அமெரிக்க அரசுத் தலைவர் டோனல்ட் டிரம்ப் 21ஆம் நாள் ஆப்கான் மீதான அமெரிக்காவின் புதிய கொள்கையை வெளியிட்டார். தற்போதைய காலக்கட்டத்தில் அமெரிக்கா படையை ஆப்கானிலிருந்து வெளியேறாது என்றும், பயங்கரவாதத்தை ஒடுக்குவதை எதிர்காலத்தின் முக்கிய இலக்காக கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆப்கான் அரசுத் தலைவர் மாளிகை 22ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா வெளியிட்ட இப்புதிய கொள்கைக்கு வரவேற்பு தெரிவித்தது. இப்புதிய கொள்கை ஆப்கானின் பாதுகாப்பு ஆற்றலை அதிகரித்து, நாட்டின் நிதானத்தை மேலும் பேணிகாக்கும் என ஆப்கான் அரசுத் தலைவர் கானி தெரிவித்தார்.
ஆப்கான் அரசியல் நிபுணர் அதிகுலா பேசுகையில், ஆப்கான் மீதான அமெரிக்காவின் புதிய கொள்கை, குறுகிய காலத்துக்குள் ஆப்கானின் பன்முக நிலைமையை மாற்ற முடியாது என்றும், ஆப்கான் நாட்டில் பல்வேறு பிரிவுகளுக்கிடையேயான அரசியல் நல்லிணக்கத்தை நனவாக்குவது அவசிய கடமையாகும் என்று கருத்து தெரிவித்தார்.
தவிர, அமெரிக்கப் படை ஆப்கானில் நிறுத்தப்பட்டால்தான், தொடர்ந்து போராட முடியும் என்று ஆப்கானிலுள்ள தாலிபான் இயக்கம் 22ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. (மீனா)