வென்ச்சுவான் நிலநடுக்கத்தின் ஓராண்டு நினைவு நடவடிக்கை
cri
சிச்சுவான் வென்ச்சுவான் நிலநடுக்கத்தின் ஓராண்டு நினைவு நடவடிக்கை, மே 12ம் நாள் பிற்பகல், இந்நிலநடுக்கத்தின் மையத்தில் அமைந்த yingxiu மாவட்டத்தில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவும் பல்வேறு துறையின் பிரதிநிதிகளும் இந்நடவடிக்கையில் கலந்து கொண்டனர். 2008ம் ஆண்டின் மே 12ம் நாள், சீன சிச்சுவான் மாநிலத்தின் வென்ச்சுவானில் ரிக்டர் அளவு கோலில் 8ஆக பதிவான கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தது. கடந்த ஓராண்டில், மறுசீரமைப்புப் பணி விரைவாக முன்னேறி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மற்றும் உற்பத்திப் பணி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
|
|