்தைப் பெற்று, புதிய உலக சாதனையை உருவாக்கியுள்ளார்.