இந்த புதிய ஆய்வின் முடிவு, பழச்சாறு பருகுவது சாலசிறந்தது என்ற பொது மக்களின் நம்பிக்கைக்கும், தொழில்முறை சுகாதார அலவலர்களின் பொதுவான பார்வைக்கும் மாறுபட்டிருப்பதை ஆய்வாளர்கள் அநியவந்தனர். எனவே, தொடர்ந்து பழச்சாறு குடிப்பதும், பிற இனிப்பான சாறுகள் குடிப்பதும் உடல் நலத்திற்கு மோசமே.
மிகவும் இயலாத நிலையில் ஒருவர் இருக்கும்போது பழச்சாறு கொடுப்பதில் தவறில்லை தான். ஆனால், ஒருவரால் நன்கு மென்று பழத்தை சாப்பிட முடியும் என்ற நிலையில் இருந்தால், அவருக்கு பழச்சாறு தேவையில்லை. பழத்தை சாப்பிடும்போது, ஒரு வகையில் வாய் சுத்தம் செய்யப்படுகிறது. செரிமான உறுப்புகளுக்கு எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவுப் பொருட்கள் கிடைக்கிறது. பழங்களிலுள்ள நார்சத்தும், சர்க்கரையும் சேர்ந்தே கிடைக்கிறது.