சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 7ஆம் நாள் சிறப்பு விமானம் மூலம் கசகஸ்தானின் தலைநகர் அஸ்தானாவைச் சென்றடைந்தார். அந்நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொள்தோடு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் செயற்குழுவின் 17ஆவது கூட்டத்திலும் அஸ்தானா உலகப் பொருட்காட்சியின் துவக்க விழாவிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், இது எனது மூன்றாவது கசகஸ்தான் பயணமாகும். சீன-கசகஸ்தான் பன்முக தொலைநோக்குக் கூட்டாளியுறவை மேலும் உயர் நிலைக்குக் கொண்டு வர விரும்புகின்றேன் என்று தெரிவித்தார்.