இந்தோனேசியாவில் சீன இருப்புப்பாதை குழு லிமிடேட் பொறுப்பேற்கும் ஜக்கார்த்தா-பாண்டுங் இருப்புப் பாதையில் வலீனி சுரங்கப் பகுதிக் கட்டுமானத்தின் துவக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அந்நாட்டின் அரசுச் சார் தொழில் நிறுவனத் துறை அமைச்சர் ரினி சொயிமானொ இதில் கலந்து கொண்டு பேசுகையில், சீனத் தொழில் நிறுவனத்தின் கட்டுமான தரத்தின் மீது முழு நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜக்கார்த்தாவையும் அந்நாட்டில் 4ஆவது பெரிய நகரான பாண்டுங்கையும் இணைக்கும் இந்த இருப்புப்பாதையின் முழு நீளம் 142 கிலோமீட்டர். இது பயன்பாட்டுக்கு வந்த பிறகு இவ்விரு நகரங்களுக்கிடையிலான பயண நேரம் முன்தைய 3க்கு அதிகமான மணியிலிருந்து 40 நிமிடமாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. (வாணி)