பழச்சாறு போடும்போது பழத்திலுள்ள சர்க்கரையை தவிர, சுவையாக இருக்க நாம் சேர்க்கின்ற சர்க்கரையும் சேர்ந்து மிகவும் அதிகமாகி விடுகிறது. அதிக சர்க்கரை அளவு உடல்நலத்தில் சிக்கல்களையே தோற்றுவிக்கும்.
சிறிய குழந்தைகளுக்கு பழச்சாறு கொடுக்க பழகிவிட்டால், பிறகு பழங்களை கடித்து சாப்பிட அவர்கள் விரும்புவதில்லை. எனவே, பல் முளைத்தவுடன், குழந்தைகளுக்கு பழங்களை சிறிதாக அரிந்து கடித்து உண்ண வைப்பதே மிகவும் நல்லது.