ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீனாவை மேலும் சிறந்ததாக மாற்றுகிறது. அதே வேளையில், அது, உலகிற்கு சீனாவை மேலும் நன்றாகப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Jacques Rogge தெரிவித்தார். நேற்று ஒலிம்பிக் முக்கியச் செய்தி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலகின் பல்வேறு நாடுகளின் மக்களை சீனா என்ற தலைசிறந்த நாட்டையும் ஐந்தாயிரம் ஆண்டுகால அதன் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டையும் காணச் செய்கிறது. இது, சீனா மீதான உலகின் கருத்தை மாற்ற முடியும் என்று அவர் கூறினார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணியை, அவர் வெகுவாகப் பாராட்டினார். அத்துடன், சுற்றுச்சூழல் மாசுபாட்டுக் கட்டுப்பாட்டில் சீன அரசு மேற்கொண்டுள்ள முயற்சியையும் அவர் பாராட்டினார். சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, சீன அரசு, இயன்ற அளவில், அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. மரம் நடுதல் காடு வளர்ப்பு, கார் புகை மாசின் வெளியேற்ற வரையறையை உயர்த்துவது, புதிய ரக எரியாற்றலைப் பயன்படுத்துவது முதலியவை, இந்த நடவடிக்கைகளில் அடங்கும். தற்போது, மாசுபாட்டுக் கட்டுப்பாட்டுப் பணி, அதிகமான சாதனைகளைப் பெற்றுள்ளது. பெய்ஜிங்கின் தற்போதைய சுற்றுச்சூழல், விளையாட்டு வீரர்களைப் பொறுத்த வரை, பாதுகாப்பாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
|