பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று சில வெளிநாடுகளின் அரசியல் தலைவர்களும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் நேற்று விருப்பம் தெரிவித்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கு பொறுப்பான உயர் நிலை பிரதிநிதி சொலானா, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்குவதற்கு முன், சீன வெளியுறவு அமைச்சர் யாங் ச்சே ச்சிக்கு வாழ்த்துக் கடிதத்தை வழங்கினார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று அவர் தனது கடிதத்தில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீன-ஐரோப்பிய ஒன்றிய கூட்டாளி உறவின் புதிய துவக்கமாகும். எதிர்காலத்தில் இரு தரப்பும் மேலதிகமான அறைகூவல்களை கூட்டாக எதிர்கொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீனா மற்றும் சர்வதேசச் சமூகத்தின் அமைதிக்கும், நிதானத்துக்கும், செழுமைக்கும் பங்காற்றும் தனது விருப்பம் மற்றும் ஆற்றலைக் காட்டும் மேடையாக மாற முடியும் என்று எதிர்பார்ப்பதாக ஜப்பானிய தலைமையமைச்சர் Fukuda Yasuo குறிப்பிட்டார். சீனச் செய்தியாளருக்குப் பேட்டியளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, வரலாற்றில் மிக வெற்றிகரமான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாக அமையும் என்று பெய்ஜிங்கில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவைக் கண்டுகளிக்க வருகை தரும் வனுவாட்டு அரசுத் தலைவர் kalkot mataskelekele பேட்டியளிக்கும் போது கூறினார்.
|