புமாஜியாங்டாங் பேரூர், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லோகா மாவட்டம், லாங்காஸி வட்டத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5373 மீட்டர் உயரத்தில் இருந்த பேரூர், சீனாவின் மிக உயரமான பேரூர் ஆகும்.
கடுமையான இயற்கைச் சூழல் நிலவிய போதிலும், கடந்த சில ஆண்டுகளாக, இந்த பேரூர், மக்களின் வாழ்க்கைத் தரம், மருத்துவ வசதி ஆகியவை தொடர்ந்து மேம்பட்டு வந்துள்ளன. 2016ஆம், புமாஜியாங்டாங்கில் வாழும் மக்களின் சாரசரி வருமானம், 10ஆயிரத்து 110 யுவானாக பதிவாகியுள்ளது. இதன் கீழுள்ள 6 கிராமங்கள் அனைத்தும், வறிய நிலையிலிருந்து விடுபட்டுள்ளன. திபெத்தில் பல பேரூர் மற்றும் நகர்களில் வறிய நிலையிலிருந்து விடுபட்டுள்ள முதலாவது பேரூர் இது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.