மொஸி எனும் குவாண்டம் அறிவியல் ஆய்வு செயற்கைக் கோள், 4 திங்கள் நீடித்த சோதனைக்கு பிறகு, ஜனவரி 18ம் நாள் பயன்பாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மொஸி செயற்கைக் கோள், சீனாவில் சொந்தமாக ஆய்ந்து தயாரிக்கப்பட்டுள்ள உலகின் முதலாவது குவாண்டம் அறிவியல் ஆய்வு செயற்கைக் கோள் ஆகும். அது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் நாள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.