ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர் செயற்குழுவின் 17ஆவது கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் ஜூன் 8, 9 ஆகிய நாட்களில் கலந்து கொண்டனர். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சரின் உதவியாளர் லீ குவெய் லாய் 9ஆம் நாள் அஸ்தானாவில் பேசுகையில், அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் பன்னாட்டுத் தலைவர்களுடன் இணைந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சி நிகழ்வு, கடமை மற்றும் எதிர்காலம், சர்வதேச மற்றும் பிரதேச முக்கிய பிரச்சினைகள் ஆகியவை பற்றி ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, பொதுக் கருத்துக்களுக்கு வந்தார் என்றும் தெரிவித்தார்.
அடுத்த காலக் கட்டத்தில், இவ்வமைப்பின் தலைவர் பதவி வகிக்கும் நாடு என்ற கடமையை உணர்வுபூர்வமாக கடைப்பிடித்து, இதர ஏழு உறுப்பு நாடுகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து, ஒத்துழைப்புக்கான உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணர்ந்து, ஒத்துழைப்பு துறைகளை விரிவாக்க வேண்டும் என்றும், பிரதேச பாதுகாப்பு மற்றும் நிதானத்தைப் பேணிக்காத்து, கூட்டு வளர்ச்சி மற்றும் செழுமையை விரைவுபடுத்தும் பொது லட்சியத்தில் இவ்வமைப்பு மேலதிக பங்காற்றுவதைத் தூண்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். (மீனா)