• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்காவுக்கு ஐ.நாவின் வேண்டுகோள்
  2017-08-24 16:45:31  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இனவெறி தொடர்பான கருத்து மற்றும் செயல்களை அமெரிக்கா நிபந்தனையின்றி உறுதியாக மறுத்துக் கண்டிக்க வேண்டும் என்றும், இவை தொடர்ந்து அமெரிக்காவில் பரவி வருவதற்கான காரணத்தைக் கண்டறிந்து இப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றும் ஐ.நாவின் இனப் பாகுபாடு ஒழிப்பு கமிட்டி 23ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அண்மையில் அமெரிக்காவில் ஏற்பட்ட இனவெறி ஆர்ப்பாட்டங்கள் குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்திய அதேவேளையில், இனவெறியும், வெள்ளைக்காரர்கள் முதன்மை என்ற சிந்தனையும் மனித உரிமை தொடர்பான முக்கிய விதிகளை மீறியுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட எந்த இடமும் இத்தகைய கருத்து மற்றும் செயலுக்கான புகலிடமாக மாறக் கூடாது என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040