年三十:பண்டைகால செவிவழி கதைகளில் நியன், ஒரு பேய். ஒவ்வோர் ஆண்டின் கடைசி நாளின் இரவில், நியன் என்ற பேய், வெளியே வந்து, குழந்தைகளை சாப்பிடும். நியன் பட்டாசு ஒலி கேட்டும் சிவப்பு நிறத்தைக் கண்டும் பயம் கொள்ளும். இதனால் மக்கள், அந்த நாளுக்கு முன், வீட்டின் கதவு மீது சில சிவப்பு தாள்களை ஒட்டுவர். தவிரவும், பட்டாசு வெடிப்பர். அப்படி இருந்தால், நியன் என்ற பேய் வராது என்பது நம்பிக்கை.
இது ஒரு செவிவழி கதை மட்டும். உண்மையா இல்லையா யாருக்கும் தெரியவில்லை. ஆனால், இந்த பழக்கம் அதிக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது ஒவ்வோர் ஆண்டின் கடைசி நாளின் இரவில், மக்கள் பட்டாசு வெடித்து, கதவின் மீது சில நல்ல அர்த்தமான சொற்களுடைய சிவப்பு தாளை ஒட்டுவர். குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி விட்டு, பெரும் விருந்தை உண்டு மகிழ்வர். இந்த விருந்து வசந்த விழாவின் மிக முக்கிய அம்சமாகும். இவ்விரவில் மக்கள் தூங்காமல், புதிய ஆண்டை வரவேற்பார்கள். இவ்வாண்டின் பிப்ரவரி 18ஆம் நாள், சீன சந்திர நாட்காட்டியின் கடைசி நாள். எல்லா முக்கிய பெருமளவான கொண்டாட்டம் அன்று முதல் துவங்கும்.