ஆப்பிரிக்காவில் முதலை தனக்கு உணவு கிடைத்து விட்டதாக எண்ணியிருந்தபோது, அதனை தந்திரமான கழுகு ஒன்று தனது தூவிகைகளை வேகமாக சிறிகடித்துக் கொண்டு பறந்து வந்து தட்டிச் சென்றது.
நீர் நிலை ஒன்றில் துள்ளிக் கொண்டிருந்த மீனைக் குறி வைத்து முதலை சென்று கொண்டிருந்தபோது, எங்கிருந்த வந்த பறவை, மீனை தனது கால்களில் பற்றிக் கொண்டு பறந்து சென்று விட்டது. மீனையும் கவ்வ வேண்டும் முதலையிடமும் அகப்படக் கூடாது என்பதில் கழுகு காட்டிய வேகம் அதன் கண்களில் தெரிந்தது. இதனால் ஏமாந்துபோன முதலை வெற்று வாயுடன் திரும்பியது.
சிலிர்க்க வைக்கக் கூடிய இந்த புகைப்படங்கள் தென் ஆப்பிரிக்காவின் க்ருகெர் தேசிய பூங்காவில், Fanie Heymans என்ற புகைப்படக் கலைஞர்களால் எடுக்கப்பட்டது.