இவ்வாண்டு ஏப்ரல் முதல் நாள் தொடக்கம், சீனாவின் இதர பிரதேசங்களுடன் இணைந்து, வெளிநாட்டவர்கள் சீனாவில் வேலை செய்வதற்கு அனுமதி அளிக்கும் அமைப்பு முறையை திபெத் தன்னாட்சி பிரதேசம் நடைமுறைப்படுத்தும்.
புதிய அமைப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு, வெளிநாட்டவர்கள் சீனாவில் வேலை செய்வதற்குரிய அனுமதி சான்று, சீனாவில் வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் அனைவரின் சட்டப்பூர்வ சான்று ஆகும் என்று தெரிய வருகிறது.
தவிர, இதன் மூலம் வெளிநாடுகளைச் சேர்ந்த திறமைசாலிகள் சீனாவுக்கு வருவதற்கு வசதி அளிக்கும் ஒழுங்கு முறை வழங்கப்படும்.
தற்போது, சுமார் 200 வெளிநாட்டவர்கள் திபெத்தில் நீண்டக்காலமாக வேலை செய்து வருகின்றனர். வெளிநாட்டு நிபுணர்களில் பெரும்பாலோர், கல்வி, அறிவியல் ஆய்வு உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர்ந்த வெளிநாட்டவர்களில், தொழில் நுட்பம் மற்றும் நிர்வாகத் திறமைசாலிகள் அதிகம். அவர்கள் பெரும்பாலும் நேபாளம், இந்தியா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.