ஐ.நாவின் அரசுகளுக்கிடையில் காலநிலை மாற்றத்துக்கான சிறப்பு ஆணையம் வெளியிட்ட 4ஆவது மதிப்பீட்டு அறிக்கையின்படி, மனிதர்களின் செயல்பாடுகளால், காற்றிலுள்ள கரியமில வாயு மற்றும் மீத்தேன் வாயுவின் அளவு கடந்த 2 கோடியே 50 இலட்சம் ஆண்டுகளில் மிக உயர் நிலையில் உள்ளது. பூமியின் மேற்புற வெப்பமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பசுங்கூட விளைவு மனித குலத்தின் வாழ்வு மற்றும் வளர்ச்சிக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.