கசகஸ்தானின் அஸ்தானா உலகப் பொருட்காட்சியின் துவக்க விழா 9ஆம் நாளிரவு நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் ஆகியோர் இத்துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.
சர்வதேச கண்காட்சி ஆணையத்தின் தலைவர் ஸ்டீன் கிரைசென்சென் துவக்க விழாவில் உரை நிகழ்த்துகையில், பல்வேறு நாடுகளின் தொடரவல்ல வளர்ச்சி, எரியாற்றலுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது என்றும், அஸ்தானா உலகப் பொருட்காட்சியை நடத்துவதன் மூலம், எதிர்கால எரியாற்றல் வளர்ச்சி மற்றும் பயன்பாடு மீதான பன்னாடுகளின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்தார்.