• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இரு கூட்டத்தொடரில் சிறுப்பான்மைத் தேசிய இனங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்பு பற்றி இந்திய நிபுணரின் கருத்து
  2017-03-14 16:03:44  cri எழுத்தின் அளவு:  A A A   
இரு கூட்டத்தொடரில் சிறுப்பான்மைத் தேசிய இனங்களின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களின் பங்கேற்பு பற்றி இந்திய நிபுணர் பங்காஜ் ஸ்ரீவஸ்டாவா கருத்து தெரிவித்தார். அவர் பேசுகையில் சீனாவின் 56 தேசிய இனங்களில் 55, சிறுபான்மைத் தேசிய இனங்களாகும். சீன அரசு, தேசிய இனப் பணியில் எப்போது அதிக கவனம் செலுத்தி வருகிறது. 2017ஆம் ஆண்டின் இரு கூட்டத் தொடரின் காலத்தில், சிறுபான்மைத் தேசிய இனப் பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங்கும், சீன தலைமையமைச்சர் லீக்கெச்சியாங்கும் இதில் கலந்து கொண்டனர் என்று அவர் கூறினார்.

ஷிச்சின்பீங் பேசுகையில், ஓரளவு வசதியான வாழ்க்கை பன்முகங்களிலும் நனவாக்கப்படுவதில், அனைத்து தேசிய இனங்களும் அடங்கும். 2020ஆம் ஆண்டுக்குள் வறிய மக்கள் முற்றிலும் வறுமையிலிருந்து விலகுவதை உத்தரவாதம் செய்ய வேண்டினால், சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசத்தின் வறுமை ஒழிப்புப் பிரச்சினையில் சீனா கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

சீன அரசும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் தேசிய இன ஒற்றுமை மற்றும் தேசிய இனப் பிரதேசங்களின் வளர்ச்சிப் பணியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. எடுத்துக்காட்டாக, பிரதேச வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மேம்பாட்டுடன் தொடர்புடைய அதிகமான மீட்புதவித் திட்டப்பணிகள் திபெத்தில் அடுத்தடுத்து நடைபெற்றுள்ளன. இவை, பழைய திபெத்தை உயிர்ப்பு ஆற்றல் வாய்ந்த புதிய திபெத்தாக மாற்றியுள்ளன என்று பங்காஜ் ஸ்ரீவஸ்டாவா கூறினார். (ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040