சீனத் தலைவர்கள் அண்மையில் மேற்கொண்ட பல தூதாண்மை நடவடிக்கைகள், உலகின் நிதானமான வளர்ச்சிக்கு குறிப்பாக தற்போதைய நிதி நெருக்கடியை கூட்டாக சமாளிப்பதற்கு மிகவும் முக்கியத்தும் வாய்ந்தாக அமைந்தது என்று இந்திய அமைதி ஆய்வகத்தின் உயர் ஆய்வாளர் J.T. ஜேக்கப் கூறினார். அண்மையில், சீன வானொலி செய்தியாளருக்கு பேட்டி அளித்தபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சீனா, உலக நிதானத்திற்கான தூதாண்மை கொள்கையை மேற்கொண்டு வருகிறது. இது, 1959ம் ஆண்டு அப்போதைய சீன தலைமை அமைச்சர் சோ ஏன்லாய்யும் இந்திய தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேருவும் கூட்டாக முன்வைத்த பஞ்ச சீல கோட்பாடுகளிலிருந்து வந்தது. கிழக்கு நாடுகளின் அறிவுத்திறமை வாய்ந்த அமைதியை கொணரும் நிதானமான வளர்ச்சிக் கொள்கையின் வெற்றியை மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை, காலம் நிரூபித்துள்ளதாக, ஜேக்கப் குறிப்பிட்டார்.
|