• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிரியாவில் பன்னாட்டு ஒன்றியத்தின் தாக்குதலில் அப்பாவி மக்களின் உயிரிழப்பு
  2017-08-23 14:17:14  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த சில நாட்களில், அமெரிக்காவின் தலைமையிலான பன்னாட்டு கூட்டணி, சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கும் அதிகமான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர் என்று சிரியா செய்தி நிறுவனம் 22ஆம் நாள் தெரிவித்தது.

கடந்த 24 மணி நேரத்துக்குள், வட சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் வலுவிடமான அர் ராகா நகரின் பல குடியிருப்புப் பிரதேசங்கள் மீது பன்னாட்டு ஒன்றியம் தீவிர தாக்குதல் நடத்தியது. இதில் 78 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.  
முன்னதாக பன்னாட்டு ஒன்றியம் வட கிழக்கு சிரியாவின் அல் ஹாசாக் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் மீது வான் தாக்குதல் நடத்தியது. இதில் மகளிரும், குழந்தைகளும் உள்ளிட்ட 20 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040