அமெரிக்காவிலிருந்து திரும்பிய கூடைப் பந்து வீரர்
அமெரிக்காவில் 3 ஆண்டுகளாக NBA போட்டியில் கலந்து கொண்ட கூடைப் பந்து வீரர் பாத்ர், இன்று காலை பெய்ஜிங் திரும்பினார்.இவ்வாண்டு சீன கூடைப் பந்து போட்டியில் கலந்து கொள்ள அவர் திரும்பினார். பெய்ஜிங் கிங் ஓர் அணியில் அவர் மீண்டும் சேர்வார்.சீன கூடைப் பந்து போட்டியில் (CBA) முழு போட்டி காலத்தில் ஈடுபடலாம் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.இந்தப் போட்டில் அடுத்த வாரம் துவங்கும். அவருடைய வருகை சிங் ஓர் அணிக்கு புத்துயிர் வழங்கியது. பாதரின் உடல் நிலை இப்போது மிகவும் நலமானது. அதிக உயர் நிலை போட்டிகளில் கலந்து கொண்டுள்ள அவர், தொழில் நுட்பத்தில் பிரச்சினை ஒன்றும் இல்லை என்று அவருடைய தரகன் கூறுகின்றார்.ஆனால், கடந்த போட்டி காலத்தை போல், பாதர் எமது அணியின் மைய வீரராக இருக்கவில்லை. அணியின் புதிய நிலைமைக்கேற்ப அவர் போட்டியிட வேண்டும் என்று கிங் ஓர் அணியின் பயிற்சியாளர் மி லு லாய் கூறுகின்றார்.
|