பிரிட்டனின் நடப்பு நாடாளுமன்றம் 3ம் நாள் அதிகாலை அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. வரும் ஜுன் 8ஆம் நாள் நடைபெறும் பொதுத் தேர்தல் போட்டி துவங்குவதை இது குறிக்கிறது.
பிரிட்டனில் கடந்த பொதுத் தேர்தல் 2015ஆம் ஆண்டு நடைபெற்றது. திட்டமிட்டப்படி, அடுத்த தேர்தல் 2020ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டும். ஆனால், பொதுத் தேர்தலை முன்னதாகவே நடத்த விரும்புவதாக பிரிட்டன் தலைமை அமைச்சர் தெரேசா மே கடந்த ஏப்ரலில் எதிர்பாராத வகையில் அறிவித்தார். அதன் மூலமாக, பொது மக்களது ஆதரவைப் பெற்ற பிறகே, புதிய அரசு, பிரிட்டனின் சார்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது குறித்து பேச்சுவார்த்தையில் மேலும் சிறப்பாக செயல்படும் என்று கருதப்படுகிறது.