சீனச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரி லீ கான்ஜீ இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கி உரை நிகழ்த்துகையில்,
தற்போது, காலநிலை மாற்றம், உயிரின வாழ்க்கைச் சூழல் பின்போக்கு, மூலவள நெருக்கடி, பெரிய இயற்கை சீற்றம் ஆகிய உலகளாவிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. பிரிக்ஸ் நாடுகளுக்கிடையேயான சுற்றுச்சூழல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களிடையேயான சந்திப்பில் சாதனைகளை அதிகரிக்கும். பரிமாற்றத்தையும் பேச்சுவார்த்தையையும் அதிகரித்து, உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளைச் சமாளிக்கும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து, சர்வதேச சுற்றுச்சூழலின் தொடரவல்ல வளர்ச்சித் துறையில் பிரிக்ஸ் நாடுகளின் கருத்துரிமை மற்றும் செல்வாக்கை மேம்படுத்த விரும்புவதாக கூறினார்.