சாய்ஹோங் அல்லது வானவில் என அழைக்கப்படும் சீனாவிலேயே தயாரிக்கப்பட்ட சூரிய ஆற்றலால் இயங்கும் புதிய ரக ஆளில்லா விமானம், அண்மையில் தரையில் இருந்து வானில் 20 கி.மீ முதல் 100 கி.மீ உயரத்தில் பறக்கும் பரிசோதனை அண்மையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனை அடுத்து, இந்தத் தொழில் நுட்பத்தை கொண்டுள்ள 3ஆவது நாடாக சீனா மாறியுள்ளது.
சூரிய ஒளி சக்தியில் இயங்கும் இந்த ஆளில்லா விமானம், வானில் பல மாதங்கள் பறக்கும் திறன் கொண்டது. மேலும், வானில் 20,000 மீட்டருக்கும் மேலான உயரத்திலும் அதனால் பறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.