சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் 8ஆம் நாள், அஸ்தானாவில், ரஷிய அரசுத் தலைவர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஒரு மண்டல மற்றும் ஒரு பாதை சர்வதேச ஒத்துழைப்பு உச்சிமாநாடு கருத்தரங்கின் போது, சீனாவும் ரஷியாவும் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை உயர் நிலையில் இயங்குவதை நிலைநிறுத்தி, இரு நாடுகளின் முழுமையான ஒத்துழைப்புக்கான பொது கருத்துக்களை வலுப்படுத்தும் என்று இரு தரப்பினரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். இரு தரப்புறவு சீராக வளர்வது, இரு தரப்புகளின் வளர்ச்சி, உலகின் அமைதி மற்றும் நிதானத்திற்கு மிகவும் முக்கியமானது என்று ஷிச்சின்பீங் தெரிவித்தார்.
இரு தரப்புகளின் உயர் நிலை பரிமாற்றம் மிகவும் முக்கியம். தற்போதைய சிக்கலான சர்வதேச நிலைமையைச் சமாளித்து, இரு தரப்பும் பரிமாறிகொள்ள அதிகரிக்க வேண்டும். உலக மற்றும் பிரதேசங்களின் அமைதி, நிதானம் மற்றும் பாதுகாப்பை இரு நாடுகளும் பேணிக்காக்க வேண்டும் என்று புதின் தெரிவித்தார்.(சரஸ்வதி)