ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் அல்சி சுதந்திர காப்பாளர் எனும் கூட்டு ராணுவப் பயிற்சியை தென் கொரியா மற்றும் அமெரிக்கப் படைகள் 21ஆம் நாள் துவக்கின.
நடப்பு ராணுவப் பயிற்சியில் 50 ஆயிரம் தென் கொரியப் படைவீரர்களும். 17 ஆயிரத்து 500 அமெரிக்கப் படைவீரர்களும் கலந்து கொள்கின்றனர். அமெரிக்கப் படைவீரர்களின் எண்ணிக்கை 2016ஆம் ஆண்டில் இருந்ததை விட 7500ஆக குறைந்துள்ளது என்று தென் கொரிய செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.
தற்காப்பு தன்மையுடைய நடப்பு ராணுவப் பயிற்சியில், வயல் பயிற்சி பகுதி இல்லை. நடப்பு ராணுவப் பயிற்சி 21 முதல் 31ஆம் நாள் வரை நடைபெறும். தென் கொரியாவின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்வது, பயிற்சியின் நோக்கமாகும் என்று தென் கொரியத் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். (மீனா)