தற்போது, ஒலிம்பி்க் விளையாட்டுப் போட்டிக்கான அனைத்து தன்னார்வத் தொண்டர்களும் முழுமையாக தமது சேவைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தொடர்புடைய வாரியங்களிலிருந்து கிடைத்த தகவல் கூறியது.
தற்போது, பெய்சிங்கில் 1900க்கு அதிகமான தன்னார்வ மருத்துவ சிகிச்சை நிலையங்கள் நகரவாசிகள் மற்றும் பயணிகளுக்கு சேவை வழங்கி வருகின்றன. மொத்தம் 70ஆயிரத்துக்கு மேலான செஞ்சிலுவைத் தன்னார்வத் தொண்டர்கள் விளையாட்டுப் போட்டிக்கான சேவைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|