வங்களத்தேசத் தலைநகரான டாகாவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பிப்ரவரி 16 ஆம் நாள் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி, 270 ரன் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது. துவக்க ஆட்டக்காரரான தவான், சிறப்பாக ஆடி, சதம் அடித்து, தொடரின் முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்திய அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 425 ரன் எடுத்து புதிய சாதனை படைத்தது.
மற்றொரு போட்டியில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, கனடா அணியை எதிர்த்து விளையாடியது. முதலில், களமிறங்கிய கனடா 45.1 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும், இழந்து 164 ரன் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 28.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்தது.
தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டு வித்தியாசத்தில் உகாண்டா அணியை வென்றது.
|